முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.005.திருக்காட்டுப்பள்ளி
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.005.திருக்காட்டுப்பள்ளி
1.005.திருக்காட்டுப்பள்ளி
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர்.
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
45 |
செய்யரு கேபுனல் பாயவோங்கிச் கையரு கேகனி வாழையீன்று பையரு கேயழல் வாயவைவாய்ப் மெய்யரு கேயுடை யானையுள்கி |
1.005.1 |
வயலின்கண் நீர் பாய, அதனால் களித்த செங்கயல்மீன்கள் துள்ள, அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும், கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததனானும், காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழ மணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளியுள், நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர், அர்த்தநாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர், வீட்டுலகை அடைவர்.
இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று | 1.005.2 |
46 |
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் |
1.005.3 |
காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும், செழுமையான மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றை வாரிக் கொண்டும் வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள் பாம்புகளை இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு, வேதம் முதலான மேம்பட்ட உரைகள் யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.
47 |
தோலுடை யான்வண்ணப் போர்வையினான் நூலுடை யானிமை யோர்பெருமான் காலுடை யான்கரி தாயகண்டன் மேலுடை யானிமை யாதமுக்கண் |
1.005.4 |
புலித்தோலை ஆடையாக உடுத்தவன். யானைத் தோலை அழகிய போர்வையாகப் போர்த்தவன். திருவெண்ணீறாகிய கண்ணத்தில் செறிந்து விளங்கும் பூணூலை மார்பகத்தே உடையவன். தேவர்கட்குத் தலைவன். பதிஞானத் தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன். கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப் பெறும் திருக்காட்டுப்பள்ளியில் இமையாத மூன்றாவது கண்ணை நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி எழுந்தருளியுள்ளான்.
48 |
சலசல சந்தகி லோடுமுந்திச் பலபல வாய்த்தலை யார்த்துமண்டிப் கலகல நின்றதி ருங்கழலான் சொலவல தொண்டர்க ளேத்தநின்ற |
1.005.5 |
சலசல என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம் அகில் முதலியவற்றை அடித்துவந்து, சந்தனத்தைக் கரையில் சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து வளம் சேர்க்கும் காவிரியின் தென்பாங்கரில் சலசல என்னும் ஓசையோடு அதிரும் கழல்களை அணிந்த இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து இறைவனது பொருள்சேர் புகழ் பேசும் தொண்டர்களால் துதிக்கப்படும் அச் சூல பாணியின் திருவடிப் பெருமையை நாமும் கூறித் தோத்திரிப்போம்.
49 |
தளையவிழ் தண்ணிற நீலநெய்தல் களையவி ழுங்குழ லார்கடியக் துளைபயி லுங்குழ லியாழ்முரலத் அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் |
1.005.6 |
கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன்கூடிய நீலோற்பலம், நெய்தல், தாமரை, செங்கழுநீர் ஆகிய எல்லா மலர்களையும், அவிழ்ந்து, விழும் கூந்தலை உடைய உழத்தியர் களைகளாய்ப் பிடுங்கி எறியும் வளம் உடையதும், பலராலும் விரும்பப்படுவதும் ஆகிய திருக்காட்டுப்பள்ளியில் துளைகளால் ஓசை பயிலப் பெறும் புல்லாங்குழல் யாழ் ஆகியன இடைவிடாமல் ஒலிக்கும் இன்னிசை முழக்கோடு வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வராகிய பெருமானுக்கு ஆளாய்த் தொண்டு. செய்யின் அல்லல் அறுக்கலாம்.
