முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.082.திருத்தேவூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.082.திருத்தேவூர்
2.082.திருத்தேவூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தேவகுருநாதர்.
தேவியார் - தேன்மொழியம்மை.
2356 | பண்ணி
லாவிய மொழியுமை வானவர் கோன்விம தெண்ணி லாமதி தவழ்தரு அண்ணல் சேவடி யடைந்தன |
2.082. 1 |
இனிய மொழியினளாகிய உமையம்மை பங்கனும், எம்தலைவனும், விண்ணுலகில் வாழும் வானவர் தலைவனும், குற்றமற்றவனும், விடையூர்தியும், ஆகிய, தௌந்த நிலவொளியைத் தரும் மதிதவழும் மாளிகைகளைக் கொண்ட தேவூரில் விளங்கும் அண்ணலின் சேவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் இலராயினோம்.
2357 | ஓதி
மண்டலத் தோர்முழு சோதி வானவன் றுதிசெய தீதில் பங்கயந் தெரிவையர் ஆதி சேவடி யடைந்தன |
2.082. 2 |
நிலவுலகில் வாழ்வோர் ஓதிஉய்ய, உதயகிரியில் ஏறிவரும் கதிரவனால் வழிபடப்பட்ட வானவர் தலைவனாய் விளங்குவோனும், தன்னைத் துதிப்பாரைக் கண்டு மகிழ்ந்து உடனே அருள் புரிபவனும், ஆகிய குற்றமற்ற தாமரை மலர்கள் மகளிர்முகம் போல மலரும் சிறப்பினதாகிய தேவூரில் விளங்கும் முழுமுதற் கடவுளின் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.
2358 | மறைக
ளான்மிக வழிபடு கறுவு கொண்டவக் காலனைக் செறுவில் வாளைகள் சேலவை அறவன் சேவடி யடைந்தன |
2.082. 3 |
வேதவிதிப்படி மிக்க வழிபாடுகளை இயற்றிய மார்க்கண்டேயான் உயிரைக் கவர்தற்குச் சினந்து வந்த காலனைக் காய்ந்த கடவுளும், சேற்றில் வாழும் வாளைமீன்களும் சேல்களும் சண்டையிடுகின்ற வயல்களை உடைய தேவூரில் விளங்கும் அறவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.
2359 | முத்தன்
சில்பலிக் கூர்தொறு பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் சித்தன் மாளிகை செழுமதி அத்தன் சேவடி யடைந்தன |
2.082. 4 |
பாசங்களின் இயல்பாகவே விடுபட்டவனும், சிலவாக இடும் உணவுக்கு ஊர்கள் தோறும் முறையாகப் பலியேற்கும் பித்தனும், சிவந்தசடையைக் கொண்டுள்ள பிஞ்ஞகனும், தன் அடியவர்களின் சித்தத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய மாளிகைகளையும், மதிதவழும் பொழில்களையும் உடைய தேவூர்ப்பெருமான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.
2360 | பாடு வாரிசை பல்பொருட் கூடு வார்துணைக் கொண்டதம் தேடு வார்பொரு ளானவன் ஆடு வானடி யடைந்தன |
2.082.5 |
இசைபாடுபவர்க்கும், பல்பொருள் பயனாக அவன் இருத்தலை அறிந்துணர்ந்து அன்போடு கூடுவார்க்கும், உலகில் துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு அவனையே பற்றித் தேடுவார்க்கும் பொருளாயிருப்பவனும், செறிந்த பொழில்களை உடைய தேவூரில் நடனம் புரிபவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.
2361 | பொங்கு
பூண்முலைப் புரிகுழல் மங்கை பங்கினன் கங்கையை திங்கள் சூடிய தீநிறக் அங்க ணன்றனை யடைந்தன |
2.082. 6 |
கிளர்ந்து எழுந்த அணிகலன் பூண்டுள்ள தனங்களையும், நெறிந்த கூந்தலையும், வரிவளையல்களையும் கொண்டுள்ள மலைமங்ககை பங்கினனும், கங்கையை வளர்ந்த சடைமீது வைத்தவனும், திங்கள் சூடியவனும், தீப்போன்ற செந்நிறமுடைய கடவுளும் ஆகிய, அழகிய தேவூரில் எழுந்தருளிய அழகிய கருணை யாளனை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.
