முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.062.திருமீயச்சூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.062.திருமீயச்சூர்
2.062.திருமீயச்சூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர்.
தேவியார் - சுந்தரநாயகியம்மை.
2135 | காயச்
செவ்விக் காமற் காய்ந்து பாயப் படர்புன் சடையிற் பதித்த மாயச் சூரன் றறுத்த மைந்தன் மீயச் சூரே தொழுது வினையை |
2.062. 1 |
அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள்.
2136 | பூவார்
சடையின் முடிமேற் புனல நாவார் மறையர் பிறையர் நறவெண் ஏவார் மலையே சிலையாக் கழியம் மேவார் புரமூன் றெரித்தார் மீயச் |
2.062.2 |
திருமீயச்சூர் இறைவர் மலர் அணிந்துள்ள சடைமுடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர். நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில் திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.
2137 | பொன்னேர்
கொன்றை மாலை புரளு மின்னேர் சடைக ளுடையான் மீயச் தன்னேர் பிறரில் லானைத் தலையால் அந்நே ரிமையோ ருலக மெய்தற் |
2.062. 3 |
பொன்போன்ற கொன்றை மாலைபுரளும் மார்பினனும், மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார் அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரிதன்று.
2138 | வேக
மதநல் லியானை வெருவ பாக முமையோ டாகப் படிதம் நாக மரைமே லசைத்து நடமா மேக முரிஞ்சும் பொழில்சூழ் மீயச் |
2.062. 4 |
வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக அவ்வம்மையார் பாடப் பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக் கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர் இறைவன் ஆவான்.
2139 | விடையார்
கொடியார் சடைமேல் விளங்கும் படையார் பூதஞ் சூழப் பாட பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே. |
2.062. 5 |
திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார். சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர். படைகளாக அமைந்தபூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண் வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற நடையை உடையவர்.
2140 | குளிருஞ்
சடைகொண் முடிமேற் கோல ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் நளிரும் மணிசூழ் மாலை நட்ட மிளிரும் மரவ முடையான் மீயச் |
2.062. 6 |
திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக் கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன் கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்குபவனும் அரவினை அணிந்தவன்.
2141 | நீல
வடிவர் மிடறு நெடியர் கோல வடிவு தமதாங் கொள்கை காலர் கழலர் கரியி னுரியர் மேலர் மதியர் விதியர் மீயச் |
2.062.7 |
திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர். ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக் கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர்.யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர். மதியை அணிந்தவர். உலகைப் படைப்பவர்.
2142 | புலியி
னுரிதோ லாடை பூசும் ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா வலிய திரடோள் வன்க ணரக்கர் மெலிய வரைக்கீ ழடர்த்தார் மீயச் |
2.062. 8 |
திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர்.
2143 | காதின்
மிளிருங் குழையர் கரிய போதி லவனு மாலுந் தொழப்பொங் கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் மேதி படியும் வயல்சூழ் மீயச் |
2.062. 9 |
வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும் பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை அணிந்தவர: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும் தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர்.
2144 | கண்டார்
நாணும் படியார் கலிங்க கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த பெண்டான் பாக முடையார் பெரிய விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் |
2.062. 10 |
கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.
2145 | வேட
முடைய பெருமா னுறையு நாடும் புகழார் புகலி ஞான பாட லாய தமிழீ ரைந்து ஆடு மடியா ரகல்வா னுலகம் |
2.062.11 |
பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமீயச்சூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருமீயச்சூர், சூராரே, இறைவர், அணிந்தவர், விளங்கும், கொண்டு, உடையவர், மீயச்சூர், சூரானே, பெருமான், விடையார், பூசும், சடைமேற், வரிவண், சடைமேல், வணங்குவார், இறைவன், எரித்தவர், பதித்த, தொழுது, காய்ந்து, திருச்சிற்றம்பலம், திருமுறை, கங்கையை, முடிமேற், முப்புரங்களை, கொன்றை, பகைவரின், றெரித்தார், புரமூன், தலையால்