முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.006.திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.006.திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
1.006.திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை.
திருமருகலில் சுவாமிபெயர்
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்.
தேவியார் - வண்டுவார்குழலி.
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர்
சுவாமிபெயர் - கணபதீசுவரர்.
தேவியார் - திருக்குழல்நாயகி.
55 |
அங்கமும் வேதமும் ஓதும்நாவர் மங்குன் மதிதவழ் மாடவீதி செங்கய லார்புனற் செல்வமல்கு கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் |
1.006.1 |
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல் சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.
56 |
நெய்தவழ் மூவெரி காவலோம்பும் மைதவழ் மாட மலிந்தவீதி செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் கைதவழ் கூரெரி யேந்தியாடுங் |
1.006.2 |
அவியாக அளிக்கப் பெறும் நெய் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பி வரும் நேர்மையாளரும், முப்புரி நூல் அணிந்த வேத வித்துக்களும் ஆகிய அந்தணர் ஏத்த, கரிய மேகங்கள் தவழும் மாட வீடுகள் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளிய இறைவனே! தவங்கள் பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ் பொருந்திய திருச்செங்காட்டங்குடியில், திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு இடமாய்க் கணபதி யீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.
57 |
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் மால்புகை போய்விம்மு மாடவீதி சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த கால்புல்கு பைங்கழ லார்க்கவாடுங் |
1.006.3 |
மான் தோலோடு கூடிய முப்புரி நூல் அணிந்த மார்பினராய்த் திரளாய்நின்று வேதம் வல்ல அந்தணர்கள் வளர்த்த செந்தீயீலிருந்து எழுந்த கரிய புகை போய் மிகவும் மிகுதியாக வெளிப்படும் மாடங்களோடு கூடிய வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே, சேல்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை அடுத்த சோலைகளால் சூழப்பட்ட சிறப்புமிக்க திருச்செங்காட்டங் குடியில் காலில் கட்டிய கழல்கள் ஆர்க்க ஆடிக் கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக.
58 |
நாமரு கேள்வியர் வேள்வியோவா மாமரு வும்மணிக் கோயின்மேய தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் |
1.006.4 |
நாவிற் பொருந்தியவாய்ப் பயிலப்பட்டுவரும் வேதங்களை ஓதி உணர்ந்தவர்களும், வேள்விகளை இடைவிடாமல்செய்து வருபவர்களுமாகிய நான்மறையாளர் வழிபடச் செல்வம் மருவிய மணிக்கோயிலை உடைய மருகலில் விளங்கும் மைந்தனே! தேன் நிறைந்த அழகிய பொழில்களால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் விளங்குகின்ற அழகும் பெருமையும் மிக்க கணபதியீச்சரத்தைக் காமுற்று இராப்போதில் நடனம் ஆடுதற்குக் காரணம் யாது? சொல்வாயாக.
59 |
பாடன் முழவும் விழவுமோவாப் மாட நெடுங்கொடி விண்டடவும் சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த காடக மேயிட மாகவாடுங் |
1.006.5 |
பாடலும் அதற்கிசைந்த முழவு ஒலியும், திருவிழாக்கள் ஒலியும், இடைவிடாமல் நிகழ்வதும் மாடவீடுகளில் கட்டிய கொடிகள் வானைத் தடவுவதும் ஆகிய சிறப்புக்களை உடைய திருமருகலில் வேதங்கள் பலவும் கற்ற அந்தணாளர் பரவ எழுந்தருளிய இறைவனே! உயரமான மணம் மிக்க மலர்ச் சோலைகளால் சூழப் பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில், காட்டிடமே நாடக மாடுதற்கு இடமாக இருக்கவும், ஆடுதற்குரிய இடமாகக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.