2362 | வன்பு
யத்தவத் தானவர் தன்பு யத்துறத் தடவரை தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் அன்பன் சேவடி யடைந்தன |
2.082. 7 |
வலியதோள்களை உடைய அவுணர்தமபுரங்கள் எரியுமாறு தன்தோள்களால் பெரிய மேருமலையை வில்லாகப் பொருந்த வளைத்தவனும், தென்தமிழ்க் கலைகளை நன்குணர்ந்தவர் வாழும் தேவூரில் விளங்கும் அன்பனுமாகிய சிவபிரானின் சேவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.
2363 | தருவு
யர்ந்தவெற் பெடுத்தவத் வெருவ வூன்றிய திருவிர தெருவு தோறுநற் றென்றல்வந் அரவு சூடியை யடைந்தன |
2.082. 8 |
சிறப்புடைய மரங்கள் உயர்ந்து வளர்ந்த கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பத்துத் தலைகளை உடைய இராவணன் நெரிந்து வெருவுமாறு ஊன்றிய கால்விரலை, அவன் பாடல் கேட்டு நெகிழச்செய்து அவனுக்கு வாள் முதலியவற்றை வழங்கியவனும், தெருக்கள் தோறும் நல்ல தென்றல் வந்துலவும் தேவூரில் பாம்பணிந்தவனாய் விளங்குவோனுமாகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.
2364 | முந்திக்
கண்ணனு நான்முக எந்தை திண்டிற லிருங்களி செந்தி னத்திசை யறுபத அந்தி வண்ணனை யடைந்தன |
2.082. 9 |
திருமால் பிரமர்கள் அடிமுடிகாண்போம் என முற்பட்டுத் தேடிக் காணாது தொழுத எந்தையும், திண்ணிய வலிமை பொருந்திய பெரிய யானையை உரித்த எம்பெருமானும், செந்து என்னும் இசைவகையை இசைத்து வண்டுகள் முரலும் தேவூரில் விளங்கும் அந்திவண்ணனும் ஆகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.
2365 | பாறு
புத்தருந் தவமணி கூறி வைத்ததோர் குறியினைப் தேறி மிக்கநஞ் செஞ்சடைக் ஆறு சூடியை யடைந்தன |
2.082. 10 |
ஓடித் திரியும் புத்தர்களும், தவத்தை மேற்கொண்ட சமணரும் பலநாள்களாகக் கூறிவரும் இலக்குப் பிழையானது எனத் தௌவுற்று, எங்கும் மிகுந்து தோன்றும் நம் செஞ்சடைக் கடவுள் எழுந் தருளிய தேவூரை அடைந்து கங்கையை அணிந்துள்ள சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.
2366 | அல்ல
லின்றிவிண் ணாள்வர்கள் நல்ல செந்தமிழ் வல்லவன் எல்லை யில்புகழ் மல்கிய தொல்லை நம்பனைச் சொல்லிய |
2.082. 11 |
காழிவாழ் மக்களுக்குத்தலைவனும், நல்ல செந்தமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் எல்லையற்ற புகழ் பொருந்திய அழகிய தேவூரில் விளங்கும் பழமையான இறைவனைப் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் துன்பங்கள் இன்றி விண்ணுலகை ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தேவூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - யடைந்தன, மல்லலொன், அல்லல்கள், ஆதலால், தேவூரில், இலரானோம், அடைந்தோம், சிறிதும், விளங்கும், தேவூர், றேவூர், திருவடிகளை, அடைந்துள்ளோம், வானவர், கங்கையை, இலராயினோம், பொருந்திய, வாழும், சிவபிரானைச், செந்தமிழ், பற்றித், திங்கள், செஞ்சடைக், சமணரும், சூடியை, வளர்ந்த, கடவுடென், காலனைக், மதிதவழும், சேவடிகளை, பெருமான், திருச்சிற்றம்பலம், திருமுறை, திருத்தேவூர், கடவுள், தோறும், திரியும், சிவபிரான், கடவுளும், கொண்டுள்ள