முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.052.திருக்கோட்டாறு
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.052.திருக்கோட்டாறு
2.052.திருக்கோட்டாறு
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
2026 | கருந்த
டங்கண்ணின் மாத ராரிசை குருந்த மாதவியின் இருந்த எம்பெரு மானை யுள்கி வருந்து மாறறியார் |
2.052. 1 |
கரிய பெரிய கண்களை உடைய மகளிர் இசை பாடவும், அதற்கேற்ப மேகங்கள் முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருந்த பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள் வருந்தார். விண்வழியாக வீட்டுநெறியை எய்துவர்.
2027 | நின்று
மேய்ந்து நினைந்து மாகரி குன்றி னேர்ந்துகுத்திப் என்றும் மன்னிய எம்பி ரான்கழல் பொன்று மாறறியார் |
2.052.2 |
பெரிய யானை நின்று மேய்ந்து நினைந்து நீர் மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து, மேகங்களைக் குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் நிலை பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர் அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார்.
2028 | விரவி
நாளும் விழா விடைப்பொலி குரவ மாரு அரவ நீள்சடை யானை யுள்கிநின் பரவு மாறுவல் |
2.052. 3 |
நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில் நீழலில் அமைந்த கோட்டாற்றில் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும் பற்றும் நீங்கப் பெறுவர்.
2029 | அம்பி
னேர்விழி மங்கை மார்பலர் கொம்பி னேர்துகி நம் பனேநட னேந லந்திகழ் தம்பி னேர்ந்தறி |
2.052. 4 |
அம்புபோன்ற விழியை உடைய மங்கையர் ஆடுமிடமாகக்கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம் புரிபவனே! நன்மைகள் பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர், தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள் வருவதை அறியார்.
2030 | பழைய
தம்மடி யார்து திசெயப் குழலு மொந்தை கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் அழக னென்றெழுவார் |
2.052. 5 |
பழமையான தம் அடியவர் துதிசெய்யவும், மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை முதலியன விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும் ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர்.
2031 | பஞ்சின்
மெல்லடி மாத ராடவர் கொஞ்சி யின்மொழியால் மஞ்ச னேமணி யேம ணிமிடற் துஞ்சு மாறறியார் |
2.052. 6 |
பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே! மணியே ! மணிமிடற்று அண்ணலே என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர் இனி இறத்தல் பிறத்தல் இலராவர்.
2032 | கலவ
மாமயி லாளொர் பங்கனைக் குலவு மாறுவல்லார் நிலவு மாமதி சேர்ச டையுடை உலவு வானவரின் |
2.052.7 |
தோகையை உடைய மயில் போன்றவளாகிய பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு தோத்திரம் சொல்லுவார் குடி கொண்டுள்ள கோட்டாற்றில், நில வொளி வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும் உயர்வாகுவது உண்மை.
2033 | வண்ட
லார்வயற் சாலி யாலைவ கொண்ட லார்கொணர்ந் தொண்டெ லாந்து திசெய்ய நின்ற மிண்டெ லாந்தவிர்த் |
2.052. 8 |
வண்டல் மண் பொருந்திய நெல்வயல்களும் கரும்பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு வந்து தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில் புரிபவனே! திருவடியால் இராவணனின் வலிமையைக் கெடுத்துப் பின் அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ?
2034 | கருதி
வந்தடி யார்தொ ழுதெழக் குருதி மெய்கலப்ப விருதி னான்மட மாது நீயும்வி எருதுகந் தவனே |
2.052. 9 |
அடியவர் கருதி வந்து தொழுது எழவும், கண்ணனோடு பிரமன் தேடவும், ஆனையின் குருதி மெய்யில் கலக்குமாறு அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில் எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக உகந்த பெருமானே! உனது இனிய அருளை வழங்க இரங்குவாயாக.
2035 | உடையி
லாதுழல் கின்ற குண்டரும் கொடையி லாமனத்தார் படையி லார்மழு வேந்தி யாடிய அடைகி லாதவண்ணம் |
2.052. 10 |
உடை உடுத்தாது திரியும் சமணரும், ஊண் அருந்தாத தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர். அவர்கள் கூறும் குறை உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள் உன்னை அடையாமைக்குரிய காரணம் யாது? அதனை அடியவர்க்குக் கூறியருளுக.
2036 | கால
னைக்கழ லாலு தைத்தொரு கோல வார்குழலாள் மூல னைமுடி வொன்றி லாதவெம் மாலை பத்தும்வல்லார்க் |
2.052. 11 |
காலனைக் கழலணிந்த காலால் உதைத்தும், காமனை நெற்றிக் கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணனை முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இத்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்க்கு வானகம் எளிதாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோட்டாறு - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோட்டாற்றில், நினைந்து, விளங்கும், மாறறியார், மொந்தை, கழலும், புரிபவனே, செய்தவர், நாள்தோறும், அணியாவர், அடியவர், பங்கனைக், சித்தர்கள், தொண்டர், குருதி, குடிகொண்ட, கோட்டாற்றுள், மேகங்கள், மாந்தர்கள், திருச்சிற்றம்பலம், திருமுறை, நின்று, மேய்ந்து, என்றும், திருக்கோட்டாறு, வான்மழை, வேண்டி, வாய்ந்த