முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.046.திரு அதிகைவீரட்டானம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.046.திரு அதிகைவீரட்டானம்
1.046.திரு அதிகைவீரட்டானம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
சுவாமிபெயர் - அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
493 |
குண்டைக் குறட்பூதங் குழும வனலேந்திக் கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம் வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. |
1.046.1 |
பருத்த குள்ளமான பூத கணங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்கக் கையில் அனலை ஏந்தியவனாய், வண்டுகள் மருளிந்தளப் பண்பாட, பொன் போன்று விரிந்து மலர்ந்த கொன்றை மலர் மாலை அணிந்தவனாய்ச் சிவபிரான் கெண்டை மீன்கள் பிறழ்ந்து விளையாடும் தௌந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்து ஆடுவான்.
494 |
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக் கரும்பின் மொழியாளோ டுடன்கை யனல்வீசிச் சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ விரும்பு மதிகையு ளாடும்வரரட் டானத்தே. |
1.046.2 |
சிவபிரான் தாமரை அரும்பு, குரும்பை ஆகியவற்றை அழகால் வென்ற மென்மையான தனங்களையும், கரும்புபோன்ற இனிய மொழிகளையும் உடைய உமையம்மையோடு கூடிக் கையில் அனல் ஏந்தி வீசிக் கொண்டு, வண்டுகள் தேனுண்ணும் இதழ் விந்த கொன்றை மாலை அணிந்த ஒளி மயமான பொன் போன்ற சடைகள் தாழத் தன்னால் பெரிதும் விரும்பப்படும் அதிகை வீரட்டானத்து ஆடுவான்.
495 |
ஆடலழனாக மரைக்கிட் டசைத்தாடப் பாடன் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான் மாட முகட்டின்மேன் மதிதோ யதிகையுள் வேடம் பலவல்லா னாடும்வரரட் டானத்தே. |
1.046.3 |
வென்றியையும் அழல் போலும் கொடிய தன்மையையும் கொண்ட நாகத்தை இடையில் பொருந்தக் கட்டி ஆடுமாறு செய்து, பாடப்படும் வேதங்களில் வல்லவனாய், படுதம் என்னும் கூத்தினை ஆடிக்கொண்டு, பலி தேடித் திரிபவனாய சிவபிரான் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்த மாடவீடுகளை உடைய திருவதிகையிலுள்ள வீரட்டானத்தில் பல்வேறு கோலங்களைக் கொள்ளுதலில் வல்லவனாய் ஆடுவான்.
496 |
எண்ணா ரெயிலெய்தா னிறைவ னனலேந்தி மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப் பண்ணார் மறைபாடப் பரம னதிகையுள் விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. |
1.046.4 |
பகைவரது திரிபுரங்களை எய்து அழித்த இறைவன் அனலைக் கையில் ஏந்தி மார்ச்சனை இடப்பட்ட முழவு முழங்க இளம் பிறையை முடியில் சூடிப் பண்ணமைப்புடைய வேதங்களை அந்தணர் ஓதத் திருவதிகை வீரட்டானத்தே தேவர்கள் போற்ற நின்று ஆடுவான்.
497 |
கரிபுன் புறமாய கழிந்தா
ரிடுகாட்டில் திருநின் றொருகையாற் றிருவா மதிகையுள் எரியேந் தியபெருமா னெரிபுன் சடைதாழ விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. |
1.046.5 |
கரிந்த புல்லிய ஊர்ப்புறமாய இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில், ஒரு திருக்கரத்தில் எரி ஏந்தி ஆடும் பெருமான் திருமகள் நிலைபெற்ற திருவதிகையில் உள்ள வீரட்டானத்தில் எரி போன்று சிவந்த தன் சடைகள் தாழ்ந்து விரிய தலையில் கங்கை சூடி ஆடுவான்.
498 |
துளங்குஞ் சுடரங்கைத் துதைய
விளையாடி இளங்கொம் பனசாய லுமையோ டிசைபாடி வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள் விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. |
1.046.6 |
அசைந்து எரியும் அனலை அழகிய கையில் பொருந்த ஏந்தி விளையாடி, இளங்கொம்பு போன்ற உமையம்மையோடு இசை பாடி, வளமை உள்ள புனல் சூழ்ந்த வயல்களை உடைய திருவதிகையில் வீரட்டானத்தே முடிமிசை விளங்கும் பிறைசூடி ஆடுவான்.
