ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் - மதுரை மீனாட்சியம்மை குறம்
மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. மீனாட்சியம்மை சொக்கலிங்கப் பெருமான் மீது கருத்திழந்த பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக அமைந்துள்ளது.
நூல்
காப்பு
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கார்கொண்ட பொழின்மதுரைக் கர்ப்பூர தார்கொண்ட கருங்குழலங் கயற்கணா வார்கொண்ட புகர்முகத்தைங் கரத்தொருகோட் போர்கொண்ட கவுட்சிறுகட் சித்திவிநா |
சிந்து
பூமருவிய பொழிறிகழ் மதுரா புரிமருவிய வங்கயற்க ணம்மை தேமருவிய மதிதவழ் குடுமித் தென்பொதியக் குறத்திநா னம்மே. | 1 |
செந்நென் முத்துங் கன்னன்முத் துமொளி திகழ்மதுரை யங்கயற்க ணம்மை பொன்னுமுத்துஞ் சொரியும்வெள் ளருவிப் பொதியமலைக் குறத்திநா னம்மே. | 2 |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
செண்டிருக்கும் வடவரையிற் சேலிருந்து கண்டிருக்கு மதுரமொழிக் கனியிருக்குந் வண்டிருக்கு நறைக்கமல மலரிருக்கும் கொண்டிருக்குந் தமிழ்முனிவன் குடியிருக்கும் 3 |
|
சிந்து
மங்கை குங்குமக் கொங்கை பங்கயச் செங்கை யங்கயற் கண்ணினாள் மறை பண்ணினாள் பங்க னைக்கழ லங்க னைச்சொக்க லிங்க னைக்கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே. | 4 | வேறு
வஞ்சி யேயப ரஞ்சி யேமட மயிலே வரிக் குயிலே கொஞ்சி யேபழி யஞ்சி யாருனைக் கூடுவா ரினி யம்மே. | 5 | வேறு
புழுகாலே தரைமெழுகு பிள்ளை யார்வை பொற்கோல மிட்டுநிறை நாழி வையாய். | 6 | வேறு
ஆழிகைதா வழகாருமங் கயற்கணம்மை பங்கர் அழகியசொக்க ரருள்புரிவருன் பான்மருவி யம்மே. | 7 | வேறு
பேசு மென்குறி மோச மென்றிடில் ஆர்சொ லும்பரி யாசமே வாச மென்குழ லாய்சவுந்தர மாறர் வந்தணை வாரமே. | 8 | வேறு
நங்கை நீகரு துங்குறி சொல்லவுன் செங்கை தனக்கொடு வாவெங்கள் அங்க யற்கண்ணி பங்க ரருட்சொக்க லிங்க ரினியணை வாரம்மே. | 9 | வேறு
தூசுமொரு காசும்வையுண் ணேசம்வரவே சொல்லநான் ஈசர்கயி லாசர்மது ரேசருனைச்சேர் வாரம்மே. | 10 |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கைக்குறியின் முகக்குறிநன் றிடத்தெழுந்த திக்குறிநன் றென்கின்றா ரிடக்கண்ணுந் பொய்க்குறிய சிறுமருங்குற் பூங்கொடி நீ மெய்க்குறியும் வளைக்குறியு முலைக்குறியு 11 |
|
மொச்சகக் கலிப்பா
கடமலைக்கும் வெம்மலையாங் கம்மலையு மாயிரவாய்ப் படமலைக்கு மரவரசும் பரித்தருளும் பார்மடந்தை குடமலைக்குந் தடமுலையாங் குலமலைக ளிரண்டெனவும் வடமலைக்குந் தென்பொதியு மலயமலை யென்மலையே. | 12 |
திங்கண்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்க ணம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி தூங்குமலை பொதியமலை யென்மலையே. | 13 |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கன்ன மதம்பெய் துறங்குகொலைக் தென்னந் தமிழும் பசுங்குழவித் அன்னம் பயிலும் பொழிற்கூட பொன்னங் குடுமித் தடஞ்சாரற் 14
|
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
மந்தமா ருதம்வளரு மலையெங்கண் மலையே கந்தவேள் விளையாடு மலையெங்கண் மலையே ...................................................................... இந்தமா நிலம்புரக்கு மங்கயற்கண் ணம்மை 15 | |
