முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.068.திருக்கடம்பூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.068.திருக்கடம்பூர்
2.068.திருக்கடம்பூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடேசுவரர்.
தேவியார் - சோதிமின்னம்மை.
2200 | வானமர்
திங்களு நீரு தேனமர் கொன்றையி னானைத் கானம ரும்பிணை புல்கிக் தானமர் கொள்கையி னானைத் |
2.068.1 |
வானிற் பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத் தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும் ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.
2201 | அரவினொ
டாமையும் பூண்டு விரவுந் திருமுடி தன்மேல் பரவுந் தனிக்கடம் பூரிற் இரவும் பகலும் பணிய |
2.068. 2 |
பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு, அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து அழகிய முடிமீது பொருந்திய வெண்பிறையைச்சூடிப் பலராலும் விரும்பிப் பரவப் பெறும் சிறந்த கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று அண்ணலின் திருவடிகளை இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம்.
2202 | இளிபடு
மின்சொலி னார்க தௌபடு கொள்கை கலந்த ஒளிதரு வெண்பிறை சூடி புலியத ளாடை புனைந்தான் |
2.068. 3 |
இளி என்னும் இசை இனிமையும் சொல்லினிமையும் உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர் ஆகுதி வேட்கும் கடம்பூரில் ஒளிபொருந்திய வெண்பிறைசூடி உமையம்மையோடு உடனாய்ப் புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை நாம் போற்றுவோம்.
2203 | பறையொடு
சங்க மியம்பப் கறையுடை வேல்வரிக் கண்ணார் மறையொலி கூடிய பாடன் பிறையுடை வார்சடை யானைப் |
2.068. 4 |
பறை சங்கம் முதலிய ஒலிக்கப் பலவகையான கொடிகள் கட்டிய மாடவீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த கடம்பூரில் வேதஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறைசூடிய நீண்ட சடையை உடைய பெருமானைப் பேண வல்லவர் பெரியோர் ஆவர்.
2204 | தீவிரி
யக்கழ லார்ப்பச் நாவிரி கூந்தனற் பேய்கள் காவிரி கொன்றை கலந்த பாவிரி பாடல் பயில்வார் |
2.068.5 |
தீப்போலும் சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக் கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க நடனம் ஆடுபவனும் கொன்றை மாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய சிவபெருமானது கடம்பூரை அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப் பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர்.
2205 | தண்புன
னீள்வய றோறுந் கண்புணர் காவில்வண் டேறக் பெண்புனை கூறுடை யானைப் பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே. |
2.068. 6 |
குளிர்ந்த நீர்நிறைந்த வயல்களில் முளைத்த தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகிமகிழவும், கண்கவரும் சோலைகளில் வண்டுகள் மொய்க்க மலர்கள் தேன்பிலிற்றவும் அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய் விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார் பாவம் இல்லாதவராவர்.
2206 | பலிகெழு
செம்மலர் சாரப் கலிகெழு வீதி கலந்த ஒலிதிகழ் கங்கை கரந்தா புலியத ளாடையி னான்றன் |
2.068. 7 |
சிவபூசகர்கள் பூசைக்கு வேண்டு செம்மையான மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலிநிறைந்த வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை முடியில் மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய் விளங்கும் பெருமான் புகழைப் போற்றுதலே பொருள் உடைய செயலாகும்.
2207 | பூம்படு
கிற்கயல் பாயப் காம்படு தோளியர் நாளுங் மேம்படு தேவியொர் பாக தேம்படு மாமலர் தூவித் |
2.068. 8 |
அழகிய நீர் நிலைகளில் கயல்கள் பாய, அதனால் பறவை இரிந்தோட விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய் விளங்குவோனும் புறங்காட்டில் ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து மாதொருபாகனே! எம்மானே! எனக்கூறி மலர்தூவித் தொழத் தீயனகெடும.
2208 | திருமரு
மார்பி லவனுந் இருவரு மாயறி வொண்ணா கருவரை காலி லடர்த்த மருவிய பாடல் பயில்வார் |
2.068. 9 |
திருமகள் மருவிய மார்பினனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு எரியுருவான ஈசனும் கரியமலைபோன்ற இராவணனைக் காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து, பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார் வானுலகம் பெறுவர்.
2209 | ஆடை
தவிர்த்தறங் காட்டு சோடைக ணன்னெறி சொல்லார் வேடம் பலபல காட்டும் காடதனினட மாடுங் |
2.068.10 |
ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை உடுத்து அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச் சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பல்வேறு வடிவங்களைக் கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும் கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.
2210 | விடைநவி
லுங்கொடி யானை கடைநவி லுங்கடம் பூரிற் நடைநவின் ஞானசம் பந்தன் படைநவில் பாடல் பயில்வார் |
2.068.11 |
விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள காழிமாநகரில் தோன்றிய நன்னடை உடைய ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடம்பூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பூரில், கடம்பூரில், பயில்வார், மகிழும், விளங்கும், மருவிய, பெருமான், லான்கடம், கண்ணுத, மகளிர், அடைந்து, கொன்றை, கடம்பூரை, பொருந்திய, காட்டில், பெருமானைப், பாடல்கள், மிலாரே, யானைப், பாடல்களைப், பழியொடு, பெருமானது, பகலும், லுங்கடம், எழுந்தருளிய, னானைத், வார்சடை, திருமுறை, திருச்சிற்றம்பலம், பூண்டு, விரும்பிப், உடுத்து, புலியத, திருக்கடம்பூர், இரவும், பூரிற், சேர்நெடு