முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.017.திருஇடும்பாவனம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.017.திருஇடும்பாவனம்
1.017.திருஇடும்பாவனம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணநாதர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
174 |
மனமார்தரு மடவாரொடு தனமார்தரு சங்கக்கடல் சினமார்தரு திறல்வாளெயிற் இனமாதவ ரிறைவர்க்கிடம் |
1.017.1 |
மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப் பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும்.
175 |
மலையார்தரு மடவாளொரு நிலையார்தரு நிமலன்வலி கலையார்தரு புலவோரவர் இலையார்தரு பொழில்சூழ்தரு |
1.017.2 |
இமவான் மகளாய் மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும் குற்றமற்ற சிவபிரானது வென்றி விளங்குவதும், புகழாகிய ஒளி மிக்க கலை வல்ல புலவர்கள் இடைவிடாது பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம் இதுவேயாகும்.
176 |
சீலம்மிகு சித்தத்தவர் ஞாலம்மிகு கடல்சூழ்தரு கோலம்மிகு மலர்மென்முலை ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் |
1.017.3 |
தவ ஒழுக்கத்தால் மேம்பட்ட முனிவர்களால் சிந்தித்து வணங்கப்பெறும் எம் தந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், நிலப்பரப்பினும் மிக்க பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச் சான்றோர்களும், நற்குணங்களும் அழகும் மலர்போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும்.
177 |
பொழிலார்தரு குலைவாழைக தொழிலான்மிகு தொண்டரவர் குழலார்தரு மலர்மென்முலை எழிலார்தரு மிறைவர்க்கிடம் |
1.017.4 |
குலைகள் தள்ளிய வாழைகள் செழித்துள்ள பொழில்கள் சூழப் பெற்றதும், அழகு திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால் சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமானகுன்றளூரை அடுத்துள்ள இடும்பாவனம் அழகுக்கு அழகு செய்யும் இறைவர்க்குரிய இடமாகும்.
178 |
பந்தார்விர லுமையாளொரு செந்தாமரை மலர்மல்கிய கொந்தார்மலர் புன்னைமகிழ் எந்தாயென விருந்தானிடம் |
1.017.5 |
பந்தாடும் கை விரல்களை உடைய உமையவள் பங்கனே எனவும், கங்கை அணிந்த சடைமுடியோடு செந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய வளமான வயல்களின் கரைமேல் கொத்துக்களாக மலர்ந்த புன்னை, மகிழ், குரா ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற குன்றளூரில் எழுந்தருளிய எந்தாய் எனவும், போற்ற இருந்த இறைவனது இடம், இடும்பாவனம்
179 |
நெறிநீர்மையர் நீள்வானவர் அறிநீர்மையி லெய்தும்மவர்க் குறிநீர்மையர் குணமார்தரு எறிநீர்வயல் புடைசூழ்தரு |
1.017.6 |
தவ ஒழுக்கத்தால் சிறந்த முனிவர்கள், உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும் நினைவுப் பொருளாகி, ஞானத்தால் தொழும் மேலான ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவை நல்கிச் சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள் புரிபவனாகிய சிவபெருமான் இடம், தூய சிந்தனையைத் தரும் மணம் கமழ்கின்ற குன்றளூரில் வரப்பை மோதும் நீர் நிரம்பிய வயல்கள் புடை சூழ்ந்து விளங்கும் இடும்பாவனமாகிய இத்தலமேயாகும்.
180 |
நீறேறிய திருமேனியர் பாறேறிய படுவெண்டலை கூறேறிய மடவாளொரு ஏறேறிய விறைவர்க்கிடம் |
1.017.7 |
நீறணிந்த திருமேனியராய், விளங்கும் உலகெங்கணும் சென்று, பருந்து உண்ணவரும் தசையோடு கூடிய காய்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அன்பர்கள் இடும் உணவைப்பெற்று உமையம்மையைத் தன் மேனியின் ஒரு கூறாகிய இடப்பாகமாக ஏற்று மகிழ்ந்து விடைமீது வரும் சிவபெருமானுக்குரிய இடமாகிய இடும்பாவனம் இதுவேயாகும்.
181 |
தேரார்தரு திகழ்வாளெயிற் ஓராதெடுத் தார்த்தான்முடி கூரார்தரு கொலைவாளொடு ஏரார்தரு மிறைவர்க்கிடம் |
1.017.8 |
வானவெளியில் தேர்மிசை ஏறிவந்த ஒளி பொருந்திய வாளையும் பற்களையும் உடைய அரக்கனாகிய இராவணன், சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையின் சிறப்பை ஓராது, தன் தேர்தடைப்படுகிறது என்ற காரணத்திற்காக மலையைப் பெயர்த்துச் செருக்கால் ஆரவாரம் செய்ய, அவன் பத்துத் தலைமுடிகளையும் நெரித்தபின் அவன் வருந்திவேண்ட, கருணையோடு கூரிய கொலைவாள், பிற நன்மைகள், இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக் கொடுத்தருளிய அழகனாகிய இறைவற்கு இடம் இடும்பாவனம்.
182 |
பொருளார்தரு மறையோர்புகழ் தெருளார்தரு சிந்தையொடு மருளார்தரு மாயன்னயன் இருளார்தரு கண்டர்க்கிடம் |
1.017.9 |
தருக்கு மிகுந்த மாயனும் அயனும் காணாது மயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும், புகழ்மிக்க அம்மறையோர்களால் தௌந்த சிந்தையோடு பல்வகை நிறங்களுடன் கூடிய மலர்களைத் தூவி வழிபடப் பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம், இதுவேயாகும்.
183 |
தடுக்கையுட னிடுக்கித்தலை உடுக்கைபல துவர்க்கூறைகள் மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் இடுக்கண்பல களைவானிடம் |
1.017.10 |
பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம் கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும், உடுத்துவதற்குரிய காவியுடைகளை அணிந்து திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய், துன்பம் நீக்கி இன்பம் அருளும் இறைவனது இடம், தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை உடைய மடுக்களும், செந்நெல் வயல்களும் சூழ்ந்த, நீர்மலர் மிக்க நீர்நிலைகளின் கரைமேல் விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும்.
184 |
கொடியார்நெடு மாடக்குன்ற இடியார்கட லடிவீழ்தரு அடியாயுமந் தணர்காழியுள் படியாற்சொன்ன பாடல்சொலப் |
1.017.11 |
கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய அழகிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள் வாழும் காழிப் பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத, வினைகள் நீங்கும். தானே - அசை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஇடும்பாவனம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மிதுவே, இடும்பாவனம், இடும்பாவன, குன்றில், விளங்கும், இதுவேயாகும், கரைமேல், நிறைந்த, சூழ்ந்த, குன்றளூரில், எழுந்தருளிய, செய்யும், சிவபிரான், மிறைவர்க்கிடம், திருமுறை, செந்தாமரை, எனவும், கையில், இராவணன், இறைவனது, கமழ்கின்ற, நிரம்பிய, சிந்தித்து, ஒழுக்கத்தால், மடவாளொரு, பாகம்மகிழ், சிவபிரானுக்குரிய, பெறும், திருச்சிற்றம்பலம், என்னும், வெய்தி, மிடும்பாவன, மலர்மென்முலை, மடவார்மிகு, திருஇடும்பாவனம், பொழில், மகிழ்ந்து, அடுத்துள்ள, விளங்குவதும்