முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.090.திருநெல்வாயில்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.090.திருநெல்வாயில்
2.090.திருநெல்வாயில்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர்.
தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.
2442 | எந்தை
யீசனெம் பெருமான் சிந்தை செய்பவர்க் கல்லாற் கந்த மாமல ருந்திக் அந்தண் சோலை நெல்வாயில் |
2.090. 1 |
மணம் பொருந்திய மலர்களை உந்திக்கொண்டு பெருகிவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள், எம் தந்தை, ஈசன், பெரியோன், ஆனேற்றை ஏறிவருவோன் என்று அவன் பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி வழிபடவல்லவர்கட்கு அல்லால், ஏனையோர்க்குக் கைகூடாதது.
2443 | ஈர
வார்சடை தன்மேல் சீருஞ் செல்வமு மேத்தாச் வாரி மாமல ருந்தி ஆருஞ் சோலை நெல்வாயில் |
2.090. 2 |
சிறந்த மலர்களை வாரிக்கொண்டு உந்திவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள், குளிர்ந்த நீண்ட சடைமேல் இளம்பிறை அணிந்த எம்பெருமானே என்று கூறி அவன் சீரையும் செல்வத்தையும் ஏத்தாத பேதையர்கள் தொழுது பெறுதற்கு இயலாதது.
2444 | பிணி
கலந்தபுன் சடைமேற் பணி கலந்துசெய் யாத மணி கலந்துபொன் னுந்தி அணி கலந்தநெல் வாயில் |
2.090. 3 |
மணிகளையும் பொன்னையும் உந்திக் கொண்டு வரும் நீரை உடைய நிவாநதிக் கரைமேல் அழகுற அமைந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் பிணிப்போடு அமைந்த மென்மையான சடைமீது பிறையணிந்துள்ள சிவனே எனப் பக்தி செய்து அவன் திருத்தொண்டுகளை அன்போடு செய்யாத பாவிகள் தொழுது பெறுதற்கு இயலாதது.
2445 | துன்னவாடை
யொன் றுடுத்துத் உன்னி நைபவர்க் கல்லால் பொன்னு மாமணி யுந்திப் அன்ன மாருநெல் வாயில் |
2.090. 4 |
பொன்னையும் சிறந்த மணிகளையும் உந்திக் கொண்டு வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி மகிழும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள், தைத்த கோவண ஆடை ஒன்றைக் கட்டிக் கொண்டு தூய வெண்ணீறணிந்து திகழும் அவன் பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால் ஏனையோருக்குக் கைகூடுவதன்று.
2446 | >
வெருகு ரிஞ்சுவெங் காட்டில் உருகி நைபவர்க் கல்லால் முருகு ரிஞ்சுபூஞ் சோலை தருகு ரிஞ்சுநெல் வாயில் |
2.090. 5 |
மணம் தவழும் பூஞ்சோலைகளில் பூத்த மணம் மொய்க்கும் மலர்களைச் சுமந்து ஓடிவரும் நிவா நதி அருகில் வந்து பொருந்திச் செல்லும் நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள், காட்டுப்பூனைகள்வாழும் கொடிய சுடுகாட்டில் ஆடும் விமலனே! என்று அழைத்து அவன் பெருமைகளை எண்ணி மனம் உருகுபவர்கட்கு அல்லால் ஏனையோர்க்கு ஒரு சிறிதும் கைகூடாதது.
2447 |
உரவு நீர்சடைக் கரந்த பரவி நைபவர்க் கல்லாற் குரவ நீடுயர் சோலைக் அரவ மாருநெல் வாயில் |
2.090. 6 |
குராமரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவா நதிக்கரைமேல் விளங்கும் நீர்ப்பாம்புகள் இளைப்பாறி மகிழ்வதான நெல்வாயில் அரத்துறை அடிகளின் திரு வருள், வலிமை பொருந்திய கங்கை வெள்ளத்தைத் தன் சடைமிசை ஒளித்த ஒப்பற்றவனே என்று மனம் குளிர்ந்து ஏந்தி வணங்கி மனம் உருகுபவர்க்கு அல்லால் ஏனையோரிடத்து அவன் அன்புகாட்டுவதில்லை ஆதலின் கை கூடாதது.
2448 |
நீல மாமணி மிடற்று சீல மாந்தர்கட் கல்லாற் கோல மாமல ருந்திக் ஆலுஞ் சோலைநெல் வாயில் |
2.090. 7 |
அழகிய மலர்களை உந்திக் கொண்டு ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திரு அருள், நீலமணி போன்ற கண்டத்தினன், நீறணிந்த சிவன், என விரும்பி வழிபடும் சிவஞானியர்க்கு அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது.
