முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.070.திருப்பிரமபுரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.070.திருப்பிரமபுரம்
2.070.திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென் றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.
2222 |
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங் பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம் |
2.070. 1 |
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும்.
2223 | வேணுபுரம்
பிரமனூர் புகலிபெரு வெங்குரு தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங் |
2.070. 2 |
நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பை உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும்.
2224 | புகலி
சிரபுரம் வேணுபுரஞ் சண்பை நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல் அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர் பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது |
2.070. 3 |
நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.
2225 | வெங்குருத்
தண்புகலி வேணுபுரஞ் சண்பை தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் |
2.070. 4 |
நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடைமுடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.
2226 | தொன்னீரிற்
றோணிபுரம் புகலி வெங்குருத் இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன் பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம் |
2.070. 5 |
நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும்.
2227 | தண்ணந்
தராய்புகலி தாமரையா னூர்சண்பை வண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர் விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர கண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது |
2.070. 6 |
நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப் பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும்.
2228 | சீரார்
சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர பேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய |
2.070. 7 |
சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண் பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.
2229 | புறவஞ்
சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ் |
2.070. 8 |
நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும்.
2230 | சண்பை
பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த |
2.070. 9 |
நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக்
2231 | செழுமலிய
பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் கண்ணுதலான் |
2.070. 10 |
செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.
2232 | கொச்சை
வயம்பிரம னூர்புகலி வெங்குருப் நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள் நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம் |
2.070. 11 |
நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.
2233 | காவி
மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற் நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை |
2.070. 12 |
குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பிரமபுரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பன்னிரு, கழுமலமாகும், உள்ளிட்ட, வேணுபுரம், பூந்தராய், தோணிபுரம், கொச்சை, சிரபுரம், முதலாக, கருதும், கழுமலநாங், பிரமனூர், வேணுபுரந், கைதொழுது, தோணிபுர, முதலாகத், மூதூர், கண்ணுதலான், புறவஞ், புறவங், கழுமலத்தின், கழுமலநாம், திருப்பெயர்களை, ஈறாகப், அச்சங்கள், பெயர்களை, நம்மேல், கொண்டது, சிரபுரமுங், வெங்குருவொ, வயந்தராய், புறவம், னூர்புகலி, கொச்சைவயஞ், சிவபிரானது, டந்தண், பன்னிரண்டு, வெங்குரு, வெங்குருப், கொச்சைவயம், கொச்சைவய, கொண்டு, திருச்சிற்றம்பலம், திருமுறை, தண்புகலி, சிவபிரான், வெங்குருத், வேணுபுரஞ், திருப்பிரமபுரம், திருப்பெயர்களைக், பெயர்களைக்கொண்டதும்