முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.048.திருச்சேய்ஞலூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.048.திருச்சேய்ஞலூர்
1.048.திருச்சேய்ஞலூர்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.
சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர்.
தேவியார் - சகிதேவிநாயகியம்மை.
515 |
நூலடைந்த கொள்கையாலே மாலடைந்த நால்வர்கேட்க ஆலடைந்த நீழன்மேவி சேலடைந்த தண்கழனிச் |
1.048.1 |
சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தௌவு பெறுமாறு கல்லால மரநிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய்? கூறுவாயாக.
516 |
நீறடைந்த மேனியின்க கூறடைந்த கொள்கையன்றிக் ஆறடைந்த திங்கள்சூடி சேறடைந்த தண்கழனிச் |
1.048.2 |
சேறு மிகுந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! திருநீறணிந்த தன் திருமேனியின்கண் உமையம்மை ஒருபால் விளங்க அழகியதாய் நீண்டு வளர்ந்த சடைமேல் கங்கையையும் தன்னைச் சரணாக அடைந்த திங்களையும் சூடிப் பாம்பையும் அணிந்துள்ள காரணம் யாதோ?
517 |
ஊனடைந்த வெண்டலையி கானடைந்த பேய்களோடு தேனடைந்த சோலைமல்கு |
1.048.3 |
வண்டுகள் நிறைந்த சோலைகள் செறிந்த திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! ஊன்பொருந்திய வெண்மையான தலையோட்டைக் கையில் ஏந்தி, உண் பலிக்குத் திரிந்து காட்டில் வாழும் பேய்களோடு பூதகணங்களும் கலந்து சூழ, மான் போன்ற கண்ணை உடைய உமையம்மை காண மகிழ்வோடு இடுகாட்டில் எரியாடுவது ஏன்?
518 |
வீணடைந்த மும்மதிலும் நாணடைந்த வெஞ்சரத்தா பாணடைந்த வண்டுபாடும் சேணடைந்த மாடமல்கு |
1.048.4 |
பண்ணிசையோடு வண்டுகள் பாடும் பசுமையான பொழில் சூழ்ந்ததும், அழகியதாய் உயர்ந்த மாட வீடுகள் நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! மும்மதில்களும் வீணடையுமாறு மலையை வில்லாகவும் அரவை அவ்வில்லின் நாணாகவும் கொண்டு கொடிய அம்பால் பெரிய எரியை அம்முப்புரங்களுக்கு ஊட்டியது ஏன்?
519 |
பேயடைந்த காடிடமாப் வேயடைந்த தோளியஞ்ச வாயடைந்த நான்மறையா தீயடைந்த செங்கையாளர் |
1.048.5 |
வாயினால் ஓதப்பெற்ற நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று, ஐவகை வேள்விகளை இயற்றி, தரப் பொருந்திய சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும் சேய்ஞலூர் மேயவனே! சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடி உகப்பதோடு அன்றியும் சென்று மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மை அஞ்ச யானையை உரித்தது ஏனோ?
520 |
காடடைந்த வேனமொன்றின் வேடடைந்த வேடனாகி கோடடைந்த மால்களிற்றுக் சேடடைந்த செல்வர்வாழுஞ் |
1.048.6 |
கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுனனோடு போர் புரிந்தது ஏனோ?
521 |
பீரடைந்த பாலதாட்டப் வேரடைந்து பாய்ந்ததாளை தாரடைந்த மாலைசூட்டித் சீரடைந்த கோயின்மல்கு |
1.048.7 |
சிறப்புமிக்க மாடக் கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில் விளங்கும் இறைவனே! பசுவின் முலைக்காம்பின் வழிச் சுரந்து நின்ற பாலைச் சண்டீசர் மணலால் தாபித்த இலிங்கத்துக்கு ஆட்டி வழிபட, அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை இடறிய தன் தந்தையின் காலைத் தடிந்த சண்டீசரின் பக்தியை மெச்சி உன் தாரையும் மாலையையும் சூட்டி அவரைச் சிவகணங்களின் தலைவர் ஆக்கியது ஏனோ?
522 |
மாவடைந்த தேரரக்கன் வலி நாவடைந்த பாடல்கேட்டு பூவடைந்த நான்முகன்போற் சேவடைந்த வூர்தியானே |
1.048.8 |
தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும், விடையை ஊர்தியாகக் கொண்டவனே! திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடைய இராவணனது வலிமையை அழித்து அவன் நாவினால் பாடிய பாடலைக் கேட்டு விரும்பி அவனுக்கு அருள்கள் பல செய்தது ஏனோ?
523 |
காரடைந்த வண்ணனோடு பாரடைந்தும் விண்பறந்தும் சீரடைந்து வந்துபோற்றச் தேரடைந்த மாமறுகிற் |
1.048.9 |
தேர் ஓடும் அழகிய வீதிகளை உடைய திருச்சேய்ஞலூர் மேவிய சிவனே! கருமை நிறம் பொருந்திய திருமால் பொன்வண்ணனாகிய பிரமன் ஆகியோர் உலகங்களை அகழ்ந்தும் பறந்தும் சென்று அடிமுடிகளைக் காணாராய்த் தம் தருக்கொழிந்து பின் அவர்கள் போற்ற அவர்பால் சென்று அருள் செய்தது ஏனோ?
524 |
மாசடைந்த மேனியாரு நேசடைந்த வூணினாரு வீசடைந்த தோகையாட தேசடைந்த வண்டுபாடுஞ் |
1.048.10 |
வீசி ஆடுகின்ற தோகைகளை உடைய மயில்கள் ஆடுவதும், மணம் கமழும் பொழில்களில் ஒளி பொருந்திய வண்டுகள் பாடுவதும் செய்யும் திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! அழுக்கேறிய உடலினரும், மனத்தில் வெறுப்பின்றிக் கஞ்சியை விரும்பி உணவாகக் கொள்வோரும் ஆகிய சமண புத்தர்கள் உன்பால் நேசம் இலாததற்குக் காரணம் யாதோ?
525 |
சேயடைந்த சேய்ஞலூரிற் தோயடைந்த வண்வயல்சூழ் சாயடைந்த ஞானமல்கு வாயடைந்து பாடவல்லார் |
1.048.11 |
முருகப் பெருமான் வழிபட்ட சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செல்வனாகிய சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற, வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும், நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சேய்ஞலூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சேய்ஞலூர், மேயவனே, திருச்சேய்ஞலூரில், இறைவனே, விளங்கும், பொருந்திய, சென்று, உமையம்மை, திருச்சேய்ஞலூர், சூழப்பட்ட, வயல்களால், எழுந்தருளிய, வண்டுகள், வாழும், கொண்டு, வாயினால், செய்தது, விரும்பி, செய்ததென்னே, அவர்கள், நல்லறத்தை, நல்கிய, திருச்சிற்றம்பலம், திருமுறை, தண்கழனிச், நிறைந்த, காரணம், அழகியதாய், குளிர்ந்த, பேய்களோடு