2449 |
செழுந்தண் மால்வரை யெடுத்த அழுந்த வூன்றிய விரலான் கொழுங்கனிசுமந் துந்திக் அழுந்துஞ் சோலைநெல் வாயில் |
2.090. 8 |
கொழுமையான கனிகளைச் சுமந்து உந்திவரும் குளிர்ந்த நீரைஉடைய நிவாநதிக்கரைமேல் அழுந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் திருவருளை, செழுமையான குளிர்ந்த பெரிய கயிலைமலையைப் பெயர்த்த போர் வலிமிக்க இராவணன் அலறுமாறு அழுந்த ஊன்றிய விரலை உடையவர் என்று போற்ற வல்லார்க்கு அல்லாமல் ஏனையோர்க்குத் தாரார்.
2450 |
நுணங்கு நூலயன் மாலும் வணங்கி நைபவர்க் கல்லால் மணங்க மழ்ந்துபொன் னுந்தி அணங்குஞ் சோலைநெல் வாயில் |
2.090. 9 |
மணம் கமழ்ந்து பொன்னுந்தி வரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகு செய்யும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள், நுட்பமான நூல்களை அறிந்துணர்ந்த பிரமன் மால் ஆகிய இருவராலும் காணுதற்கு அரிய பொருளாய் இருப்பவனை வணங்கி நைந்து வழிபடுவார்க்கு வாய்க்குமேயன்றி ஏனையோர்க்குக் கைகூடாதது.
2451 |
சாக்கி யப்படு வாருஞ் பாக்கி யப்பட கில்லாப் பூக்க மழ்ந்துபொன் னுந்திப் ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் |
2.090. 10 |
மலர்களின் மணம் கமழ்ந்து பொன்னுந்திக் கரையை பொருது வரும் நீரை உடைய நிவா நதிக் கரைமேல் ஒலிக்கின்ற சோலைகளால் சூழப்பெற்று விளங்கும் நெல் வாயில் அரத்துறை அடிகள்தம், திருவருள் சாக்கிய மதத்தில் விழுபவர்களும் சமண சமயத்தைச் சார்பவரும் மற்றும் புறப்புறச் சமயங்களைத் தழுவுவார்களும் ஆகிய, சைவ நெறி சாரும் பாக்கியம் இல்லாத பாவிகளால், தொழுது பெறுவதற்கு இயலாதது.
2452 | கறையி
னார்பொழில் சூழ்ந்த அறையும் பூம்புனல் பரந்த முறைமை யாற்சொன்ன பாடல் பறையு மையுற வில்லைப் |
2.090. 11 |
கருமை நிறம் அமைந்த பொழில்கள் சூழ்ந்துள்ள சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், ஒலிக்கின்ற அழகிய புனல் பரவிய நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருளைப் பெறுதற்குரிய நெறிகளை முறையோடு தெரிவித்துள்ள இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கட்கு ஐயுறவின்றி வினைகள் நீங்கும். இஃது உறுதி.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வாயில் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அரத்துறை, அடிகள்தம், கரைமேல், நெல்வாயில், வாயில், தன்றால், னிவாமல்கு, திருவருள், குளிர்ந்த, சூழ்ந்த, சோலைகள், அல்லால், அடிகளின், நிவாநதிக்கரைமேல், சோலைநெல், கொண்டு, நைபவர்க், விளங்கும், அடிகள், திருநெல்வாயில், பாவிகள், இயலாதது, அமைந்த, வணங்கி, ஓடிவரும், கல்லால், உந்திக், தொழுது, பொருந்திய, கைகூடாதது, மலர்களை, ஏனையோர்க்குக், தொழச்செல்வ, கல்லாற், வருபுன, நீரைஉடைய, பெருமான், நதிக்கரைமேல், பெருமைகளை, சுமந்து, குளிர்புன, கமழ்ந்து, மற்றும், ஒலிக்கின்ற, மழ்ந்துபொன், அழுந்த, மாருநெல், திருமுறை, திருச்சிற்றம்பலம், சென்றுகை, சிவனெனப், இளம்பிறை, பெறுதற்கு, சிறந்த, அரத்துறையில், னுந்தி, மணிகளையும், உந்திவரும், ஒன்றுங்கை, ருந்திக், நிவாநதிக், பொன்னையும், பொருபுன