முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.105.திருஆரூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.105.திருஆரூர்
1.105.திருஆரூர்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
1133 |
பாடல னான்மறையன் படிபட்ட சூடலன் மூவிலைய கூடலர் மூவெயிலும்மெரியுண்ணக் ஆடல னாதிரையன் |
1.105.1 |
திருவாரூரின்கண் எழுந்தருளிய இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன். ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக் கரத்தே ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடம் புரிபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.
1134 |
சோலையில் வண்டினங்கள்
சுரும்போ ஆலையின் வெம்புகைபோய் பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் காலையு மாலையும்போய்ப் பணிதல் கருமமே. |
1.105.2 |
சோலைகளில் வண்டுகளும், சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில் தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க கருமமாகும்.
1135 |
உள்ளமோ ரிச்சையினா
லுகந்தேத்தித் கள்ள மொழிந்திடுமின் வெள்ளமோர் வார்சடைமேற்கரந்திட்ட அள்ள லகன்கழனி |
1.105.3 |
தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.
1136 |
வெந்துறு வெண்மழுவாட் படையான் ஐந்தலை யாடரவ பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் நைந்தறும் வந்தணையும் |
1.105.4 |
அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், இடையில் ஐந்து தலையுடையதாய் ஆடும் பாம்பினைக் கட்டியவனும், அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும். நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.
1137 |
வீடு பிறப்பௌதா மதனை காடிட மாகநின்று ஆடு மவிர்சடையா னவன்மேய பாடுதல் கைதொழுதல் |
1.105.5 |
வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.
1138 |
கங்கையோர் வார்சடைமேற்
கரந்தான் மங்கையோர் கூறுடையான் அங்கையி னானடியே பரவி தங்கையி னாற்றொழுவார் |
1.105.6 |
கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடை முடி மேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமை மங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகியகையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.
1139 |
நீறணி மேனியனாய் நிரம்பா ஆறணி வார்சடையான் சேறணி மாமலர்மேற் பிரமன் ஏறணி வெல்கொடியா |
1.105.7 |
திருநீறு அணிந்த திருமேனியனாய்த் திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின் கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண் அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த, சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம் தலைவனாவான்.
இப்பதிகத்தின் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.8 |
1140 |
வல்லியந் தோலுடையான்
வளர்திங்கட் நல்லிய னான்முகத்தோன் அல்லியங் கோதைதன்னை யாகத் புல்லிய புண்ணியனைத் |
1.105.9 |
வலிய புலியினது தோலை உடுத்தவனும், வளர்தற்குரிய பிறைமதியைக் கண்ணியாகச் சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில் பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத் தொழுபவர்களும் புண்ணியராவர்.
1141 |
செந்துவ ராடையினா ருடைவிட்டு இந்திர ஞாலமொழிந் அந்தர மூவெயிலும் அரணம் தந்திர மாவுடையா |
1.105.10 |
செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப் பேச்சுக்களைக் கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.
1142 |
நல்ல புனற்புகலித் தமிழ்ஞான அல்லி மலர்க்கழனி வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை சொல்லுதல் கேட்டல்வல்லார் |
1.105.11 |
தூயதான நீர்வளத்தை உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 103 | 104 | 105 | 106 | 107 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஆரூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எழுந்தருளிய, திருவாரூரில், சென்று, விளங்கும், பணிதல், ஒப்பற்ற, இறைவன், அதற்குரிய, பாடுதல், சடைமுடியை, கைகளால், இடமாகக், பிரமனது, சொல்லுதல், புண்ணியனைத், கொண்டவனுமாகிய, நமக்கு, திருவாரூரைத், வந்தணையும், கருமமே, கையில், திருச்சிற்றம்பலம், திருமுறை, வெண்மையான, சிவபிரான், ஏந்தியவனும், நல்லனவே, திருஆரூர், திருவாரூரை, உடையவனும்