முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 9.04. வாயிலார் நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 9.04. வாயிலார் நாயனார் புராணம்
9.04. வாயிலார் நாயனார் புராணம்
4079 |
சொல் விளங்கு சீர்த் தொண்டைநல் நாட்டின் இடை மல்லல் நீடிய வாய்மை வளம்பதி பல்பெரும் குடி நீடு பரம்பரைச் செல்வம் மல்கு திருமயிலா புரி | 9.4.1 |
4080 | நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத் தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால் | 9.4.2 |
4081 | காலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம் | 9.4.3 |
4082 | தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத் துவள் பதாகை நுழைந்து அணை தூமதி பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால் | 9.4.4 |
4083 | வீதி எங்கும் விழா அணிக் காளையர் தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் ஓதி எங்கும் ஒழியா அணிநிதி பூதி எங்கும் புனை மணிமாடங்கள் | 9.4.5 |
4084 | மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த் தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் தன்மை வாயிலார் என்னும் தபோதனர் | 9.4.6 |
4085 | வாயிலார் என நீடிய மாக்குடித் தூய மா மரபின் முதல் தோன்றியே நயனார் திருத்தொண்டின் நயப்புறு மேய காதல் விருப்பின் விளங்குவார் | 9.4.7 |
4086 | மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் | 9.4.8 |
4087 | அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும் நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப் புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார் | 9.4.9 |
4088 | நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள் ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால் பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச் சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் | 9.4.10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
9.04. வாயிலார் நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எங்கும், வாயிலார்