60 |
புனையழ லோம்புகை யந்தணாளர் மனைகெழு மாட மலிந்தவீதி சினைகெழு தண்வயற் சோலைசூழ்ந்த கனைவளர் கூரெரி யேந்தியாடுங் |
1.006.6 |
கிரியைகள் பலவற்றாலும் அழகு செய்யப் பெற்ற முத்தீயை வளர்க்கும் கைகளை உடைய அந்தணர்கள், நாள்தோறும் தன் திருவடிகளைப் போற்ற, இல்லங்களும் விளங்கும் மாடங்களும் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே! நெற்பயிர்கள் திளைத்து வளரும் தண் வயல்களையடுத்த சோலைகளால் சூழப்பெற்ற நீர் வளம் மிக்க செங்காட்டங்குடியில் எரியேந்திக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.006.7 |
61 |
பூண்டங்கு மார்பி னிலங்கைவேந்தன் மாண்டங்கு நூன்மறை யோர்பரவ சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங் |
1.006.8 |
கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் இராவணனின் அழகிய பெரிய தோள்களை அம்மலையாலேயே அடர்த்து, மாட்சிமை பொருந்திய நான்மறையோர் பரவத் திருமருகலில் எழுந்தருளி விளங்கும் இறைவனே! வானளாவிய மணமலர்ச் சோலைகளால் சூழப்பெற்ற சீர்மிக்க செங்காட்டங்குடியில் அழகிய உன் திருத்தோள்களை அசைத்து இரவில் நடமிடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.
62 |
அந்தமு மாதியுந் நான்முகனு மந்திர வேதங்க ளோதுநாவர் செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் கந்தம கிற்புகை யேகமழுங் |
1.006.9 |
நான்முகனும் அரவணையானும் ஆதியாய முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய், மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர் பரவித்துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை மணமே கமழும் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.
63 |
இலைமரு தேயழ காகநாளும் நிலையமண் தேரரை நீங்கிநின்று மலைமக டோள்புணர் வாயருளாய் கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங் |
1.006.10 |
மருத மரத்து இலையின் சாற்றினால் நிறமூட்டிய ஆடைகளை அணிந்த புத்தர், கடுக்காய், சுக்கு, இவற்றைத் தின்னும் சமணர் ஆகியோரை விடுத்து, சைவர்கள் தொழத் திருமருகலில் மலைமகளோடு உறையும் மைந்தனே! குற்றமற்ற செங்காட்டங்குடியில் மான் தோலை உடுத்தி நள்ளிருளில் ஆடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
64 |
நாலுங் குலைக்கமு கோங்குகாழி மாலின் மதிதவழ் மாடமோங்கும் சேலும் கயலும் திளைத்தகண்ணார் சூலம்வல் லான்கழ லேத்துபாடல் |
1.006.11 |
தொங்குகின்ற குலைகளோடு பாக்கு மரங்கள் ஓங்கி வளரும் சீகாழிப் பதியினனாய ஞானசம்பந்தன், நலம் திகழ்வதும், மேகமும் பிறையும் தவழும் மாடங்கள் ஓங்கியதுமான திருமருகல் இறைவனையும், சேல் கயல் ஆகிய மீன் வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர் வாழ்வதும் சிறப்பு மிக்கதும் ஆகிய செங்காட்டங் குடியில் முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் விளங்கும் பெருமானையும் புகழ்ந்து ஏத்திய பாடல்களைச் சொல்லித் துதிக்க வல்லார் வினைகள், இல்லையாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காட்டங், குடியதனுள், யீச்சரங், காமுறவே, சீர்கொள்செங், சொல்வாயாக, திருமருகலில், மைந்தசொல்லாய், கணபதியீச்சரத்தைக், காரணம், நிலாவிய, விளங்கும், மருகல், இறைவனே, செங்காட்டங்குடியில், காமுறக், சோலைசூழ்ந்த, நிறைந்த, சோலைகளால், சுவாமிபெயர், சிறப்புமிக்க, ஆடுதற்கு, அந்தணர், தெல்லியாடுங், அணிந்த, சூழப்பெற்ற, யேந்தியாடுங், திருச்செங்காட்டங்குடியில், பொருந்திய, வீதிகளை, அந்தணர்கள், குடியில், தண்வயற், மைந்தனே, வளரும், மந்திர, இடனாய்க், ஒலியும், மாமலர்ச், காமுறுதற்குக், வேதங்களை, கட்டிய, நான்மறை, நாள்தோறும், தவழ்ந்து, நள்ளிருளில், திருச்செங்காட்டங்குடியும், திருமுறை, மதிதவழ், மாடவீதி, திருச்சிற்றம்பலம், இடமாய்க், திருமருகலும், தவழும், எழுந்தருளிய, பலவும், முப்புரி, கூரெரி, நூன்மறை, மலிந்தவீதி, தேவியார், நான்மறையோர்