முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.077.திருஅறையணிநல்லூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.077.திருஅறையணிநல்லூர்
2.077.திருஅறையணிநல்லூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர்.
தேவியார் - அருள்நாயகியம்மை.
2302 | பீடினாற்பெரி
யோர்களும் வீடினாலுயர்ந் தார்களும் சூடினார்மறை பாடினார் ஆடினாரறை யணிநல்லூர் |
2.077. 1 |
அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும், வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின் கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள் கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர்.
2303 | இலையினார்சூல
மேறுகந் நிலையினாலொரு காலுறச் அலையினார் புனல்சூடிய தலையினாற்றொழு தோங்குவார் |
2.077. 2 |
இலைவடிவமான முத்தலைச் சூலத்தை ஏந்தி, ஆன் ஏற்றில் விரும்பி ஏறி வருபவன். இமையவர் வேண்ட நிலைத்த ஒரு திருவடியால் வில்லை ஊன்றித் திரிபுரங்களை எய்தவன். அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய தலைவன். அப்பெருமான் எழுந்தருளிய அறையணிநல்லூர் சென்று அவனைத் தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர்.
2304 | என்பினார்கனல்
சூலத்தார் பின்பினாற்பிறங் குஞ்சடைப் முன்பினார்மூவர் தாந்தொழு கன்பினாரறை யணிநல்லூர் |
2.077.3 |
என்பு மாலை அணிந்தவர். கனலும் சூலத்தை ஏந்தியவர். விளங்கும் சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர். பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.
2305 | விரவுநீறுபொன்
மார்பினில் உரவுநஞ்சமு தாகவுண் அரவுநீள்சடைக் கண்ணியார் பரவுவார்பழி நீங்கிடப் |
2.077. 4 |
அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும், வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும், பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழி பாவங்கள் நீங்கப் பெறுவர்.
2306 | தீயினார்திகழ்
மேனியாய் ஆயினாய்கொன்றை யாயன மேயினார்தம தொல்வினை பாயினாயதிர் கழலினாய் |
2.077. 5 |
தீப்போல விளங்கும் செம்மேனியனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவனே! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக்கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் காய்ந்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.
2307 | விரையினார்கொன்றை
சூடியும் அரையினாரறை யணிநல்லூர் நரையினார்விடை யூர்தியார் உரையினாலுயர்ந் தார்களு |
2.077. 6 |
மணம் கமழும் கொன்றை மாலையைச் சூடியவர். சினம் மிக்க பாம்பினை அரையில் கட்டியவர். அறையணிநல்லூரில் விளங்கும் தலைமையாளர். அழகிய வெண்ணிறமான விடையை ஊர்தியாக உடையவர். திகம்பரர். அப்பெருமானை மலர்தூவி உரையினால் போற்றுபவர் புகழாளர் ஆவர்.
2308 | வீரமாகிய
வேதியர் ஈரமாகிய வுரிவைபோர்த் ஆரமாகிய பாம்பினார் வாரமாய்நினைப் பார்கள்தம் |
2.077. 7 |
ஞானமே வடிவான வேதியர். சினந்து வந்த பெரிய களிற்று யானையின் ஈரம் உடைய தோலைப் போர்த்து உமையம்மையார் பாற் சென்றவர். பாம்பினை ஆரமாகக் கொண்டவர். அறையணி நல்லூரில் விளங்கும் தலைமையாளர். அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும்.
2309 | தக்கனார்பெரு
வேள்வியைத் முக்கணான்மறை பாடிய அக்கினோடெழி லாமைபூண் நக்கனாரவர் சார்வலால் |
2.077. 8 |
தக்கனது பெருவேள்வியைத் தகர்த்துகந்தவர். தாழ்ந்து தொங்கும் சடைகளையும் மூன்று கண்களையும் உடையவர். முனிவர்கள் தொழ வேதங்களை முறையோடு அருளியவர். என்பு மாலைகளையும் அழகிய ஆமை ஓட்டினையும் அணிந்த தலைமையாளர். அறையணிநல்லூரில் விளங்கும் திகம்பரர். நாங்கள் அவரது சார்பன்றி நலம் செய்யும் வேறு சார்பிலோம்.
2310 | வெய்யநோயிலர்
தீதிலர் செய்வதேயலங் காரமா ஐயமேற்றுணுந் தொழிலரா சைவனாரவர் சார்வலால் |
2.077. 9 |
வெம்மையான நோய்கள் எவையும் இல்லாதவர். வெறிபிடித்தவர் போலப் பிறர் பின் செல்லாதவர். அவர் செய்வதே அலங்காரம் ஆகும். இவற்றை முறையே தௌந்து இன்புறவேண்டின் ஐயமேற்றுண்ணும் தொழிலரும் தலைமையாளரும் ஆகிய அறையணி நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக.
2311 | வாக்கியஞ்சொல்லி
யாரொடும் சாக்கியஞ்சம ணென்றிவை ஆக்கியம்மழு வாட்படை பாக்கியங்குறை யுடையீரேற் |
2.077. 10 |
நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும் வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர். திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும் கழியப்பெறுவீர்.
2312 | கழியுலாங்கடற்
கானல்சூழ் பழியிலாமறை ஞானசம் மொழியினாலறை யணிநல்லூர் கெழுவினாரவர் தம்மொடுங் |
2.077. 11 |
உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள் சூழ்ந்த தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறை வல்ல ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅறையணிநல்லூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - யணிநல்லூர், விளங்கும், அண்ணலாரறை, அடைந்து, தலைமையாளர், அறையணிநல்லூர், உடையவர், அறையணி, பாம்பினை, அறையணிநல்லூரை, அறையணிநல்லூரில், திகம்பரர், யானையின், வேதியர், கொன்றை, சார்வலால், நாங்களே, தொங்கும், வார்களே, அங்கையாற்றொழு, திருச்சிற்றம்பலம், திருமுறை, வேதங்களை, சூலத்தை, திருஅறையணிநல்லூர், தாழ்ந்து, சூடியவர், முக்கண்மூர்த்திதன், தொழுது