499 |
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக் கீத முமைபாடக் கெடில வடபக்கம் வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே. |
1.046.7 |
பரம்பொருளாகிய பரமன் தன் திருவடிகளைப் பலரும் பரவி ஏத்தி வணங்கவும், பூத கணங்கள் புடை சூழவும், புலித்தோலை உடுத்து, உமையம்மை கீதம் பாடக் கெடில நதியின் வடகரையில் வேதமுதல்வனாய் வீரட்டானத்தே ஆடுவான்.
500 |
கல்லார் வரையரக்கன் றடந்தோள்
கவின்வாட ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள் பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி வில்லா லெயிலெய்தா னாடும்வீரட் டானத்தே. |
1.046.8 |
கற்கள் பொருந்திய கயிலை மலையை எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து, அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய இறைவன் பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடித்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.
501 |
நெடியா னான்முகனு நிமிர்ந்தானைக்
காண்கிலார் பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக் கடியார் கழுநீலம் மலரும் மதிகையுள் வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. |
1.046.9 |
பேருருக் கொண்ட திருமாலும், நான்முகனும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்தவனை, திருநீறணிந்த மார்பினனை, முப்புரி நூல் அணிந்தவனைக் காண்கிலார்: அப்பெருமான் மணம் கமழும் நீலப்பூக்கள் மலரும் திருவதிகையிலுள்ள வீரட்டானத்தே முடைநாற்றமுடைய தலை ஓட்டைக் கையில் ஏந்தி ஆடுகின்றான்.
502 |
அரையோ டலர்பிண்டி மருவிக்
குண்டிகை சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள் உரையோ டுரையொவ்வாதுமையோடுடனாகி விரைதோ யலர்தாரா னாடும்வீரட் டானத்தே. |
1.046.10 |
அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாகச் சுரைக்குடுக்கையை ஏந்தித் திரியும் புத்தர்கள், ஆடையற்றுத் திரியும் சமணர்கள் ஆகியவர்களின் பொருந்தாத வார்த்தைகளைக் கேளாதரர். மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடு உடனாய் அதிகை வீரட்டானத்தே ஆடுவான். அவனை வணங்குங்கள்.
503 |
ஞாழல் கமழ்காழி யுண்ஞான
சம்பந்தன் வேழம் பொருதெண்ணீ ரதிகைவீரட் டானத்துச் சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை வாழுந் துணையாக நினைவார் வினையிலரே. |
1.046.11 |
ஞாழற் செடிகளின் மலர்கள் மணம் கமழும் சீகாழியுள் தோன்றிய ஞானசம்பந்தன், நாணல்களால் கரைகள் அரிக்கப்படாமல் காக்கப்படும் தௌந்த நீர்வளம் உடைய திருவதிகை வீரட்டானத்தில், ஆடும் கழல் அணிந்த அடிகளை உடைய சிவபிரானைப் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை, வாழ்வுத் துணையாக நினைபவர் வினையிலராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு அதிகைவீரட்டானம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - டானத்தே, ஆடுவான், வீரட்டானத்தே, கையில், சிவபிரான், திருவதிகை, வீரட்டானத்தில், கமழும், யாடும்வீரட், உமையம்மையோடு, அணிந்த, னாடும்வீரட், விளையாடி, விளங்கும், திருவதிகையில், மதிகையுள், வடபக்கம், பிறைசூடி, திருச்சிற்றம்பலம், பொருந்திய, திரியும், துணையாக, மரத்தையும், திருமுறை, காண்கிலார், மலரும், இறைவன், றாடும்வீரட், வண்டுகள், சடைதாழ, வீரட்டானத்து, போன்று, நதியின், வடகரையில், கணங்கள், கொண்டு, வல்லவனாய், திருவதிகையிலுள்ள, படுதம், சடைகள், அதிகைவீரட்டானம், கொன்றை