முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.093.திருத்தெங்கூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.093.திருத்தெங்கூர்
2.093.திருத்தெங்கூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர்.
தேவியார் - பெரியாம்பிகையம்மை.
2475 |
புரைசெய் வல்வினை தீர்க்கும் கரைசெய் மால்கடல் நஞ்சை இரைசெய் தாரழ லூட்டி விரைசெய் பூம்பொழில் தெங்கூர் |
2.093. 1 |
மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர். விண்ணவர் போற்றக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர். முப்புரம் எரித்தவர். இடுபலிக்கு உழல்பவர்.
2476 |
சித்தந் தன்னடி நினைவார் கொத்தின் றாழ்சடை முடிமேற் பத்தர் தாம்பணிந் தேத்தும் வித்தன் தாழ்பொழில் தெங்கூர் |
2.093. 2 |
தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், மனம் ஒன்றி நினைக்கும் அடியவர்களின் கொடுவினைகளைத் தீர்ப்பவர். கொத்தாக விளங்கும் சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர். பக்தர்கள் பணிந்தேத்தும் பரம்பரர். நீரில் பதித்த விதை போன்றவர்.
2477 |
அடையும் வல்வினை யகல படையர் பாய்புலித் தோலர் சடையில் வெண்பிறை சூடித் விடையர் வீங்கெழில் தெங்கூர் |
2.093. 3 |
அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் பெருமானார், நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர். அனல்போன்ற மழுப்படையை உடையவர். புலித்தோல் உடுத்தவர். கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர்.
2478 |
பண்டு நான்செய்த வினைகள் கொண்டல் வான்மதி சூடிக் வண்டு மாமல ரூதி விண்ட வார்பொழில் தெங்கூர் |
2.093. 4 |
மது உண்ண வந்த வண்டுகளால் விரிந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் இறைவர், முற்பிறவிகளில் நான்செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர். வானத்து இளம்பிறையைச் சூடியவர். கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலமணி போன்ற கண்டம் உடையவர்.
2479 |
சுழித்த வார்புனற் கங்கை தெழித்து வானவர் நடுங்கச் கழித்த வெண்டலை யேந்திக் விழித்த வர்திருத் தெங்கூர் |
2.093. 5 |
திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்த இறைவர் கங்கையை முடிமிசைச் சூடி வானவர் நடுங்கக் காலனைக் காலால் செற்றவர். அன்னப் பறவையாய் வடிவெடுத்த பிரமனது தலை யோட்டைக் கையில் தரித்தவர். காமனின் உடல் பொடியாகுமாறு விழித்தவர்.
2480 |
தொல்லை வல்வினை தீர்ப்பார் எல்லி சூடிநின் றாடும் சில்லை மால்விடை யேறித் வில்லி னார்திருத் தெங்கூர் |
2.093. 6 |
திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், பழவினை தீர்ப்பவர். சுடலைப் பொடி பூசியவர். திங்களை முடியில்சூடி நின்று ஆடுபவர். இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரிபுரம் எரித்த வில்லினர்.
2481 | >
நெறிகொள் சிந்தைய ராகி முறிகொண் மேனிமுக் கண்ணர் பொறிகொள் வாளர வணிந்த வெறிகொள் பூம்பொழில் தெங்கூர் |
2.093. 7 |
வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர், நெறியான மனம் உடையவராய் நினைபவர் வினைகளைத் தீர்ப்பவர். தளிர்போலும் திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவர். பிறைகண்டு அஞ்சுமாறு சடைமிசைப் பாம்பைச் சூடிய புண்ணியர்.
2482 |
எண்ணி லாவிறல் அரக்கன் கண்ணெ லாம்பொடிந் தலறக் தண்ணு லாம்புனற் கண்ணி விண்ணு லாம்பொழில் தெங்கூர் |
2.093. 8 |
விண்ணளாவிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், அளவற்ற ஆற்றல் படைத்த இராவணன் கயிலை மலையை எடுக்க முற்பட்டபோது அவன் கண்களெல்லாம் பொடியாய், அவன் அலறி விழுமாறு கால் விரலால் ஊன்றிய தலைவர். தண்ணிய கங்கையாகிய கண்ணியைச் சூடியவர்.
2483 |
தேடித் தானயன் மாலுந் பாடத் தான்பல பூதப் ஆடத் தான்மிக வல்லர் வேடத் தார்திருத் தெங்கூர் |
2.093. 9 |
திருத்தெங்கூரில், அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடிக் காணப்பெறாதவர். பூதப் படைகள் பாடச் சுடலையில் பலகாலும் ஆடும் இயல்பினர். அருச்சுனனுக்கு அருள் செய்யும் வேடத்தினர்.
2484 |
சடங்கொள் சீவரப் போர்வைச் இடங்கொள் வல்வினை தீர்க்கும் கடங்கொண் மால்களிற் றுரியர் விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் |
2.093. 10 |
திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான் உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர் சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினைகளைத் தீர்த்தருள் புரிபவர். இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய யானையின் தோலைப் போர்த்தியவர். கடல் கடைந்த போதெழுந்த விடம் பொருந்திய கண்டத்தினர்.
2485 | வெந்த
நீற்றினர் தெங்கூர் கந்த மார்பொழில் சூழ்ந்த சந்த மாயின பாடல் பந்த மாயின பாவம் |
2.093. 11 |
வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி ஞானசம்பந்தன் பாடிய சந்தப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும். அவர்கள் தௌவு பெறுதல் வந்துறும் பயனாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தெங்கூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தெங்கூர், வெள்ளியங், குன்றமர்ந், இறைவர், சூழ்ந்த, பொழில், தெங்கூரில், விளங்கும், புண்ணியர், வெள்ளியங்குன்றமர்ந்த, வல்வினை, தீர்ப்பவர், திருத்தெங்கூர், சூடியவர், உடையவர், வெள்ளியங்குன்றில், தீர்க்கும், திருத்தெங்கூரில், வினைகளைத், நான்செய்த, வானவர், சாக்கியர், பொருந்திய, சீவரப், நினைபவர், காலால், செற்றவர், காலனைக், கடலில், போற்றக், உண்டவர், விண்ணவர், திருச்சிற்றம்பலம், திருமுறை, பூம்பொழில், கமழும், பதித்த, தோன்றிய, அமர்ந்த, வெள்ளியங்குன்று, அடையும்