முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.064.திருப்பெருவேளூர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.064.திருப்பெருவேளூர்
3.064.திருப்பெருவேளூர்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் - பிரியாவீசுவரர்.
தேவியார் - மின்னனையாளம்மை.
3481 | அண்ணாவுங் கழுக்குன்று மாயமலை விண்ணோரு மண்ணோரும் வியந்தேத்த கண்ணாவா ருலகுக்குக் கருத்தானார் பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் |
3.064.1 |
சிவபெருமான் திருவண்ணாமலையும், திருக்கழுகுன்றமும் ஆகிய மலைகளில் தம்மை அடைந்தோர்க்கு வாழ்வுதரும் பொருட்டு எழுந்தருளியுள்ளார். விண்ணுலகத்தவரும், மண்ணுலகத்தவரும் வியந்து போற்ற அருள்செய்வார். உலகிற்குக் கண்ணாக விளங்குபவர். வழிபடுபவர்களின் கருத்தில் இருப்பவர். முப்புரங்களை எரித்தவர், பெண்ணும், ஆணுமாக விளங்கும் அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தைப் பிரியாது வீற்றிருந்தருளுகின்றார்.
3482 | கருமானி னுரியுடையர் கரிகாட மருமானா ரிவரென்று மடவாளோ பொருமான விடையூர்வ துடையார்வெண் பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் |
3.064.2 |
சிவபெருமான் கரியமானின் தோலை ஆடையாக உடுத்தவர். சுடுகாட்டில் ஆடுபவர். இமவான் மருமகன் இவர் என்று சொல்லும்படி உமாதேவியை உடனாகக் கொண்டவர். போர்புரிய வல்ல பெருமையையுடைய இடப வாகனத்தில் ஊர்ந்து செல்பவர். திருவெண்ணீற்றினைப் பூசியவர். பிஞ்ஞகன் என்று போற்றப்படும் அச்சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரிய நாதர் ஆவார்.
3483 | குணக்குந்தென் றிசைக்கண்ணுங் குடபாலும் கணக்கென்ன வருள்செய்வார் கழிந்தோர்க்கு வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் |
3.064.3 |
சிவபெருமான் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என எத்திசையிலுள்ளோர்க்கும் ஒன்றுபோல் அருள்புரிவார். அஞ்ஞானத்தால் நாள்களைக் கழிப்பவர்கட்கும், மெய்ஞ்ஞானத்தால் தம்மைப் போற்றுவார்கட்கும், மனத்தால் சிந்தித்துக் காயத்தால் தம்மை வழிபடும் அடியவர்கட்கும் அருள்புரிபவர். வணங்கிப் போற்றாதவர் கட்கு மாறுபாடாக விளங்குபவர். அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3484 | இறைக்கொண்ட வளையாளோ டிருகூறா மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளருஞ் பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் |
3.064.4 |
சிவபெருமான், முன்கையில் வளையலணிந்த உமாதேவி ஒரு கூறாகவும், தாம் ஒரு கூறாகவும் இருகூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவர். வேதங்களை அருளிச் செய்த நாவுடையர். மும்மதில்களை எய்த மேருமலையை வில்லாக உடையவர். நஞ்சை அடக்கியதால் கறைகொண்ட கண்டத்தர். நெருப்புப்போல் மிளிரும் சிவந்த சடையில் பிறையணிந்த பெருமானாகிய அவர் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3485 | விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் குழையாதார் குழைவார்போற் குணநல்ல அழையாவு மரற்றாவு மடிவீழ்வார் பிழையாத பெருமானார் பெருவேளூர் |
3.064.5 |
உலகப் பொருள்களில் பற்றுக் கொண்டு விழையாமல் இறைவன்பால் விழைத்து பலவாறு போற்றி, உலகியலில் மருள்கொண்டு குழையாது, இறைவனின் திருவருளில் குழைந்து அவன் புகழைப் பலவாறு எடுத்துக்கூறி, பெருமானே! அருள் புரிவீராக! என அழைத்தும், அரற்றியும், அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்குபவர்கட்கு என்றும் தவறாது உடனே அருள்புரியும் சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3486 | விரித்தார்நான் மறைப்பொருளை யுமையஞ்ச உரித்தாரா முரிபோர்த்து மதின்மூன்று எரித்தாரா மிமைப்பளவி லிமையோர்க பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர் |
3.064.6 |
