முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.064.திருமுதுகுன்றம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.064.திருமுதுகுன்றம்
2.064.திருமுதுகுன்றம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2157 | தேவா
சிறியோம் பிழையைப் பொறுப்பாய் ஆவா வென்றங் கடியார் தங்கட் ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா மூவா முனிவர் வணங்குங் கோயின் |
2.064. 1 |
அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையை பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
2158 | எந்தை
யிவனென் றிரவி முதலா சிந்தை யுள்ளே கோயி லாகத் மந்தி யேறி யினமா மலர்கள் முந்தித் தொழுது வணங்குங் கோயின் |
2.064.2 |
எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக் குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
2159 | நீடு
மலரும் புனலுங் கொண்டு தேடு மடியார் சிந்தை யுள்ளே பாடுங் குயிலி னயலே கிள்ளை மூடுஞ் சோலை முகிறோய் கோயின் |
2.064. 3 |
மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும் இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச் சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
2160 | தெரிந்த
வடியார் சிவனே யென்று குருந்த மலருங் குரவி னலருங் இருந்து நின்று மிரவும் பகலு முரிந்து மேகந் தவழுஞ் சோலை |
2.064.4 |
அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும் நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும் விட்டு விட்டு மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும்.
2161 | வைத்த
நிதியே மணியே யென்று சித்த நைந்து சிவனே யென்பார் கொத்தார் சந்துங் குரவும் வாரிக் முத்தா றுடைய முதல்வர் கோயின் |
2.064.5 |
சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்.
2162 | வம்பார்
கொன்றை வன்னி மத்த நம்பா வென்ன நல்கும் பெருமா கொம்பார் குரவு கொகுடி முல்லை மொய்ம்பார் சோலை வண்டு பாடு |
2.064. 6 |
மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த மலர் ஆகியவற்றைத்தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும் பெருமான் உறைகோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடிவகை முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய் விளங்கும் சோலைகளை உடைய முது குன்றாகும்.
2163 | வாசங்
கமழும் பொழில்சூ ழிலங்கை நாசஞ் செய்த நங்கள் பெருமா பூசைசெய்து வடியார் நின்று மூசி வண்டு பாடுஞ் சோலை |
2.064. 8 |
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்.
2164 | அல்லி
மலர்மே லயனு மரவின் சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் கொல்லை வேடர் கூடி நின்று முல்லை யயலே முறுவல் செய்யும் |
2.064. 9 |
அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று கும்பிட அதனைக் கண்டு முல்லைக்கொடிகள் அருகில் இருந்துகண்டு, அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும்.
2165 | கருகு
முடலார் கஞ்சி யுண்டு றுருகு சிந்தை யில்லார்க்கயலா திருகல் வேய்கள் சிறிதே வளையச் முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் |
2.064.10 |
கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும்.
2166 | அறையார்
கடல்சூ ழந்தண் காழிச் முறையான் முனிவர் வணங்குங் கோயின் குறையாப் பனுவல் கூடிப் பாட பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் |
2.064. 11 |
ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும் வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால் வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக் கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுதுகுன்றம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முதுகுன்றே, முதுகுன்றாகும், நின்று, கொண்டு, கோயிலை, கோயின், முல்லை, சிந்தை, விளங்கும், மலர்களையும், வணங்குங், உடையது, கோயில், அடியவர், வணங்கும், னுறைகோயில், செய்யும், கொன்றை, முறுவல், நல்கும், பெருமா, பெருமான், போன்றவனே, சிறிதே, உறையும், கமழும், சோலைகளை, கும்பிட, வடியார், முனிவர்கள், யுள்ளே, முனிவர், பெரியோனே, திருமுறை, திருச்சிற்றம்பலம், தொழுது, செய்து, விட்டு, நைந்து, குருந்த, திசைதோறும், திருமுதுகுன்றம், யென்று, வாரிக்