சிங்கமும்வெங் களிறுமுடன் விளையாடு மொருபாற் வெங்கரடி மரையினொடும் விளையாடு மொருபால் அங்கணமர் நிலங்கவிக்கும் வெண்கவிகை நிழற்கீ செங்கமலப் பதம்பரவுங் கும்பமுனி பயிலுந் 16 |
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கச்சைப் பொருது மதர்த்தெழுந்து பச்சைப் பசுங்கொம் பங்கயற்கட் செச்சைப் படலை நறுங்குஞ்சிச் கொச்சைச் சிறுமி தனைக்கொடுத்த 17 |
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி யெடுப்போம் பழம்பிழிந்த கொழுஞ்சாறுந் தேறலும்வாய் மடுப்போம் செழுந்தினையு நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம் 18 | |
புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை யிணங்கும் கல்விடரில் வரிவேங்கை கடமானோ டுறங்கும் சில்வலையும் பலவாரு முன்னிறப்பிற் றூங்கும் கொல்லையின்மான் பிணையுமிளம் பிடியும்விளை யாடும் 19 |
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக் வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு 20 |
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கூடல்புன வாயில்கொடுங் குன்றுபரங் குன்று ஏடகமா டானைதிருக் கானப்பேர் சுழிய நாடியெங்க ளங்கயற்கண் ணாண்டதமிழ்ப் பாண்டி காடுமலை யுந்திரிந்து குறிசொல்லிக் காலங் 21 | |
பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடியென் பாட்டி மற்றவள்பெண் களிலெங்கள் பெரியதாய் கலைமான் பெற்றவெங்க ணற்றாயுஞ் சுந்தரியிந் திரன்றோள் சொற்றகுறிக் களவிலையெங் கன்னிமா ரறியச் 22
|
முன்னொருநா ளம்மைதடா தகைபிறந்த நாளின் | பின்னொருநாள் கைக்குறிபார்த் தம்மையுனக் கெங்கள் அன்னையவண் மெய்க்குறிக ளனைத்தையும்பார்த் துனக்கோ சொன்னகுறி யெல்லாமென் சொற்படியே பலிக்கும் 23 |
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
ஒருகாலங் கஞ்சியுமென் குஞ்சுதலைக் பொருகால வேற்கண்ணாய் மனத்துநீ வருகால நிகழ்காலங் கழிகால தருகாலந் தெரிந்துரைப்ப தௌிதரிதன் 24 |
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
குங்குமஞ்சந் தனக்குழம்பிற் குழைத்துத்தரை மெழுகிக் செங்கனக நவமணிக டிசைநான்கும் பரப்பித் பொங்குநறு மலறுகோ டைங்கரர்க்குச் சாத்திப் மங்கையருக் கரசியெங்க ளங்கயற்கண் ணமுதை 25 | |
முந்நாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா இந்நாழி நெல்லையுமுக் கூறுசெய்தோர் கூற்றை உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையர்வந் துதித்தா என்னாணை யெங்கள்குலக் கன்னிமா ரறிய 26 |
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
நெல்லளந் திட்ட போது பல்லியும் வரத்தே சொல்லும் சொல்லிய வாய்ச்சொ லன்றித் அல்லது கிளைகூட் டும்புற் 27 |
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கொண்டுவா வம்மேகை கொண்டுவா வம்மே வண்டுசுலா மலர்கொய்ய வருந்திடுமுன் கையே புண்டரிகம் பூத்தழகு பொலிந்திடுமுன் கையே அண்டர்தநா யகியெங்கண் மதுரைநா யகியை 28 | |
அம்மேநின் செங்கையைநின் கொங்கையில்வைத் ததுதா இம்மேலைத் திகையினிற்கை யெடுத்ததுவு மவர்தாம் கைம்மேற்கை கட்டியதுந் தப்பாம லுனக்குக் செம்மேனி மணிவயிற்றிற் கைவைத்த தினிநீ 29 |
|
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