சிவபெருமான் நான்மறைகளை விரித்துப் பொருள் உரைத்தவர். உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். மும்மதில்களையும் ஓர் அம்பினால் இமைக்கும் அளவில் எரித்தவர். தேவர்கள் வணங்கிப் போற்ற விசுவரூபம் கொண்ட எம்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3487 | மறப்பிலா வடிமைக்கண் மனம்வைப்பார் சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லா இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் |
3.064.7 |
இறைவர் தம்மை மறவாது தமக்கு அடியவர்களாய் விளங்குபவர்கள் மனத்தில் வீற்றிருப்பவர். சிறப்பில்லாத பகையசுரர்களின் மும்மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாக எய்து நெருப்புண்ணும்படி அழித்தவர். அவர் இறப்பற்றவர். நோயில்லாதவர். கேடு இல்லாதவர். பிறப்பில்லாத அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3488 | எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் முரியார்ந்த தடந்தோள்க ளடர்த்துகந்த வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை பிரியாத பெருமானார் பெருவேளூர் |
3.064.8 |
நெருப்புப் போல் சிவந்த வேற்படை உடைய சேனைகளைக் கடல்போல் விரியப் பெற்றுள்ள இராவணன் அலறுமாறு, வலிமை வாய்ந்த அவனுடைய அகன்ற தோள்களை நெரித்துப் பின்னர் அவன் சாமகானம் பாடக் கேட்டுகந்த முதல்வரான சிவபெருமான், கட்டுக்களையுடைய கொடிய வில்லேந்தி, உமாதேவியைத் தம்திருமேனியின் ஒருபாகமாகப் பிரியாது பெற்று, திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3489 | சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண நாணியவர் தொழுதேத்த நாணாமே பேணியவெம் பெருமானார் பெருவேளூர் |
3.064.9 |
திருவிக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும், பிரமனும் செருக்குற்றுத் தாமே தலைவர் எனக் கருதி இறைவனைத் தேட, அவனைக் காணும் முறையை அறியாதவராய், நெருப்பு வண்ணமாய் நின்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் நாணமுற்று நின்று தொழுது போற்ற, அவர்களின் நாணத்தைப் போக்கி அருள்செய்து பாதுகாத்த அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3490 | புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள் மற்றேரும் பரிமாவு மதகளிறு பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் |
3.064.10 |
புற்றேறும்படி கடுமையான தவத்தால் உடம்பை வாட்டும் சமணர்களும், மஞ்சட்காவியூட்டிய ஆடையை அணியும் புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களை நீங்கள் ஏற்க வேண்டா. நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையவனும், தேரும், குதிரையும், யானையும் வாகனமாகக் கொள்ளாது, இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள தலைவனுமான, திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதனை நீவிர் தொழுது வணங்குங்கள்.
3491 | பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர் அம்பொன்செய் மடவரலா ரணிமல்கு நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் |
3.064.11 |
அழகிய பொன்னையும், சிறந்த மணிகளான இரத்தினங்களையும், பலவகையான கனிகளையும் அடித்துக் கொண்டுவரும் காவிரியில், பொன்னாலாகிய அழகிய ஆபரணங்களை அணிந்த, நீராடும் மகளிர்கள் மிகுந்த திருப்பெருவேளூரில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிஅருளிய வேதம்வல்ல ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்களை அருவினைகளும், அவற்றால் வரும் பிறவிநோயும் சாரா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பெருவேளூர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்பெருவேளூர், பெருமானார், என்னும், பிரியாரே, பெருவேளூர், திருத்தலத்தில், வீற்றிருந்தருளும், சிவபெருமான், பிரியநாதர், அப்பெருமான், விளங்குபவர், சிவந்த, தமக்கென்றும், கொண்டு, மேருமலையை, நெருப்புப், வாகனமாகக், தொழுது, சிவபெருமானின், மும்மதில்களை, பலவாறு, மதிலெய்த, கொண்டவர், பிரியாது, வருள்செய்வார், திருச்சிற்றம்பலம், திருமுறை, உமாதேவி, எரித்தவர், வணங்கிப், கூறாகவும்