முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.1.திருவிடைவாய்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.1.திருவிடைவாய்
3.1.திருவிடைவாய்
------
திருச்சிற்றம்பலம்
------
திருச்சிற்றம்பலம்
இப்பதிகம் 1917 இல் திருவிடைவாய்க் கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது.
4148 | மறியார்
கரத்தெந்தை யம்மா துமையோடும் பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர் பொறிவாய் வரிவண்டு தன்பூம் பெடைபுல்கி வெறியார் மலரில் துயிலும் விடைவாயே |
3.1.1 |
மானைக் கரத்தில் ஏந்திய எந்தையாகிய பெருமான் உமையம்மையோடு பிரியாதவராய் உறையும் இடம், புள்ளிகளை உடைய இசைவண்டு, தன் பெண் வண்டைக்கூடி, மணம் பொருந்திய மலரில் துயிலும், திருவிடைவாய் என்பர். பிரியாத என்பது எதுகை நோக்கி வல்லெழுத்தாகத் திரிந்தது.
4149 | ஒவ்வாத
என்பே யிழையா வொளிமௌலிச் செவ்வான் மதிவைத் தவர்சேர் விடமென்பர் எவ்வா யிலுமே டலர்கோ டலம்போது வெவ்வா யரவம் மலரும் விடைவாயே |
3.1.2 |
யாவரும் ஏலாத என்பையே மாலையாகப் பூண்டு இளம்பிறையைச் சிவந்த ஒளி பொருந்திய சடைமுடிம
4150 | கரையார்
கடல்நஞ் சமுதுண் டவர்கங்கைத் திரையார் சடைத்தீ வண்ணர்சேர் விடமென்பர் குரையார் மணியுங் குளிர்சந் தமுங்கொண்டு விரையார் புனல்வந் திழியும் விடைவாயே |
3.1.3 |
கரையின் கட்டுப்பட்டிலடங்கிய கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவரும், கங்கையாற்றைச் சூடியவரும், தீவண்ணருமாகிய சிவபெருமானது இடம், ஒலிக்கும் நவமணிகளையும் சந்தன மரங்களையும் கொண்டு விரைந்து வரும் ஆற்றின் நீர் நிறையும், திருவிடைவாய் என்பர்.
4151 | கூசத்
தழல்போல் விழியா வருகூற்றைப் பாசத் தொடும்வீ ழவுதைத் தவர்பற்றாம் வாசக் கதிர்ச்சா லிவெண்சா மரையேபோல் வீசக் களியன் னமல்கும் விடைவாயே |
3.1.4 |
கண்டார் கண்கூசுமாறு தழல் போல் விழித்து வந்த கூற்றுவனை, பாசக் கயிற்றோடும் உதைத்த சிவபெருமானது இடம், மணம் பொருந்திய கதிர்களை உடைய நெற்பயிர் வெண்சாமரை போலவீச, அன்னம் மகிழ்வோடு உடையும் திருவிடைவாய் என்பர்.
4152 | திரியும்
புரமூன் றையுஞ்செந் தழலுண்ண வெரியம் பெய்தகுன் றவில்லி யிடமென்பர் கிரியுந் தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல் விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே |
3.1.5 |
வானகத்தே திரிந்த திரிபுரங்கள் செந்தழலுண்ணுமாறு அம்பெய்த, குன்றவில்லியாகிய சிவபெருமானது இடம், மலை போன்ற மாளிகைகளின் சூளிகைகளில் கட்டப்பெற்று விரிந்தசையும் கொடிகள் வானவரை அழைப்பது போலசையும் திருவிடைவாய் என்பர்.
4153 | கிள்ளை
மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத் தள்ளித் தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம் வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய் வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே |
3.1.6 |
சிவபெருமானை
4154 | பாதத்
தொலிபா ரிடம்பாட நடஞ்செய் நாதத் தொலியர் நவிலும் இடமென்பர் கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு வேதத் தொலியும் பயிலும் விடைவாயே |
3.1.7 |
தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.
4155 | எண்ணா
தஅரக் கனுரத் தைநெரித்துப் பண்ணார் தருபா டலுகந் தவர்பற்றாங் கண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும் விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே |
3.1.8 |
தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.
4156 | புள்வாய்
பிளந்தான் அயன்பூ முடிபாதம் ஒள்வான் நிலந்தே டும்ஒரு வர்க்கிடமாந் தௌவார் புனற்செங் கழுநீர் முகைதன்னில் விள்வாய் நறவுண் டுவண்டார் விடைவாயே |
3.1.9 |
திருமால் பிரமன் ஆகியோர், அடியையும் முடியையும் நிலத்திலும் வானத்திலும் சென்று தேடுமாறு, உயர்ந்து நின்ற ஒப்பற்ற சிவபெருமானுக்குரிய இடம், தௌந்த நீரோடைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களில் உள்ள தேனை, வாய்திறந்து உண்டு வண்டுகள் பாடும் திருவிடைவாய் என்பர்.
4157 | உடைஏ
துமிலார் துவராடை யுடுப்போர் கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர் அடையார் புரம்வே வமூவர்க் கருள்செய்த விடையார் கொடியான் அழகார் விடைவாயே |
3.1.10 |
ஆடையின்றியும் துவராடை உடுத்தும் திரியும் சமண புத்தர்களால் அறிய முடியாத, மேலான சைவநெறிக்குரிய அப்பெருமான் விரும்பி உறையும் இடம், வானில் இயங்கிய திரிபுரங்களை அழித்து அவற்றின் தலைவர்களாய மூன்று அசுரர்ளுக்கு அருள் செய்த விடைக் கொடியுடையவனாகிய சிவபெருமானது அழகிய திருவிடைவாய் என்பர்.
4158 | ஆறும்
மதியும் பொதிவே ணியானூரா மாறில் பெருஞ்செல் வம்மலி விடைவாயை நாறும் பொழிற்கா ழியர்ஞா னசம்பந்தன் கூறுந் தமிழ்வல் லவர்குற் றமற்றோரே |
3.1.11 |
கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடிய சடைமுடியை உடைய சிவபெருமானது ஊராகிய செல்வம் நிறைந்த திருவிடைவாயை, பொழில் சூழ்ந்த காழியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்தமிழ் மாலையை ஓதி வழிபட வல்லவர் குற்றமற்றவராவர்.
திருச்சிற்றம்பலம்
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிடைவாய் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவிடைவாய், விடைவாயே, என்பர், சிவபெருமானது, பொருந்திய, இடமென்பர், உறையும், துவராடை, இடமகன்ற, கேட்டு, யாழிசை, கூட்டிப், வீதிகள், திருவிழாக், விண்ணவர்களும், வந்திறைஞ்சும், சிறப்பினதாகிய, பண்ணோடு, காலங்களில், தோறும், மதியாத, துயிலும், விடமென்பர், மலரில், திருச்சிற்றம்பலம், திருமுறை, தோன்றிய, திரியும், வலிமையைக், இராவணனது, கெழுமும், நடஞ்செய், கெடுத்து