முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.090.திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.090.திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
3.090.திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
3767 | ஓங்கிமே
லுழிதரு மொலிபுனற் தாங்கினா ரிடுபலி தலைகல பாங்கினா லுமையொடு பகலிடம் வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் |
3.090.1 |
சிவபெருமான், மேன்மேலும் ஓங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர். இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர். முறைப்படி, பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும், நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர். அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடிஎன்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
3768 | தூறுசேர்
சுடலையிற் சுடரெரி நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் நாறுசாந் திளமுலை யரிவையோ வீறுசேர் துருத்தியா ரிரவிடத் |
3.090.2 |
சிவபெருமான், புதர்ச்செடிகள் நிறைந்த சுடுகாட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர். விளங்கும் ஒளியுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர். வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர். மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள் வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர். இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருள்பவர்.
3769 | மழைவள
ரிளமதி மலரொடு கழைவளர் புனல்புகக் கண்டவெங் இழைவளர் துகிலல்கு லரிவையோ விழைவளர் துருத்தியா ரிரவிடத் |
3.090.3 |
குளிர்ச்சியான இளம்பிறையும், கொன்றை, ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது, கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர். அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடையணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில், மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார். அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார்.
3770 | கரும்பன
வரிசிலைப் பெருந்தகைக் சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் அரும்பன வனமுலை யரிவையொ விரும்பிடம் துருத்தியா ரிரவிடத் |
3.090.4 |
இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகையாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர். வண்டுகள் மொய்க்கும், தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர். அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமா தேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும்.
3771 | வளங்கிளர்
மதியமும் பொன்மலர்க் களங்கொளச் சடையிடை வைத்தஎங் துளங்குநூன் மார்பின ரரிவையொ விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் |
3.090.5 |
அழகு மிளிரும் சந்திரனும், பொன் போன்ற கொன்றைமலரும், வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய, நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர். அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர். அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார்.
3772 | பொறியுலா
மடுபுலி யுரிவையர் நெறியுலாம் பலிகொளு நீர்மையர் மறியுலாங் கையினர் மங்கையொ வெறியுலாந் துருத்தியா ரிரவிடத் |
3.090.6 |
சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர். நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர். பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்டதன்மையர். இத்தகைய எளிமை உடையவர் ஆயினும், எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர். மான்கன்று ஏந்திய கையினர். அத்தகைய பெருமான் உமா தேவியாரோடு பகலில் நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத் தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார்.
3773 | புரிதரு
சடையினர் புலியுரி திரிதரு மியல்பினர் திரிபுர வரிதரு வனமுலை மங்கையொ விரிதரு துருத்தியா ரிரவிடத் |
3.090.7 |
சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர். புலியின் தோலை அரையில் உடுத்தவர். திருவெண்நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர். திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர். சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத் துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார்.
3774 | நீண்டிலங்
கவிரொளி நெடுமுடி கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ பூண்டநூன் மார்பின ரரிவையொ வேண்டிடந் துருத்தியா ரிரவிடத் |
3.090.8 |
நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன் என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான். அவர் பூணூல் அணிந்த திருமார்பினர். அவர் உமாதேவியோடு பகலில், விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார்.
3775 | கரைகட
லரவணைக் கடவுளுந் குரைகழ லடிதொழக் கூரெரி வரைகெழு மகளொடும் பகலிடம் விரைகமழ் துருத்தியா ரிரவிடத் |
3.090.9 |
ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை, செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான். அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
3776 | அயமுக
வெயினிலை யமணருங் நயமுக வுரையினர் நகுவன கயலன வரிநெடுங் கண்ணியொ வியனகர்த் துருத்தியா ரிரவிடத் |
3.090.10 |
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும், குண்டர்களாகிய புத்தர்களும், இன்முகத்தோடு நயமாகப் பேசி, நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள். ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர். கயல்மீன் போன்ற, அழகிய, வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத் துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருளுகின்றார். அவரை வழிபட்ட உய்வீர்களாக.
3777 | விண்ணுலாம்
விரிபொழில் விரைமணற் ஒண்ணுலாம் மொலிகழலாடுவா நண்ணுலாம் புகலியு ளருமறை பண்ணுலா மருந்தமிழ் பாடுவா |
3.090.11 |
ஒளிவிடும், ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற, ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த, மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும், பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும், பாவமும் இல்லாதவர்களாவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், ரிரவிடத், துறைவர்வேள், சிவபெருமான், துருத்தியா, விக்குடியே, இரவில், பகலில், லமர்ந்தபிரான், டொருபக, திருவேள்விக்குடி, திருத்துருத்தி, உமாதேவியோடு, திருத்தலத்திலும், வீற்றிருந்தருளுவார், கமழும், வீற்றிருந்தருளும், வீற்றிருந்தருளுகின்றார், திருத்தலமாகும், அணிந்த, உடையவர், ரரிவையொ, திருத்தலத்தில், அணிந்து, சோலைகள், திருத், விரும்பி, போன்று, ஒலிக்கின்ற, சடைமுடியில், அணிந்தவர், திரியும், மார்பின, மங்கையொ, வரிகளையுடைய, கையினர், வனமுலை, நறுமணம், திருவேள்விக்குடியும், பொருந்திய, திருச்சிற்றம்பலம், நிறைந்த, ஒளிவிடும், பகலிடம், புகலிடம், பகற்காலத்தில், மேன்மேலும், கொங்கைகளையுடைய, திருத்துருத்தியும், கொன்றை, கரும்பு, ஏந்தியவர், கபாலியார்தாம், கண்ணுதற், திருத்துருத்தியில், திருவேள்விக்குடியில், திருமுறை