50 |
முடிகையி னாற்றொடு மோட்டுழவர் கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி பொடியணி மேனியி னானையுள்கிப் றடிகையினாற்றொழ வல்லதொண்ட |
1.005.7 |
நாற்று முடியைக் கையால் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத் தினவை வெல்லக்கட்டியை உடைப்ப தால் போக்கிக் கொள்கின்ற திருக்காட்டுப்பள்ளியை விரும்பி உறை பவனும், கரிதான கண்டமுடையவனும், திருநீறணிந்த மேனியனும் ஆகிய பெருமானை நினைந்து அபிடேகநீர் மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று துதித்து முன்நின்று அவன் திருவடிகளைக் கையால் தொழ வல்ல தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளினின்றும் நீங்கி அவ்விறைவனுக்கு ஆட்செய்வர்.
51 |
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் மறையுடை யான்மழு வாளுடையான் கறையுடை யான்கன லாடுகண்ணாற் குறையுடை யான்குறட் பூதச்செல்வன் |
1.005.8 |
தலையில் பிறையை அணிந்தவனும், பெரியோர்கள், தலைவனும், வேதங்களை அருளியவனும் மழுவாகிய வாளை உடையவனும், நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கறைக் கண்டனும், கலை சேர்ந்த நுதல்விழியால் காமனைக் காய்ந்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும், குறட்பூதச் செல்வனுமாகிய, திருக்காட்டுப் பள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திரு வடிகளையே கை கூப்பினோம்.
52 |
செற்றவர் தம்மர ணம்மவற்றைச் கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் உற்றவர் தாமுணர் வெய்திநல்ல பெற்றம ரும்பெரு மானையல்லாற் |
1.005.9 |
தேவர்க்குப் பகைவராய திரிபுரத்து அசுரர் தம் அரணங்களைச் செவ்வழலால் எரியூட்டி அழித்துப் பெருவீரத்தோடு கற்றவர்கள் தொழுதேத்த மேம்பட்டு, விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும், விடைமீது ஏறி அமரும் அப்பெருமான் புகழல்லால் மற்றோர் பேச்சைப் பேசுவதிலோம்.
53 |
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் குண்டர்க ளோடரைக் கூறையில்லார் அண்டம றையவன் மாலுங்காணா வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை |
1.005.10 |
நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து, உச்சிவேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல் பருத்த புத்தர், இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத் தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும், மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க்கொன்றை புனைந்த வார் சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம்.
54 |
பொன்னியல் தாமரை நீலநெய்தல் கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் துன்னிய வின்னிசை யாற்றுதைந்து தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் |
1.005.11 |
திருமகள் வாழும் தாமரை, நீலம், நெய்தல் ஆகிய மலர்களால் பகலும் இரவும் பொலிவெய்தும் பொய்கைகளில் கன்னிப் பெண்கள் குடைந்தாடும் திருக்காட்டுப்பள்ளியை விரும்பும் இறைவனைக் கடல் சூழ்ந்த காழி மாநகர்த் தலைவனாகிய ஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசை கூட்டிச் சொன்னதும், தானே தன்னிச்சையால் பாடியவும் ஆகிய இத் திருப்பதிகப் பாடல் மாலை பத்தையும் மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்காட்டுப்பள்ளி - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காட்டுப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளியை, காதலிக், கப்படுங், விரும்பி, விளங்கும், உடையவன், என்னும், இறைவனால், கழல்களை, திருக்காட்டுப்பள்ளியில், திருவடிகளை, பலராலும், பெறும், அடைந்து, துன்னிய, காமனைக், காட்டுப்பள்ளிக், அமரும், பொருந்திய, சென்று, கையால், வின்னிசை, நெய்தல், இன்னிசை, முன்கைத், நீலநெய்தல், தாயகண்டன், வெய்திநல்ல, யார்த்தசெல்வர்க், காட்செய, லறுக்கலாமே, இறைவன், திருக்காட்டுப்பள்ளியுள், திருமுறை, திருச்சிற்றம்பலம், அதனால், மணமும், காவிரியின், மலர்களையும், செய்யின், அல்லல், அறுக்கலாம், யானிமை, தொண்டு, இடையில், ஆகியவற்றை, சேர்க்கும், பாம்புகளை, திருக்காட்டுப்பள்ளி