முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.042.திருச்சிற்றேமம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.042.திருச்சிற்றேமம்
3.042.திருச்சிற்றேமம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பொன்வைத்தநாதர்.
தேவியார் - அகிலாண்டேசுவரியம்மை.
3244 | நிறைவெண்டிங்கள்
வாண்முக குறைவெண்டிங்கள் சூடியோ சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் இறைவனென்றே யுலகெலா |
3.042.1 |
வெண்மையான முழுநிலவு போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, நடனம் புரிகின்ற இயல் புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவர் உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவர்.
3245 | மாகத்திங்கள் வாண்முக பாகத்திங்கள் சூடியோ மேகத்தாடு சோலைசூழ் ஆகத்தேர்கொ ளாமையைப் |
3.042.2 |
ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்று ஒளியுடைய முகத்தையுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச்சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்தாடும் இறைவர், மேகம் திகழும் சோலைசூழ்ந்த திருச்சிறறமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் திருமார்பில் ஆமை ஓட்டினை ஆபரணமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான் அல்லரோ?
3246 | நெடுவெண்டிங்கள் வாண்முக கொடுவெண்டிங்கள் சூடியோ படுவண்டியாழ்செய் பைம்பொழிற் கடுவெங்கூற்றைக் காலினாற் |
3.042.3 |
வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ்போன்று ஒலி செய்யப் பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவன் கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளான சிவபெருமான் அல்லனோ?
3247 | கதிரார் திங்கள் வாண்முக முதிரார்திங்கள் சூடியோ எதிரார்புனலம் புன்சடை அதிரார்பைங்க ணேறுடை |
3.042.4 |
கதிர்வீசும் சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய முகம்கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, ஆடுகின்ற முக்கண்ணர் ஆவார். அவர் கங்கையும், சடைமுடியும் கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர், கழுத்தில் கட்டிய சதங்கைமணி ஒலிக்கும், பசிய கண்களையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட ஆதிமூர்த்தி அல்லரோ?
3248 | வானார்திங்கள் வாண்முக கூனார்திங்கள் சூடிய தேனார்வண்டு பண்செயுந் மானார்விழிநன் மாதொடும் |
3.042.5 |
வானில் விளங்கும் சந்திரனைப் போன்று ஒளிபொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணோடு பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்பவனாய்ப் பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான் அல்லரோ?
3249 | பனிவெண்டிங்கள் வாண்முக குனிவெண்டிங்கள் சூடியோ தனிவெள்விடையன் புள்ளினத் முனிவு மூப்புநீக்கிய |
3.042.6 |
குளிர்ந்த வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி ஆடல்புரிகின்றவர் இறைவர். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு, பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு வெறுப்பு அற்றவ ராய், மூப்பினை அடையப்பெறாதவரான முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ?
3250 | கிளருந்திங்கள் வாண்முக வளருந்திங்கள் சூடியோ தளிருங்கொம்பு மதுவுமார் ஒளிரும்வெண்ணூன் மார்பனென் |
3.042.7 |
கிளர்ந்து எழுந்த பூரண சந்திரனைப் போன்று ஒளிபொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, குறைவிலாது வளரும் தன்மையுடைய பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் இறைவர், தளிரும், கொம்புகளும், தேன் துளிக்கும் மலர்மாலைகளும் சூழ விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும் முப்புரிநூலை அணிந்த திருமார்பினராய் என் உள்ளத்திலுள்ளவர் அல்லரோ?
3251 | சூழ்ந்ததிங்கள் வாண்முக போழ்ந்ததிங்கள் சூடியோ தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் ஆழ்ந்தவரக்க னொல்கவன் |
3.042.8 |
சந்திரனைப் போன்று ஒளியுடைய முகம் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல்வளமிக்க திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அரக்கனான இராவணன் நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல் அல்லரோ?
3252 | தனிவெண்டிங்கள் வாண்முக துணிவெண்டிங்கள் சூடியோ அணிவண்ணச்சிற் றேமத்தா மணிவண்ணனுமுன் காண்கிலா |
3.042.9 |
ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன் போன்று ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாட, தாழ்ந்த சடையில் இளம்பிறைச் சந்திரனைச் சூடித்திருநடனம் செய்கின்ற மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும் காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர் அல்லரோ?
3253 | வெள்ளைத்திங்கள் வாண்முக பிள்ளைத்திங்கள் சூடியோ உள்ளத்தார்சிற் றேமத்தா கள்ளத்தாரைத் தானாக்கியுட் |
3.042.10 |
வெண்ணிறச் சந்திரன் போன்ற ஒளி திகழும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர், சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத் தோன்றாதவாறு மறைந்தும் விளங்குபவர்.
3254 | கல்லிலோத மல்குதண் நல்லவாய வின்றமிழ் செல்வனூர்சிற் றேமத்தைப் வல்லராகி வாழ்த்துவா |
3.042.11 |
கற்களால் ஆகிய மதிலில் கடல் அலைகள் மல்கும், குளிர்ந்த கடற்கரைச் சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றதிருச்சிற்றேமத்தைப் போற்றி நல்ல இன்தமிழில் அருளிய சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சிற்றேமம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ராடன்மேய, வாண்முக, சூடியோ, உமாதேவியார், திருச்சிற்றேமத்தில், றேமத்தான், பிறைச்சந்திரனைச், அல்லரோ, சிவபெருமான், போன்று, அப்பெருமான், சடைமுடியில், முகமுடைய, மாதர்பாட, இறைவன், திருநடனம், இறைவர், விளங்கும், சந்திரன், சந்திரனைப், வீற்றிருந்தருளுகின்றார், செய்யும், வளைந்த, பண்ணோடு, திருச்சிற்றேமம், சந்திரனைச், வீற்றிருந்தருளுபவர், ஒளிபொருந்திய, சூடித், சடையில், கொள்கையான், பொருந்திய, திருச்சிற்றம்பலம், இடபத்தை, நீள்சடைக், னல்லனே, குளிர்ந்த, வாகனமாகக், அல்லனே, சம்பந்தன், நாவினால், வெண்ணிறச், றேமத்தா, ஒளிரும், திருமுறை, இளம்பிறைச், சூழ்ந்த, ஒலிக்கும், வீற்றிருந்தருளுகின்ற, லல்லனே, சோலைசூழ்ந்த, ஒளியுடைய, செய்கின்ற, வண்டுகள், பழனஞ்சூழ்சிற், திகழும், இசைபாட, யல்லனே, மாதர்பாடக், பைம்பொழிற்