முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.103.திருவலம்புரம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.103.திருவலம்புரம்
3.103.திருவலம்புரம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர்.
தேவியார் - வடுவகிர்க்கணம்மை.
3901 | கொடியுடை
மும்மதி லூடுருவக் இடிபட வெய்த வமரர்பிரா துடியிடை யாளையொர் பாகமாகத் வடிவுடை மேதி வயல்படியும் |
3.103.1 |
கொடிகளையுடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச் செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி, பேரொலியுடன் அம்மதில் அழியும்படி அம்பெய்த தேவர்களின் தலைவரான சிவபெருமான், அடியார்களெல்லாம் மனமொன்றிக் கூடிப்போற்ற உடுக்கை போன்ற குறுகிய இடையுடைய உமா தேவியைப்பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள் வயலிலே படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.
3902 | கோத்தகல்
லாடையுங் கோவணமுங் தேய்த்தன் றநங்கனைத் தேசழித்துத் காய்த்தகல் லாலதன் கீழிருந்த வாய்த்தமுத் தீத்தொழி னான்மறையோர் |
3.103.2 |
சிவபெருமான் காவியுடையும், கோவணமும் அணிந்தவர். ஒரு கையில் கொடுகொட்டி என்னும் வாத்தியத்தை ஏந்தி வாசிப்பவர். மன்மதனை அன்று உருவழியும்படி எரித்தவர். எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது வணங்கும்படி, காய்கள் நிறைந்த கல்லால மரத்தின் கீழ்த் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் வீற்றிருந்தவர். அக்கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், முத்தீ வளர்த்து, நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.
3903 | நொய்யதொர்
மான்மறி கைவிரலின்
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி மையிருஞ் சோலை மணங்கமழ வைகலு மாமுழ வம்மதிரும் |
3.103.3 |
இலேசான உடம்பையுடைய மான்கன்றைத் தன் கைவிரல் நுனிமேல் நிலையாக நிற்குமாறு செய்து, நெருப்புப் போன்ற சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி, விரிந்த சிவந்தசடை தாழ விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நாள்தோறும் நித்திய பூசையே திருவிழாப் போல் முழவதிரச் சிறப்புடன் நடக்கும், இருளடர்ந்த பெரிய சோலைகளின் நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.
3904 | ஊனம
ராக்கை யுடம்புதன்னை தேனமர் கொன்றையி னானடிக்கே ஆனம ரைந்துங்கொண் டாட்டுகந்த வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் |
3.103.4 |
தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு நிலையற்றது என்பதை உணர்ந்து, அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது, தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப் படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் தேவர்கள் நாள்தோறும் வந்து வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.
3905 | செற்றெறியுந்
திரையார் கலுழிச் அற்றறியா தனலாடு நட்ட பெற்றறிவா ரெருதேற வல்ல வற்றறியாப் புனல்வாய்ப் புடைய |
3.103.5 |
கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினை, ஒளி பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது தங்கவைத்த சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம் செய்பவர். அழகு பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாக ஏற்றவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.
3906 | உண்ணவண்
ணத்தொளி நஞ்சமுண்டு சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் வண்ணவண் ணப்பறை பாணியறா |
3.103.6 |
தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு, கருநிறமும் ஒளியுமுடைய நஞ்சைத் தாம் உண்டவர் சிவபெருமான். உமா தேவியை உடனாகக் கொண்டவர். மணம் பொருந்திய திரு வெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர். சுடர்விடும் சோதியாய் விளங்குபவர். பல்வேறு பண்களில் சிவபூதங்கள் நடனம் செய்பவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பலவகைப்பட்ட பறை முதலிய வாத்தியங்களின் முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.
