முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.019.திருக்கழுமலம் - திருவிராகம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.019.திருக்கழுமலம் - திருவிராகம்
1.019.திருக்கழுமலம் - திருவிராகம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர், இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
195 |
பிறையணி படர்சடை முடியிடை இறையணி வளையிணை முலையவள் கறையணி பொழினிறை வயலணி நறையணி மலர்நறு விரைபுல்கு |
1.019.1 |
பிறை அணிந்த விரிந்த சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும், முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின் இரண்டு தனபாரங்களோடு இணைபவனும், அழகிய இடவகைகளில் ஒன்றான நிழல்மிக்க பொழில்கள் நிறைந்ததும் நெல் வயல்கள் அணி செய்வதுமாகிய திருக்கழுமலத்தில் எழுந்தருளியுள்ள அழல் போன்ற சிவந்த மேனியனுமாகிய சிவபிரானின் தேன்நிறைந்த மலர்களின் நறுமணம் செறிந்த அழகிய திருவடிகளைத் தொழுதல் செய்மின்கள்.
196 |
பிணிபடு கடல்பிற விகளறல் அணிபடு கழுமல மினிதமர் தணிபடு கதிர்வள ரிளமதி மணிபடு கறைமிட றனைநலம் |
1.019.2 |
இடைவிடாமல் நம்மைப் பிணிக்கும் கடல் போன்றபிறவிகள் நீங்குதல் எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும், உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக் கண்டனும் ஆகிய சிவபிரானின் நலம் நிறைந்த திருவடிகளைத் தொழுதல் செய்மின்.
197 |
வரியுறு புலியத ளுடையினன் விரியுறு சடைவிரை புரைபொழில் எரியுறு நிறவிறை வனதடி தெரியுறு வினைசெறி கதிர்முனை |
1.019.3 |
கோடுகள் பொருந்திய புலியின் தோலை ஆடையாக உடுத்தவனாய், ஒளி மிக்குத் தோன்றும் கிரணங்களையுடைய வளர்பிறையை அணிந்த சடையை உடையவனாய், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் திருவிழாக்களின் ஒலி நிறைந்ததும் ஆகியகழுமலத்துள் அழல் வண்ணனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை, இரவும் பகலும் பரவுகின்றவர்களின் வருத்துகின்ற வினைகள் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றின் முன் இருள் போலக் கெட்டொழியும். ஆதலால், அப்பெருமான் திருவடிகளை நன்றாக நினையுங்கள்.
198 |
வினைகெட மனநினை வதுமுடி புனைகொடியிடைபொருள் தருபடு மனைகுட வயிறுடை யனசில கனைகட லடைகழு மலமமர் |
1.019.4 |
உயர்ந்த பிறை மதி, கொடி போன்ற இடையையுடைய கங்கை, மந்திரப்பொருளால் உண்டாக்கப்பட்டுத் தோன்றிய யானையின் தோல் இவற்றை உடைய உடலினனும், வீட்டுக் குடம் போலும் வயிற்றினை உடைய பூதங்கள் சிலவற்றின் படையை உடையவனும், ஆரவாரம் நிறைந்த கடற்கரையை அடுத்த கழுமலத்துள் ஞாயிறு திங்கள் ஆகியவற்றைக் கண்களாகக் கொண்டு அமர்ந்தவனுமாகிய சிவபெருமானின் ஒலிக்கும் கழற் சேவடிகளை, வினைகள் கெடவும் மனத்தில் நினைவது முடியவும் வேண்டின் நன்கு தொழுதெழுக.
199 |
தலைமதி புனல்விட வரவிவை நிலைமரு வவொரிட மருளின மலைமரு வியசிலை தனின்மதி கலைமரு வியபுற வணிதரு |
1.019.5 |
நல்ல கலைமான்கள் பொருந்திய சிறுகாடுகள் புறத்தே அழகு பெறச் சூழ்ந்துள்ள கழுமலத்தில் இனிதாக எழுந்தருளிய இறைவன், ஒரு நாட்பிறை, கங்கை, நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவற்றுக்குத் தன் தலைமையான சடைக் காட்டின் நடுவில் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு அழல் வடிவான அம்பினை மேருமலையாகிய வில்லில் பூட்டி எய்தலால் திரிபுரங்கள் எரியுண்ணுமாறு மனத்தால் சிந்தித்தவன்.
200 |
வரைபொரு திழியரு விகள்பல கரைபொரு திரையொலி கெழுமிய அரைபொரு புலியத ளுடையினன் உரைபொடி படவுறு துயர்கெட |
1.019.6 |
மலைகளைப் பொருது இழிகின்ற அருவிகள் பலவற்றைப் பருகுகின்ற பெரிய கடலினை அடுத்துள்ள வரிகளாக அமைந்த மணற்பரப்பில் அமைந்ததும், கரையைப் பொரும் கடல் அலைகளின் ஓசை எப்போதும் கேட்கின்றதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளியுள்ளவனும், கனல் போலும் சிவந்த திருமேனியனும், இடையிலே கட்டிய புலித்தோலை உடையவனுமாகிய சிவபிரானின் இணை அடிகளைத்தொழின், போக்குதற்கு அரியனவாகிய வினைகள் என்னும் வார்த்தையும் பொடிபட, மிக்க துயர்கள் நீங்க உயர்ந்த உலகமாகிய வீட்டுலகத்தைப் பெறுதல் நிச்சயமாகும்.
