முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.060.திருவக்கரை
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.060.திருவக்கரை
3.060.திருவக்கரை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சந்திரசேகரேசுவரர்.
தேவியார் - வடிவாம்பிகையம்மை.
3438 | கறையணி மாமிடற்றான் கரி காடரங் பிறையணி கொன்றையினா னொரு பாகமும் மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன் உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழ |
3.060.1 |
இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை உடையவன். சுடுகாட்டில் திருநடனம் செய்பவன். பிறைச் சந்திரனையும், கொன்றைமாலையையும் அணிந்தவன். உமாதேவியைத் தன்திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். பிரமன் தலையைக் கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன். திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத் தியானிப்பீர்களாக.
3439 | பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர் ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன் தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி |
3.060.2 |
மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் சிவபெருமான் உதைத்தவன். பருத்த தோள்களை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவன். முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவன். திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக!
3440 | சந்திர சேகரனே யரு ளாயென்று இந்திர னும்முதலா விமை யோர்க அந்தர மூவெயிலும் மன லாய்விழ மந்தர மேருவில்லா வளைத் தானிடம் |
3.060.3 |
சந்திரனைச் சடைமுடியில் சூடியுள்ள சிவபெருமானே! அருள்புரிவீராக என்று குளிர்ந்த விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது போற்ற, அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும் அக்கினியாகிய கணையினால் எரிந்து சாம்பலாகுமாறு மந்தர மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் வீற்றிருந்தருளும்
3441 | நெய்யணி சூலமொடு நிறை வெண்மழு கையணி கொள்கையினான் கனன் மேவிய மெய்யணி வெண்பொடியான் விரி கோவண மையணி மாமிடற்றா னுறை யும்மிடம் |
3.060.4 |
நெய் தடவப்பட்ட சூலத்தையும், வெண்ணிற மழுவையும் படைக்கலனாக ஏந்தி, பாம்பைக் கையில் ஆபரணமாகப் பூண்டு, நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன் சிவபெருமான். அவன் தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன். விரித்து ஓதப்பெறும் வேதங்களைக் கோவணமாக அணிந்தவன். மை நிறம் பெற்ற கரிய கண்டத்தையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
3442 | ஏனவெண் கொம்பினொடும் மிள வாமையும் கூனிள வெண்பிறையுங் குளிர் மத்தமுஞ் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும். மானன மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன் தானவர் முப்புரங்க ளெரி செய்த |
3.060.5 |
பன்றியின் கொம்பும், ஆமையின் ஓடும் அணிகலனாகக் கொண்டு, வளைந்த பிறைச்சந்திரனையும், குளிர்ந்த ஊமத்த மலரையும் சூடி, நல்ல மான்போன்ற மென்மையான விழிகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பகையசுரர்களின் முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த முதல்வன் ஆவான்.
3443 | கார்மலி கொன்றையொடுங் கதிர் மத்தமும் நீர்மலி யுஞ்சடைமே னிரம் பாமதி வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை பார்மலி வெண்டலையிற் பலி கொண்டுழல் |
3.060.6 |
கார்காலத்தில் மிகுதியாக மலரும் கொன்றை மலரும், ஊமத்த மலரும், ஒளி பொருந்திய பாம்பும், கங்கையும் சடைமுடியில் திகழ, கலைநிரம்பா பிறைச்சந்திரனைச் சூடி, நல்ல கச்சணிந்த மென்மையான முலைகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். அப்பெருமான் இப்பூவுலகில் வெண்ணிறப்பிரம கபாலத்தில் பிச்சையேற்றுத் திரியும் தன்மையன்.
3444 | கானண வும்மறிமா னொரு கையதோர் தேனண வுங்குழலா ளுமை சேர்திரு வானண வும்பொழில்சூழ் திரு வக்கரை ஊனண வுந்தலையிற் பலி கொண்டுழ |
3.060.7 |
காட்டில் உலவும் மானை ஒரு கையில் ஏந்தி, மழுவாளை மற்றொரு கையிலேந்தியவன் சிவபெருமான். வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பிரமனின் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை எடுத்துத் திரியும் உத்தமனாவான்.
3445 | இலங்கையர் மன்னனாகி யெழில் பெற்ற கலங்கவொர் கால்விரலாற் கதிர் பொன்முடி நலங்கெழு சிந்தையனா யருள் பெற்றலு வலங்கெழு மூவிலையே லுடை யானிடம் |
3.060.8 |
இலங்கை மன்னனான அழகிய இராவணன் கலங்குமாறு, சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி, ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்தும் அலறுமாறு செய்தான். பின் இராவணன் செருக்கு நீங்கி, நல்ல சிந்தனையோடு இறைவனைப் போற்றிசைக்க, திருவருளால் இறைவன் அவனுக்கு வீரவாளும், நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல் ஏந்தி வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
3446 | காமனை யீடழித்திட் டவன் காதலி சேமமே யுன்றனக்கென்றருள் செய்தவன் சாமவெண் டாமரைமே லய னுந்தர வாமன னும்மறியா வகை யானிடம் |
3.060.9 |
மன்மதனுடைய அழகிய வலிய தேகத்தை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி இரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்கச் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
3447 | மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந் பாடிய நான்மறையான் பலிக் கென்றுபல் வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம் |
3.060.10 |
காவியாடை போர்த்திய புத்தர்களும், அசோக மரத்தை வணங்கும் சமணர்களும், தேடுகின்ற தேவர்களால் வணங்கப் படுகின்ற தேவர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமான் நான்மறைகளை அருளிச்செய்து, பல வீதிகள்தோறும் சென்று உலர்ந்த பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
3448 | தண்புன லும்மரவுஞ் சடை மேலுடை வண்பொழில் சூழ்ந்தழகா ரிறை வன்னுறை சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பண்புனை பாடல்வல்லா ரவர் தம்வினை |
3.060.11 |
குளிர்ந்த கங்கையும், பாம்பும் சடைமுடியில் அணிந்த அழகனான சிவபெருமான், உறையும் சந்திரனைத் தொடும் படி ஓங்கி வளர்ந்துள்ள செழுமைவாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தைப் போற்றி, சண்பை நகர் எனப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞான சம்பந்தன், அருளிய பண்ணோடு கூடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினையிலிருந்து நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவக்கரை - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவக்கரை, சிவபெருமான், என்னும், வீற்றிருந்தருளும், திருத்தலத்தில், வக்கரையே, திருத்தலமாகும், தலைவனான, திருமேனியில், மலரும், செய்தவன், பாகமாகக், வக்கரை, மேவியவன், குளிர்ந்த, கொண்டவன், சடைமுடியில், ளொடும், மென்மையான, உமாதேவியோடு, பாம்பும், சூழ்ந்த, ஏந்திப், யானிடம், இராவணன், சோலைகள், திரியும், கங்கையும், அப்பெருமான், பிச்சையேற்றுத், சூடிநல்ல, சாம்பலாகுமாறு, திருநடனம், செய்பவன், அணிந்தவன், இறைவன், வக்கரையில், திருமுறை, திருச்சிற்றம்பலம், உமாதேவியைத், பிச்சை, எரிந்து, பிறைச்சந்திரனைச், தொழுது, தேவர்களால், டொழுதிறைஞ்ச, முப்புரங்க, கையில்