முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.061.திருவெண்காடு
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.061.திருவெண்காடு
2.061.திருவெண்காடு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்.
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
2124 | உண்டாய்
நஞ்சை யுமையோர் பங்கா தொண்டாய்த் திரியு மடியார் தங்கள் அண்டா வண்ண மறுப்பா னெந்தை வெண்டா மரைமேற் கருவண் டியாழ்செய் |
2.061. 1 |
நஞ்சை உண்டவனே! உமைபங்கா! என்று கூறி மனத்தில் தியானித்துத் தொண்டராகிப் பணிகள் புரியும் அடியவர்களைத் துயரங்கள் நெருங்காவண்ணம் அவற்றை அறநத்தீர்த்தருளும் எந்தையினது ஊர், வெண்டாமரை மலர்களில் கருவண்டுகள் யாழ் போல ஒலித்துத் தேனுண்ணும் திருவெண்காடாகும்.
2125 | நாத
னம்மை யாள்வா னென்று பாதம் பன்னாள் பணியு மடியார் ஏதந் தீர விருந்தான் வாழு வேதத் தொலியாற் கிளிசொற் பயிலும் |
2.061. 2 |
நாதனாகிய பெருமான் நம்மை ஆள்வான் என்று அவன் பெயரைப் பல முறையும் கூறி ஏத்திப் பல நாள்கள் திருவடிகளைப் பரவும் அடியவர்க்கு வரும் குற்றங்களைத் தீர்த்தருள எழுந்தருளியிருப்பவனது ஊர், வேதஒலிகளைக் கிளிகள் பேசும் திருவெண்காடாகும்.
2126 | தண்முத்
தரும்பத் தடமூன் றுடையான் கண்முத் தரும்பக் கழற்சே வடிகை உண்முத் தரும்ப வுவகை தருவான் வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் |
2.061.3 |
குளிர்ந்த முத்துக்கள் அரும்பும் முக்குளங்களைத் தீர்த்தங்களாகக் கொண்டுள்ளவனை நினைந்து கண்களில் முத்துக்கள் போல நீர் அரும்ப அவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைதொழுவார்களின் உள்ளங்களில் முத்துக்கள் போன்று தூய நன்மை தோன்ற உவகைதரும் இறைவனது ஊர் வெண்மையான முத்துக்கள் போன்ற அருவியின் புனல் வந்து அலைக்கும் திருவெண்காடாகும்.
2127 | நரையார்
வந்து நாளுங் குறுகி உரையால் வேறா வுள்கு வார்கள் கரையா வண்ணங் கண்டான்மேவு விரையார் கமலத் தன்ன மருவும் |
2.061.4 |
தலையில் நரை வந்து உடல் நாளுக்கு நாள் குறுகி மூப்பு நணுகுதற்குமுன, உரை வேறாகாது நினைபவர் உள்ளத்தே மெலிந்து கரைந்து ஒழியாதவாறு தன்னைத் தோற்றுவிப்பவனது ஊர், மணம் கமழும் தாமரை மலரில் அன்னங்கள் தங்கிமகிழும் திருவெண்காடாகும்.
2128 | பிள்ளைப்
பிறையும் புனலுஞ் சூடும் றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்க தள்ளிப்போக வருளுந் தலைவ வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் |
2.061. 5 |
இளம்பிறையையும் கங்கையையும் முடியிற் சூடிய பெருமான் என்று மனத்தில் நினைந்து தொழுபவர்களின் பெருகிய நோய்களைத் தள்ளிப் போகுமாறு செய்தருளும் தலைவனது ஊர், வெண்ணிறமான உள்கோடுகளை உடைய சங்குகள் உலவித்திரியும் திருவெண்காடாகும்.
2129 | ஒளிகொண்
மேனி யுடையா யும்ப றளிய ராகி யழுதுற் றூறு கௌயா னமரர்க் கரியான் வாழு வெளிய வுருவத் தானை வணங்கும் |
2.061. 6 |
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண் காடாகும்.
2130 | கோள்வித்
தனைய கூற்றந் தன்னைக் மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த ஆள்வித் தமர ருலக மளிப்பா வேள்விப் புகையால் வான மிருள்கூர் |
2.061.7 |
உயிர்கவர்வதில் வித்துப் போல்பவனாகிய கூற்றுவனை, சிவபிரானை நினையும் குறிப்பினால் மாள்வித்து அச்சிவபிரானை மகிழ்வொடு ஏத்திய சுவேத கேது முனிவரை அமருலகம் ஆளச் செய்து அணி செய்தவனது ஊர் வேள்விப்புகையால் வானம் இருள்கூர்கின்ற திருவெண்காடு ஆகும்.
2131 | வளையார்
முன்கை மலையாள் வெருவ முளையார் மதியஞ் சூடி யென்று இளையா தேத்த விருந்தா னெந்தை விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த |
2.061. 8 |
வளையலணிந்த முன்கையை உடைய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்தகயிலை மலையைக் கால்விரல் ஊன்றி நெரித்து. முளைமதிசூடிய இறைவனே என அடியவர் முப்போதும் தளராது ஏத்துமாறு எழுந்தருளிய எந்தையாகிய சிவபெருமானது ஊர், விளைவைக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.
2132 | கரியா
னோடு கமல மலரான் எரியாய் நிமிர்ந்த வெங்கள் பெருமா குரியா னமர்க் கரியான் வாழு விரியார் பொழிலின் வண்டு பாடும் |
2.061.9 |
கரிய திருமாலும் கமலமலரில் உறையும் நான்முகனும் அடி முடி காண இயலாதவாறு எரியுருவாய் நிமிர்ந்த எங்கள் பெருமானே! என்பார்கட்கு உரியவனும் அமரர்க்கு அரியவனுமான சிவபிரானது ஊர், வண்டுகள் பாடும் விரிந்த பொழில்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.
2133 | பாடு
மடியார் பலருங் கூடிப் ஆடு மரவம சைத்த பெருமா மூட முடைய சமண்சாக் கியர்க வேட முடைய பெருமான் பதியாம் |
2.061. 10 |
பாடுகின்ற அடியவர் பலரும் கூடிப் பரிவுடன் ஏத்த ஆடும் பாம்பை இடையிற்கட்டியுள்ளவனாகி, அறிவற்ற மூடர்களாகிய சமண் சாக்கியர்கள் உணர இயலாத வேடம் கொண்ட பெருமானது பதி வெண்காடாகும்.
2134 | விடையார்
கொடியான் மேவி யுறையும் கடையார் மாடங் கலந்து தோன்றுங் நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் கடையா வினைக ளமர லோகம் |
2.061. 11 |
விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெண்காடு - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வெண்காடே, திருவெண்காடாகும், முத்துக்கள், மூர்போலும், பெருமான், திருவெண்காடு, சூழ்ந்த, மடியார், சிவபிரானது, அடியவர், முப்போதும், நிமிர்ந்த, கூடிப், கலந்து, உறையும், பாடும், பெருமா, கரியான், நினைந்து, னெந்தை, துயரங்கள், திருச்சிற்றம்பலம், திருமுறை, யூர்போலும், மனத்தில், உள்ளத்தே, குறுகி, அடியவர்க்கு, னூர்போலும்