3907 | புரிதரு
புன்சடை பொன்றயங்கப் விரைதரு வேழத்தி னீருரிதோன் அரைதரு பூந்துகி லாரணங்கை வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா |
3.103.7 |
முறுக்குண்ட மென்மையான சடை பொன்போல் ஒளிர, முப்புரிநூல் மார்பில் புரண்டு விளங்க, மிக வேகமாகச் செல்லக்கூடிய யானையின் இழுத்து உரிக்கப்பட்ட தோலை உடலின் மேல் போர்த்தி, மூங்கிலையொத்த தோளையுடையவளாய், இடையில் அழகிய ஆடையை அணிந்துள்ள உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், புலவர்களால் போற்றப்படும் பழம் புகழுடைய, குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் குறையாத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.
3908 | தண்டணை
தோளிரு பத்தினொடுந் ஒண்டணை மாதுமை தானடுங்க மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல வண்டணை தன்னொடு வைகுபொழில் |
3.103.8 |
தண்டு முதலிய ஆயுதங்களையுடைய இருபது தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது, தம் உடம்போடு ஒன்றாக அணைந்துள்ள உமா தேவி நடுங்க, சிவபெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றி அவ்வரக்கனின் செருக்கை அடக்கி, பின் அவன் தன் தவறுணர்ந்து துதித்தபோது, அருளும் செய்த மாறுபட்ட தன்மையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் ஆண் வண்டுகள் தம் பெடை வண்டுகளைத் தழுவித் தங்கும் சோலைகளை உடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.
3909 | தாருறு
தாமரை மேலயனுந் தேர்வறி யாவகை யாலிகலித் பேர்வறி யாவகை யானிமிர்ந்த வாருறு சோலை மணங்கமழும் |
3.103.9 |
மாலையாக அமைதற்குரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், உலகை இரண்டடிகளால் அளந்த திருமாலும் உண்மையை உணரமுடியாது, தம்முள் யார் பெரியவர் என்று மாறுபாடு கொண்டு, முழுமுதற் பொருளின் அடிமுடி காணமுடியாது திகைத்துத் திரிந்து, பின் தம் குற்றம் உணர்ந்து இறைவனைப் போற்றி வணங்க, அசைக்க முடியாத நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நீண்ட சோலைகளையுடைய நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.
3910 | காவிய
நற்றுவ ராடையினார் பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் ஆவியு ணின்றருள் செய்யவல்ல வாவியி னீர்வயல் வாய்ப்புடைய |
3.103.10 |
காவி நிறத்தைத் தருவதாகிய துவர்நீரில் தோய்த்த ஆடையினையுடைய புத்தர்களும், கடுமையான நோன்புகளை மேற்கோள்ளும் பாவிகளாகிய சமணர்களும் கூறும் சொற்களைச் திருச்சிற்றம்பலம் சிறிதும் கேளாத, வழிவழியாகச் சிவனடிமை செய்யும் தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த, அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து அருள் செய்யவல்ல அழகர் சிவபெருமான் ஆவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்வளமுடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.
3911 | நல்லிய
னான்மறை யோர்புகலித் வல்லியந் தோலுடை யாடையினான் சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல செல்வன சேவடி சென்றணுகிச் |
3.103.11 |
நல்லொழுக்கமுடைய, நான்கு வேதங்களையும் நன்கு கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன், புலியின் தோலை ஆடையாக உடுத்திய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகரைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், தொல்வினை நீங்கிச் சிவலோகம் சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற சிவபெருமானின் சேவடிகளைச் சேர்ந்திருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலம்புரம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், திருவலம்புரம், சிவபெருமான், வலம்புர, நன்னகரே, வீற்றிருந்தருளும், நன்னகர், ரிடம்போலும், அப்பெருமான், நன்னகராகும், வீற்றிருந்தருளுகின்ற, பொருந்திய, கமழும், செய்யவல்ல, திருச்சிற்றம்பலம், கொண்டு, செய்பவர், முதலிய, னிடம்போலும், பெருமா, தேவியை, வல்லவர்கள், திகைத்துத், வாய்ப்புடைய, தேவர்கள், கொண்டவர், உடனாகக், நெருப்புப், கொடுகொட்டி, ளிடம்போலும், இடமாவது, பாகமாகக், திருமுறை, தலைவரான, நான்கு, வேதங்களையும், நறுமணம், உணர்ந்து, நாள்தோறும், சிவந்த, வாழ்கின்ற, போற்றி