முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.091.திருமறைக்காடு
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.091.திருமறைக்காடு
2.091.திருமறைக்காடு
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
2453 |
பொங்கு வெண்மணற் கானற் கங்கு லாரிருள் போழுங் திங்கள் சூடின ரேனுந் எங்கு மெங்கள் பிரானார் |
2.091. 1 |
பொங்கியது போன்ற வெண்மையான மணற்பரப்பில் அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலைகளில் தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து ஒளிதரும், ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள் சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ்விடத்தும் எங்கள் பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய, இகழும் பழி உளவாதல் இல்லை.
2454 |
கூனி ளம்பிறை சூடிக் ஆனி லங்கிள ரைந்தும் கான லங்கழி யோதங் தேன லங்கமழ் சோலைத் |
2.091. 2 |
கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம் கரையோடு மோதுதலால் ஒளிதரும் மணிகள் சுடர்விட, தேனின் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசர் வளைந்த பிறைமதியைச் சூடி வளைந்த கோடுகளைக் கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்து ஆனைந்து ஆடி மகிழ்பவர். அவர் அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும்.
2455 |
நுண்ணி தாய்வெளி தாகி பண்ணி யாழென முரலும் தண்ணி தாயவெள் ளருவி கண்ணி தானுமொர் பிறையார் |
2.091. 3 |
ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர், நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார் பினை உடையவர். இசைதரும் யாழ் போல அடக்கமான இனிய மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். தண்மையான வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்டதோடு இளம் பிறையாகிய முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார்.
2456 |
ஏழை வெண்குரு கயலே தாழை வெண்மடற் புல்குந் மாழை யங்கய லொண்கண் நீழ லேசர ணாக |
2.091. 4 |
அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப் புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் இளமையையும், கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவராவார். அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர் வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர்.
2457 |
அரவம் வீக்கிய அரையும் பரவ நாஞ்செய்த பாவம் மரவ நீடுயர் சோலை டிரவு மெல்லியும் பகலும் |
2.091. 5 |
பாம்பைக் கச்சாகக் கட்டிய இடையையும், ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளையும், நாம் பரவினால் நாம் செய்த பாவங்கள் நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய பதி, குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும். அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும்.
2458 |
பல்லி லோடுகை யேந்திப் அல்லல் வாழ்க்கைய ரேனும் புல்ல மேறுவர் பூதம் மல்கு வெண்டிரை ஓத |
2.091. 6 |
பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும். அதனையும் அவரே அறிவார். எருதேறிவருவார். பூதங்கள் அருகேபுடைசூழ்ந்து வரத்திரிவார். அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும்.
2459 | >
நாகந் தான்கயி றாக பாகந் தேவரொ டசுரர் வேக நஞ்செழ வாங்கே ஆகந் தன்னில்வைத் தமிர்தம் |
2.091. 7 |
வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தரமலை மத்தாகவும் கொண்டு, தலைவால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது கொடிய நஞ்சு வெளிப்பட, அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடியபோது அந்நஞ்சை உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும்.
2460 | தக்கன்
வேள்வியைத் தகர்த்தோன் மிக்கு மேற்சென்று மலையை நக்குத் தன்றிரு விரலால் பக்க வாயும்விட் டலறப் |
2.091. 8 |
தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலைமகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.
2461 |
விண்ட மாமல ரோனும் பண்டுங் காண்பரி தாய கண்ட லங்கழி யோதங் வண்ட லங்கமழ் சோலை |
2.091.9 |
விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும், விளங்கும் ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும், முற்காலத்தும் காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி, தாழைமரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும் மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும் சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும்.
2462 | பெரிய
வாகிய குடையும் கரிய மண்டைகை யேந்திக் அரிய வாகவுண் டோது பெரிய சீர்மறைக் காடே |
2.091. 10 |
பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க, கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆரவாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி, நல்ல மனம் உடையவர்களே! நம் தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை வழிபடுவீர்களாக.
2463 |
மையு லாம்பொழில் சூழ்ந்த கையி னாற்றொழு தெழுவான் செய்த செந்தமிழ் பத்துஞ் பொய்யில் வானவ ரோடும் |
2.091. 11 |
மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது எழுவோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர் உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர். புகழே கொள்ள வல்லவராய் விளங்குபவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமறைக்காடு - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எழுந்தருளிய, திருமறைக்காட்டில், காடமர்ந், திருமறைக்காடாகும், சூழ்ந்த, விளங்கும், மலைமகள், மாமறைக், இறைவர், என்னும், ஒளிதரும், ரேனும், திருமுறை, மடிகள், கொண்டு, அல்லல், பகலும், திருச்சிற்றம்பலம், அதனைக், வேள்வியைத், ததும்ப, சிறந்த, குடையும், அளவில், சிவபிரானது, பதிதான், பெருமையை, தக்கன், வெண்மையான, லங்கமழ், சோலைகளில், மணிகள், கதிர்மணி, கரையொடு, கலிமறைக், லங்கழி, சோலைகள், வளைந்த, திங்கள், பெருகிய, தார்தாம், இசைதரும், உடையவர், வெள்ளிய, திருமறைக்காடு, நினைபவர்