201 |
முதிருறி கதிர்வள ரிளமதி உதிருறு மயிர்பிணை தவிர்தசை கதிருறு சுடரொளி கெழுமிய அதிருறு கழலடி களதடி |
1.019.7 |
மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ள திருமுடியில் உலகிற் பயிர்களை முதிர்விக்கும் கிரணங்கள் வளர்கின்றமதியைச் சூடிய சடையை உடையவனாய், உதிரத்தக்க மயிர் பிணைந்து தசை தவிர்ந்துள்ள புலித்தோலை உடுத்த இடையை உடையவனாய், இருளை நீக்கும் கதிரவனின் சுடரொளி பொருந்திய மழுவாகிய படையை ஏந்திக் கழுமலத்துள் அமர்கின்ற பெருமானின் கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொழும் அறிவல்லது பிறவற்றை அறியும் அறிவை அறியோம்.
202 |
கடலென நிறநெடு முடியவன் அடனிறை படையரு ளியபுகழ் விடநிறை மிடறுடை யவன்விரி உடனுறை பதிகள்தன் மறுகுடை |
1.019.8 |
கடல் போன்ற கரிய நிறத்தினனும், நீண்ட முடியை அணிந்தவனும் ஆகிய இராவணனின் வலிமை கெடுமாறு செய்து பின் அவன் திருவடிகளே சரண் என வேண்ட அவனுக்கு வலிமை மிக்க வாட்படை அருளிய புகழுடையவனும், பாம்பை இடையில் கட்டியவனும், அழகுமிக்க பிறையை அணிந்தவனும், விடம் தங்கிய கண்டத்தை உடையவனும், விரித்த சடையை உடையவனும், விடை ஊர்தியனும் ஆகிய பெருமான் உமையம்மையோடு உறையும் பதி, கடல் அலைகளையுடைய உயர்ந்த கழுமலம் எனப்படும் பெரிய நகராகும்.
203 |
கொழுமல ருறைபதி யுடையவன் விழுமையை யளவறி கிலரிறை கழுமல மமர்கன லுருவினன் எழுமையுமிலநில வகைதனில் |
1.019.9 |
செழுமையான தாமரை மலரை உறையும் இடமாகக் கொண்ட பிரமன், திருமால் ஆகிய இவர்களும் சிவபெருமானது சிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான், மணம் பொருந்திய பொழில்கள் சூழப் பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத் தொழுபவர்களின் நீங்குதற்கரிய வினைகள் இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும் இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்கு எளிதாகும்.
204 |
அமைவன துவரிழு கியதுகில் சமையமு மொருபொரு ளெனுமவை இமையவர் தொழுகழு மலமமர் நமையல வினைநல னடைதலில் |
1.019.10 |
தமக்குப் பொருந்துவனவாகிய மருதந்துவர் ஊட்டின ஆடையை அணிந்தவர்களாகிய புத்தர்களும், ஆடையற்ற சமணர்களும் ஒரு பொருள் எனக்கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் ஆகிய அவை வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன என உணர்ந்து தேவர்களால் தொழப்படுகின்ற கழுமலத்துள் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் பரவுவார்களை வினைகள் வருத்தா. நலன் அடைதலின் உயர்நெறிகளை அவர்கள் அடைவார்கள்.
205 |
பெருகிய தமிழ்விர கினன்மலி கருகிய நிறவிரி கடலடை பெருகிய சிவனடி பரவிய மருவிய மனமுடை யவர்மதி |
1.019.11 |
பரந்துபட்ட நூல்களைக் கொண்டுள்ள தமிழ்மொழியை ஆழ உணர்ந்தவனும், மிக்க புகழாளனும் ஆகிய ஞானசம்பந்தன் நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதிமனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கழுமலம் - திருவிராகம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பொருந்திய, கழுமலத்துள், வினைகள், அணிந்த, திருவடிகளைத், சிவபிரானின், உடையவனும், உயர்ந்த, நிறைந்த, உடையவனாய், மலமமர், இறைவன், எழுந்தருளிய, லுருவினன், பெருகிய, மமர்கன, பொழில்கள், கழுமலம், திருவடிகளை, விளங்கும், திருவடிகளைப், உறையும், அணிந்தவனும், அப்பெருமான், புலித்தோலை, அடியிணை, சிவபெருமானின், சுடரொளி, போலும், கெழுமிய, இனிதாக, விரிந்த, உமையம்மையின், நிறைந்ததும், மருவுமே, திருச்சிற்றம்பலம், திருவிராகம், திருமுறை, சிவந்த, தொழுதல், திருக்கழுமலம், அமர்கின்ற, புலியத, எளிதாகும், ரிளமதி, மினிதமர், கதிர்வள, ளுடையினன்