முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.074.திருத்தேவூர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.074.திருத்தேவூர்
3.074.திருத்தேவூர்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தேவகுருநாதர்.
தேவியார் - தேன்மொழியம்மை.
3592 | காடுபயில்
வீடுமுடை யோடுகலன் தேடுபலி யூணதுடை வேடமிகு நாடகம தாடமஞ்ஞை பாடவரி சேடுமிகு பேடையன மூடிமகிழ் |
3.074.1 |
சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும். முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும். அவனது ஆடை புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும் பிச்சையாகும். இத்தகைய கோலமுடைய, வேதத்தை அருளிச் செய்த வேதப்பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட, வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய இளம் பெண் அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு ஊடி, பின் ஊடல் நீங்கி மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த திருத்தேவூர் என்பதாகும்.
3593 | கோளரவு கொன்றைநகு வெண்டலையெ வாளரவு தண்சலம கட்குலவு வேளரவு கொங்கையிள மங்கையர்கள் தேளரவு தென்றறெரு வெங்குநிறை |
3.074.2 |
கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி பொருந்திய பாம்பு, குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை குலவுகின்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை உடைய, கணவரோடு கூடிய இள மங்கையர்கட்குக் குங்கும குழம்பின் மணத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து பெருகும் திருத்தேவூர் ஆகும்.
3594 | பண்டடவு சொல்லின்மலை வல்லியுமை எண்டடவு வானவரி றைஞ்சுகழ விண்டடவு வார்பொழி லுகுத்தநற செண்டடவு மாளிகை செறிந்துதிரு |
3.074.3 |
பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள் தன் திருவடிகளை வணங்க இனிது வீற்றிருந்தருளும் இடம், வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும் தேன்துளிக்கும் மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும் திருத்தேவூர் ஆகும்.
3595 | மாசின்மன நேசர்தம தாசைவளர் ஈசன்மறை யோதியெரி யாடிமிகு வாசமலர் கோதுகுயில் வாசகமு தேசவொலி வீணையொடு கீதமது |
3.074.4 |
சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய அடியார்கள் தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக விளங்குபவன். சூலப்படையை ஏந்தியவன். வானுலகிலுள்ள தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி வேதப்பொருளாயும் விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன். வெற்றிதரும் பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான் இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை மூக்கால் கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை போன்று பேசுகின்ற பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள் இறைவனைப் புகழும் ஒலியும் நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருத்தேவூர் ஆகும்.
3596 | கானமுறு மான்மறிய னானையுரி ஏனவெயி றாமையிள நாகம்வளர் வானணவு சூதமிள வாழைமகிழ் தேனமுது வுண்டுவரி வண்டுமருள் |
3.074.5 |
சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற மான்கன்றைக் கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை மார்பில் அணிந்தவன். தேவர்களின் தலைவன். அவன் உகந்தருளிய திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு, வரிகளையுடைய வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர் ஆகும்.
3597 | ஆறினொடு கீறுமதி யேறுசடை சீறுமவை வேறுபட நீறுசெய்த வீறுமல ரூறுமது வேறிவளர் சேறுபடு செங்கயல் விளிப்பவிள |
3.074.6 |
சிவபெருமான் சடையிலே கங்கையோடு, பிறைச்சந்திரனையு
3598 | கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுர என்றனது சென்றுநிலை யெந்தைதன முன்றின்மிசை நின்றபல வின்கனிக சென்றிசைய நின்றுதுளி யொன்றவிளை |
3.074.7 |
கோபித்து உலகையழிக்க எண்ணி வெற்றிபெற்ற பகையசுரர்களின் நெருங்கிய மூன்றுபுரங்களையும், சிவபெருமான் சிரித்துச் சாம்பலாகுமாறு செய்தவன். நான் சென்றடையக் கூடிய பற்றுக்கோடாக விளங்குபவன். என் தந்தைக்குத் தந்தையாகிய அச்சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இனிய தலமாவது, வீட்டின் முன்னால் நின்ற பலாக்கனிகளைத் தின்று கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி வளர்கின்ற திருத்தேவூர் ஆகும்.
3599 | ஓதமலி கின்றதெனி லங்கையரை பாதமலி கின்றவிர லொன்றினில் போதமலி கின்றமட வார்கணட சேதமலி கின்றகரம் வென்றிதொழி |
3.074.8 |
கடல் அலைகள் மோதுகின்ற தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமை மிகுந்த புயங்கள் நெரிபடத் தன் காற்பெருவிரலை ஊன்றி அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, மகிழ்ச்சி மிகுந்த பெண்கள் நடனமாடவும், முழவு ஒலிக்கவும், சேற்றில் பயில்கின்ற கையினால் உழவுத் தொழில் செய்து வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் வேளாளர்கள் நிறைந்த திருத்தேவூர் ஆகும்.
3600 | வண்ணமுகி லன்னவெழி லண்ணலொடு நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள் வண்ணவன நுண்ணிடையி னெண்ணரிய திண்ணவண மாளிகை செறிந்தவிசை |
3.074.9 |
கருநிற மேகத்தையொத்த அழகிய திருமாலும், மகரந்தப்பொடி நிறைந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், அள
3601 | பொச்சமமர் பிச்சைபயி லச்சமணு மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு மைச்சின்முகில் வைச்சபொழில் |
3.074.10 |
பொய்யான துறவு வேடம்கொண்டு பிச்சையெடுக்கும் சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும் விருப்ப மான உபதேச மொழிகளை விலக்கி, பித்தன் எனப்படுபவனும், விடமுடைய பாம்பை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானுடைய, மொய்த்த மெய்யடியார்கள் நெருங்கிய தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தேவூர் ஆகும்.
3602 | துங்கமிகு பொங்கரவு தங்குசடை செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பைங்கமல மங்கணிகொள் திண்புகலி சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை |
3.074.11 |
நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச் சிவந்த சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான். அவர் அடர்ந்த கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுமுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். அவர் வீற்றிருந்தருளும் தலம் திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை மலர்கள் அழகு செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் பத்தையும் அடியார் கூட்டங்களில் ஓத வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தேவூர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருத்தேவூர், சிவபெருமான், தேவூரதுவே, வீற்றிருந்தருளும், தலமாவது, நிறைந்த, பாம்பு, பொருந்திய, விளங்குபவன், சோலைகள், உயர்ந்த, திருமேனியில், உமாதேவியைத், வல்லவர்கள், நெருங்கிய, ஏந்தியவன், மிகுந்த, தலைவன், பேசுகின்ற, சிவந்த, விளங்கும், மண்டையோடு, திருச்சிற்றம்பலம், திருமுறை, வண்டுகள், பெண்கள், நிறைந்து, செய்கின்ற, செய்யும், மாளிகை