அங்கைத் தலத்துத் தனரேகை யளவில் செங்கைத் துடிதென் மதுரேசர் செம்பொற் இங்கிப் படிபுத் திரரேகை யெவர்க்கு தங்கு மறுவங் கயற்கணம்மை தன்னோ 30 |
|
சிந்து
பொன்பொதியுந் துகிலெனவெண் புயலொடுதண் பனிமூடும் தென்பொதிய மலையாட்டி பேரைச்சொல்லாய் பாடநான். | 31 |
பலநதிகள் புணர்ந்தநதி பதியையணை யாதவைகைக் குலநதித்தண் டுறைச்செல்வி பேரைச்சொல்லாய் பாடநான். | 32 |
அன்பாண்டு கல்வலிதென் றவ்வைபா டியவெங்கள் தென்பாண்டி நாட்டாடன் பேரைச்சொல்லாய் பாடநான். | 33 |
பொன்மாடஞ் சூழ்ந்தகரும் புயலமலன் போர்வைநிகர் பன்மாடக் கூடலாள் பேரைச்சொல்லாய் பாடநான். | 34 |
எண்டிசைக்கும் வேம்பாயெம் மிறையவர்க்குக் கரும்பாகும் வண்டிசைக்குந் தாரினாள் பேரைச்சொல்லாய் பாடநான். | 35 |
தினவட்ட மிடும்பருதித் திண்பரிமண் பரியாக்கும் கனவட்ட வாம்பரியாள் பேரைச்சொல்லாய் பாடநான். | 36 |
திக்கயங்கள் புறங்கொடுப்பத் திசையெட்டுந் திறைகொண்ட கைக்கயத்தை மேற்கொண்டாள் பேரைச்சொல்லாய் பாடநான். | 37 |
ஆனேற்றுங் கொடியானை யைங்கணையான் வென்றிடவம் மீனேற்றின் கொடியுயர்த்தாள் பேரைச்சொல்லாய் பாடநான். | 38 |
இனியாணை யிலையரசர்க் கென்றுதிசை யெட்டுமொரு தனியாணை செலுத்தினாள் பேரைச்சொல்லாய் பாடநான். | 39 |
கருமலையச் செருமலையுங் கைம்மலைய மன்னர்தொழ வருமலையத் துவசனருண் மடக்கொடியைப் பாடுவனே. | 40 |
விண்புரக்குங் கதிர்மௌலி முடிகவித்து வெண்குடைக்கீழ் மண்புரக்கு மபிடேக வல்லியைநான் பாடுவனே. | 41 |
வெம்புருவச் சிலைகுனித்து விழிக்கணைக ளிரண்டெந்தை மொய்ம்புருவத் தொடுத்தெய்த மொய்குழலைப் பாடுவனே. | 42 |
ஊன்கொண்ட முடைத்தலையிற் பலிகொண்டார்க் குலகேழும் தான்கொண்ட வரசாட்சி தந்தாளைப் பாடுவனே. | 43 |
வானவர்கோன் முடிசிதறி வடவரையிற் கயலெழுது மீனவர்கோன் றனைப்பயந்த மெல்லியலைப் பாடுவனே. | 44 |
கான்மணக்குஞ் சடைக்காட்டிற் கவின்மணக்குங் கடிக்கொன்றைத் தேன்மணக்கும் பிறைநாறுஞ் சீறடியைப் பாடுவனே. | 45 |
எவ்விடத்துந் தாமாகி யிருந்தவருக் கருந்தவரும் வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடியைய் பாடுவனே. | 46 |
வைத்தபகி ரண்டமெனு மணற்சிற்றி லிழைத்திழைத்தோர் பித்தனுடன் விளையாடும் பெய்வளையைப் பாடுவனே. | 47 |
இலைக்குறியுங் குணமுநமக் கென்பார்க்கு வளைக்குறியும் முலைக்குறியு மணிந்திட்ட மொய்குழலைப் பாடுவனே. | 48 |
ஒன்றாகி யனைத்துயிர்க்கு முயிராகி யெப்பொருளும் அன்றாகி யவையனைத்து மானாளைப் பாடுவனே. | 49 |
பரசிருக்குந் தமிழ்க்கூடற் பழியஞ்சிச் சொக்கருடன் அரசிருக்கு மங்கயற்கண் ணாரமுதைப் பாடுவனே. | 50 |
கொச்சகக் கலிப்பா
நீர்வாழி தென்மதுரை நின்மலனா ரருள்வாழி கார்வாழி யங்கயற்கட் கன்னிதிரு வருள்வாழி சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி பேர்வாழி யவன்செல்வம் பெரிதூழி வாழியவே. | 51 |
மதுரை மீனாட்சியம்மை குறம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை மீனாட்சியம்மை குறம் - Kumarakurubarar Books - ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - கழிநெடிலடி, யாசிரியவிருத்தம், பாடுவனே, பாடநான், அறுசீர்க், பேரைச்சொல்லாய், எண்சீர்க், மலையெங்கண், மீனாட்சியம்மை, சிந்து, விளையாடு, தென்பொதிய