முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.088.திருமுல்லைவாயில்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.088.திருமுல்லைவாயில்
2.088.திருமுல்லைவாயில்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனநாதர்.
தேவியார் - கோதையம்மை.
2421 | துளிமண்டி
யுண்டு நிறம்வந்த கண்டன் ஒளிமண்டி யும்பர் உலகங் கடந்த களிமண்டு சோலை கழனிக் கலந்த தௌமண்டி யுண்டு சிறைவண்டு பாடும் |
2.088. 1 |
விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும், நடனமாடும் ஒளி பொருந்திய வடிவினனும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தௌவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலம் ஆகும்.
2422 | பருவத்தில்
வந்து பயனுற்ற பண்பன் அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் |
2.088. 2 |
பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும், அயனைப்படைத்த பரமனும், பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படுவோனுமாகிய அரனது ஊர், உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பிகளும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழுமையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமாகும்.
2423 |
வாராத நாடன் வருவார்தம் வில்லின் ஆராத வின்ப னகலாத அன்பன் பேராத சோதி பிரியாத மார்பின் தீராத காத னெதிநேர நீடு |
2.088. 3 |
மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன், உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும். இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பன் அருள் பவன் அகலாத அன்புடையவன் அத்தகைய அரன் அருள் செய்ய எழுந்தருளியுள்ள ஊர், நீங்காத ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
2424 | ஒன்றொன்றொ
டொன்று மொருநான்கொ டைந்து அன்றின்றொ டென்று மறிவான வர்க்கும் குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று சென்றொன்றொ டொன்று செறிவா னிறைந்த |
2.088. 4 |
ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு. புருடதத்துவம் இருபத்தைந்தாவது தத்துவம். இவ்விருபத்தைந்து தத்துவங்கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன். இதனை அறியாதார் இருபத்தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர். இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர், குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும், குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
2425 | கொம்பன்ன
மின்னி னிடையாளொர் கூறன் நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் செம்பொன்ன செவ்வி தருமாட நீடு |
2.088. 5 |
பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவன். நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன். நம் மேல் அன்புடையோன். மறையோதும் நாவினன். வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர், அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர், ஆடும் அரங்குகளும், அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம் பொன்னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத் தலமேயாகும்.
2426 | ஊனேறு
வேலி னுருவேறு கண்ணி ஆனேற தேறி யழகேறு நீறன் மானேறு கொல்லை மயிலேறி வந்து தேனேறு மாவின் வளமேறி யாடு |
2.088. 6 |
ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிறஒளியைப் பெற்றவன். ஆனேற்றின் மிசை ஏறி, அழகுதரும் திருநீற்றை அணிந்தவன். பாம்பினை அணிகலனாகப் பூண்டவன். அவ்வரனது ஊர், மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும் தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
2427 | நெஞ்சார
நீடு நினைவாரை மூடு அஞ்சாடு சென்னி அரவாடு கையன் மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் |
2.088. 7 |
மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன். ஆனைந்தாடுபவன். அரவு ஆடும் கையன். அனல்போன்றமேனியன் அவ் அவனது ஊர், மேகங்கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சையேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
2428 | வரைவந்
தெடுத்த வலிவா ளரக்கன் உரைவந்த பொன்னி னுருவந்த மேனி வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து திரைவந்து வந்து செறிதேற லாடு திருமுல்லை வாயி லிதுவே. |
2.088. 8 |
கயிலைமலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும், உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனிய ளாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
2429 | மேலோடி
நீடு விளையாடல் மேவு பாலாடு மேனி கரியானு முன்னி காலாடு நீல மலர்துன்றி நின்ற சேலோடு வாளை குதிகொள்ள மல்கு |
2.088. 9 |
திருமேனி நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன். வேதமுதல்வன். பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன். அவனது ஊர், காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய், கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமேயாகும்.
2430 | பனைமல்கு
திண்கை மதமா வுரித்த நினைவன்ன சிந்தை யடையாத தேரர் வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு |
2.088.10 |
பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன். நம்பால் அன்புடையவன். தன் திருவடியை நினையாத சமண தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன். அப்பெருமானது ஊர், வனங்களில் தாழை மரங்கள், மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும், அரும்புகளை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
2431 | அணிகொண்ட
கோதை யவணன்று மேத்த திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான அணிகொண்ட பத்து மிசைபாடு பத்தர் |
2.088. 11 |
அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள் செய்த எந்தையாவர். பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர். அப்பெருமான் எழுந்தருளிய திருமுல்லை வாயிலாகிய இத்தலத்தின் மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுல்லைவாயில் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருமுல்லை, வாயிலாகிய, லிதுவே, இத்தலமேயாகும், பொருந்திய, டொன்று, வரனூர், பாடும், அணிகொண்ட, சிந்தை, விளங்கும், பொன்னி, பத்தையும், வாழும், அவ்வரனது, யரனூர், நெரியச், செந்நெல், ளரனூர், மிகவும், மரங்கள், புன்னை, யுண்டு, சென்னி, போலும், பிரியாத, அன்புடையவன், பாம்பினை, எங்கள், திருச்சிற்றம்பலம், திருமுறை, திருமுல்லைவாயில், ஒன்றோடு, இத்தலம், நிற்பவன், குழுமிச், வயல்களில்