முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.086.திருநாரையூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.086.திருநாரையூர்
2.086.திருநாரையூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சௌந்தரேசர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
2399 | உரையினில்
வந்தபாவ முணர்நோய்களும்ம வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் |
2.086.1 |
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ்சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக.
2400 | ஊனடை
கின்றகுற்ற முதலாகி யுற்ற வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி கானிடை யாடிபூதப் படையா னியங்கு தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு |
2.086.2 |
உயரிய வானத்தில் விளங்குகின்ற வெள்ளிய மதியைச் சூடிய சென்னியினளனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய விகிர்தனும், இடுகாட்டில் பூதப் படையோடு ஆடுபவனும், இயங்கும் விடையூர்தியினனும், விளங்கும் தலைமீது வண்டு பாடும் தேனடைந்த மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப் பற்றிய பிணி நோய்களும் கெடும்.
2401 | ஊரிடை
நின்றுவாழும் உயிர்செற்ற காலன் பாரிடை மௌளவந்து பழியுற்ற வார்த்தை போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த |
2.086.3 |
திரிபுரத்தசுரரோடு போர் செய்து மும்மதில்களைக் கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள் கூடியமைத்த தேரில் நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால், ஊரின் கண் நின்று வாழ்ந்த உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மௌளப் பழித்துரைக்கும் வார்த்தைகளும் ஒழிவுறும்.
2402 | தீயுறு
வாயவாக்கை யதுபற்றி வாழும் தாயுற தன்மையாய தலைவன்றன் நாமம் பேயுற வாயகானில் நடமாடி கோல தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் |
2.086. 4 |
இடுகாட்டில் பேய்களோடு உறவுகொண்டு நடனமாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல் தேய்ந்த பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை வணங்கினால் தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். தாயாய்த் தலையளி செய்யும் அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும்.
2403 | வசையப
ராதமாய வுவரோதம் நீங்குந் மிசையவ ராதியாய திருமார் பிலங்கு இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் |
2.086. 5 |
மேலான வீட்டுலகில் இருப்பவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும் முப்புரிநூலர். விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள் இடையூறுகள் நீங்கும். தவம் வரும்.
2404 | உறைவள
ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம் குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன் திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற |
2.086.6 |
வேதம் வளரும் திருநாவினன் யானைத் தோலை மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன். தலைமைத் தன்மை உடையோன் அப்பெருமான் திருவடிகளையே திறைப்பொருளாக வளர்கின்ற தேவர்கள் தம் தொண்டால் அவன் அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக நிற்கும் உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும். குறைகளைப் போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும. நேசம் வளரும்.
2405 | தனம்வரு
நன்மையாகுந் தகுதிக் குழந்து இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செந்று முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச் சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் |
2.086. 7 |
முன்னொரு காலத்தில் முப்புரங்கள் அழியுமாறு சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைக் கைகளால் தொழுதால் தனம் வரும். நன்மையாகும். பெருமை பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும் வஞ்சகங்களை அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும்.
2406 |
உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் |
2.086. 8 |
அழிவில்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் மணமலர்களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக.
2407 | வேறுயர்
வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க தேறிய சிந்தைவாய்மை தௌவிக்க நின்ற சேறுயர் புவின்மேய பெருமானும் மற்றைத் சீறிய செம்யைமாகுஞ் சிவன்மேய செல்வத் |
2.086. 9 |
சேற்றில் உயர்ந்து தோன்றும் தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச் சீறி எழுந்த சிவபிரான் மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு இறப்பற்ற தன்மை கிடைக்கும். வினையாகிய துக்கம், மிக்க பகை இவற்றைத் தீர்க்கும். தௌந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ மறைந்து நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும்.
2408 | மிடைபடு
துன்பமின்ப முளதாக்கு முள்ளம் படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும் செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் |
2.086. 10 |
சூலப்படையைக் கையில் ஏந்திப் பலியேற்கும் தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன மாயுமாறு செய்து காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம் உளதாகும். உள்ளம் ஒளியாக்கும. ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள்.
2409 | எரியொரு
வண்ணமாய வுருவானை யெந்தை திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க |
2.086. 11 |
தீயைப் போலச் சிவந்த நிறத்தை உடையவனாய், எம் தந்தையாகிய பெருமானாய் மனமுருகி நினையாத அசுரர்களின் திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக் காத்த சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி மறைஞான சம்பந்தன் உரைத்த இத்தமிழ்மாலையை மொழிபவர் திருவளரும் திருவருட்பேற்றுடன் செம்மையினராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாரையூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருநாரை, செல்வத், யூர்கை, சிவன்மேய, திருநாரையூரைக், தொழுதால், சிவபிரான், கைகளால், வளரும், எழுந்தருளிய, காலத்தில், நிற்கும், நீங்கும், வைத்துகந்த, முடிமேல், விளங்கும், சிவந்த, நெஞ்சில், கிடைக்கும், மறைஞான, சிந்தை, பெருமை, முடிகள், திருநாரையூரைத், வழிபாடு, ஆதலின், செய்து, பெருமானை, கையால், திருச்சிற்றம்பலம், திருமுறை, இடுகாட்டில், திருநாரையூர், மருவும், நின்று, பெருமான், தேவர்கள், விடமுண்ட