முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 11.04. திருவாரூர் பிறந்தார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.04. திருவாரூர் பிறந்தார் புராணம்
11.04. திருவாரூர் பிறந்தார் புராணம்
4158 |
அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ | 11.4.1 |
4159 | திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான் திருக் கணத்தார் பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால் தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே | 11.4.2 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.04. திருவாரூர் பிறந்தார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -