முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.069.திருப்பாண்டிக்கொடுமுடி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.069.திருப்பாண்டிக்கொடுமுடி
2.069.திருப்பாண்டிக்கொடுமுடி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர்.
தேவியார் - பண்மொழியம்மை.
2211 | பெண்ணமர்
மேனியி னாரும் கண்ணமர் நெற்றியி னாருங் எண்ணம ருங்குணத் தாரு பண்ணமர் பாடலி னாரும் |
2.069.1 |
பாண்டிக்கொடுமுடி இறைவர் மாதொரு கூறர். பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர். எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவர்.
2212 | தனைக்கணி
மாமலர் கொண்டு வினைப்பகை யாயின தீர்க்கும் நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் |
2.069. 2 |
பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த்துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர்.
2213 | சடையமர்
கொன்றையி னாருஞ் புடையமர் பூதத்தி னாரும் விடையம ருங்கொடி யாரும் படையமர் கொள்கையி னாரும் |
2.069. 3 |
பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை உடையவர். புள்ளிளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர். விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப் படைக்கலன்களாக உடையவர்.
2214 | நறைவளர்
கொன்றையி னாரு கறைவளர் மாமிடற் றாருங் மறைவளர் பாடலி னோடு பறைவளர் பாடலி னாரும் |
2.069. 4 |
பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக் கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல், மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர்.
2215 | போகமு
மின்பமு மாகிப் ஆகமு றைவிட மாக நாகமுந் திங்களுஞ் சூடி பாகமு கந்தவர் தாமும் |
2.069.5 |
பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால் எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியன வற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர்.
2216 | கடிபடு
கூவிள மத்தங் பொடிபட முப்புரஞ் செற்ற வடிவுடை மங்கைதன் னோடு படிபடு கோலத்தி னாரும் |
2.069.6 |
பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம் கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர்.
2217 | ஊனமர்
வெண்டலை யேந்தி தேனம ரும்மொழி மாது கானமர் மஞ்ஞைக ளாலுங் பானல நீறணி வாரும் |
2.069.7 |
பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய வெண்தலையை ஏந்திப் பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில் வாழும் மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர்.
2218 | புரந்தரன்
றன்னொடு வானோர் பெருந்திறல் வாளரக் கன்னைப் கருந்திரை மாமிடற் றாருங் பரந்திழி காவிரிப் பாங்கர்ப் |
2.069.8 |
பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும் காவிரியின் அருகில் உறைபவர்.
2219 | திருமகள்
காதலி னானுந் பெருமக னும்மவர் காணாப் மருமலி மென்மலர்ச் சந்து பருமணி நீர்த்துறை யாரும் |
2.069.9 |
திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் காணாதவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம் ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி இறைவராவார்.
2220 | புத்தரும்
புந்தியி லாத மெய்த்தவம் பேசிட மாட்டார் சித்தருந் தேவருங் கூடிச் பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் |
2.069. 10 |
புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால் உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர் பாண்டிக்கொடுமுடி இறைவர்.
2221 | கலமல்கு
தண்கடல் சூழ்ந்த பலமல்கு வெண்டலை யேந்தி சொலமல்கு பாடல்கள் பத்துஞ் நலமல்கு சிந்தைய ராகி |
2.069. 11 |
மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாண்டிக்கொடுமுடி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பாண்டிக், கொடுமுடி, பாண்டிக்கொடுமுடி, இறைவர், னாரும், உடையவர், கொண்டு, யாரும், தாரும், பொருந்திய, கொன்றையி, கொன்றை, அணிந்தவர், நன்னெறி, வாரும், யேந்தி, வெண்டலை, போற்றி, பாடல்கள், விளங்குபவர், கரைமேல், காவிரியின், மங்கைதன், விளங்கும், திருமகள், தோன்றிய, தீர்ந்து, சூழ்ந்த, பத்தர்கள், கொள்கையி, நிற்பவர், மாமலர், தங்கள், றாரும், மேனியி, திருமுறை, திருச்சிற்றம்பலம், நெஞ்சில், வெண்மழு, மொந்தை, கையில், றாருங், மாமிடற், மூவிலைச், திருப்பாண்டிக்கொடுமுடி, போற்றியென்