கம்பர் நூல்கள் - திருக்கை வழக்கம்
கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் திருக்கை வழக்கமும் ஒன்றாகும். இது வேளாண் பெருமக்களின் கொடைக் குணத்தைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும்
கலிவெண்பா
திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை
கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை பிரியாமல் வாழுங் கை. | 1 |
சந்தனம் அரைக்கும் கை
மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன்
திங்கள் அணி எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை. | 2 |
முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை
இளையான்குடி மாற நாயனார்
இளையான்குடி மாற நாயனார்
அம்பொன்
வளைவாரி வையகமும் வானகமும் போற்ற முளைவாரி வந்த முழுக் கை. | 3 |
எச்சிற்கையால் கல்லெறிந்தகை
சங்கமங்கை சாக்கியநாயனார்
சங்கமங்கை சாக்கியநாயனார்
கிளை வாழக் கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை. | 4 |
ஈசற்கான மாவடுசிந்தி தன்தலையை அரிந்தகை
கணமங்கலம் அரவாட்தாய நாயனார்
பச்சை மிகு தேமா வடுக் கமரில் சிந்திற் றன்றே கழுத்தை ஆமா மெனவே அரிந்திடுங் கை. | 5 |
தொண்டர்பின் ஈசன் எனமுடிபு கொண்டகை
மலைநாட்டுச்செங்குன்றூர் விறல்மிண்டநாயனார்
மலைநாட்டுச்செங்குன்றூர் விறல்மிண்டநாயனார்
வாம மறை ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற கென்றே மோது தடிகொண்டு முடுகுங் கை. | 6 |
திருந்தி ஈசனுக்கே பூசைசெய் பெருந்தகை
திருநாவுக்கரசு நாயனார்
தீ தகல அஞ் செழுத்தே ஒன்றாகி அப்பர்எனத் தோன்றிஅரன் செஞ்சரணத்தே பூசை செய்யும் கை. | 7 |
ஈசனை ஏவல்கொண்டோர் அளியுதவி மறுத்தகை
ஏயர்கொன் கலிக்காம நாயனார்
வஞ்சியர் பால் தூ தரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல் பேதமறக் தன்வயிறு பீறும் கை. | 8 |
சுந்தரர்பொருட்டு நெற்சிவிகை தாங்கியகை
குண்டயூர் கிழார்
பூதத்தின் மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத் தக்க சிவிகை கணை தாங்கும் கை. | 9 |
வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை
சடையப்ப வள்ளல்
மைக் கடு வாய் மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை. | 10 |
உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை
ஆக்கமுடன் ஏத மற்ற கீர்த்தியைக் கொண் டேட்டகத்திலே அடிமைச் சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை. | 11 |
மகவு தாங்கிய பெண்டிரும் விருந்தினுக் குதவுங்கை
மேதினியில் சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை பாலடிசில் தன்னைப் படைக்குங் கை. | 12 |
தனிமையிலிறந்த பாணனுடலை ஈடேற்றியகை
தொண்டைநாட்டு மறவை வாழ் அரங்கேசன்
தொண்டைநாட்டு மறவை வாழ் அரங்கேசன்
சாலவே நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல் பாணன் பிணத்தைப் பரிக்குங் கை. | 13 |
தானுண்டதும் கூழே என காட்டிய கை
செம்பியனுக்காக பேறையூரான் செய்கை
காணவே தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ் உண்ட வயிற்றை பீறி ஊற்றுங் கை. | 14 |
நீலிக்கஞ்சிய வணிகனுக்கு உறுதியளித்த கை
தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்
தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்
கண் டளவில் நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக் கோலி யபயம் கொடுக்குங் கை. | 15 |
நீலியினால் வணிகனிறக்க நெருப்பினிலிறங்கிய கை
மேற்படி
ஆல மெனும் வன்னியிடை முழ்கி வானோர் பழிகழுவிக் கன்னி தனையே மணந்த காட்சிக் கை. | 16 |
உற்றோர் செய்ததை தானும்செய்திறந்தகை
மேற்படி
துன்னு மொரு பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின் கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை. | 17 |
தானுண்கலத்தில் கையமைத்துக் காத்திட்டகை
பறைமுழைநந்தன்சாம்பான்-போராவூர்வேளாளன்
பறைமுழைநந்தன்சாம்பான்-போராவூர்வேளாளன்
பா ரறிய வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில் சோறு பிசைந் துண்ட சுடர் மணிக் கை. | 18 |
புண்ணைக்காட்ட சீனபட்டாடை கிழித்தகை
சோழனெதிரில் சடையப்பவள்ளல்
ஆறாத் தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின் புடவை கிழித்த பெருங் கை. | 19 |
நாற்படைசெல்ல வெந்தணலில் ஏற்பூட்டும்கை
கடல் சூழ்ந்த பார்பூட்டு மன்னர் பரிகரி பூட்டக் கதிரோன் தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை. | 20 |
காமன் வெற்றிக்கு தாற்றுக்கோல் தாங்குங்கை
வீரமதன் ஐங்கோல் தொடுக்க அணைகோ லெடுக்கஉழும் பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை. | 21 |
மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை
இங்கிதமாம் சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு பேர்படைத்த மேழி பிடிக்குங் கை. கார்படைத்த | 22 |
உலகில் நல்லறிவு படர நாற்று விசிறுங் கை
மிஞ்சுமதி கீர்த்த்யைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச் செஞ்சாலி நாற்றை தெளிக்குங் கை. | 23 |
கள்ளம் புல்பூண்டொழித்துலகம் காக்குங்கை
எஞ்சாமல் வெள்ளைக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக் கள்ளக் களை களைந்த கற்பகக் கை. | 24 |
க்ஷஷபல்வகைப் போர் வெற்றிக்கும் மூலமாங்கை
வள் ளுறையும் விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர் நெற்போர் முதல் போர் நெறித்திடுங் கை. | 25 |
மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை
கற்பகம் போல் மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின் வாழிக் கொடியே மருவுங் கை. | 26 |
வறியவர் வேதாகமபுராணம் தழைக்குங்கை
திருநின்றையூர் காளத்திவாண முதலியார்
திருநின்றையூர் காளத்திவாண முதலியார்
நீ ளுலகில் ஆதுலர்குச் செம்பொ னளிக்குங் கை ஆகமங்கள் வேத புராணங்கள் விரிக்குங் கை. | 27 |
பதினாறுபேறும் யாவரும்பெற உழைக்குங்கை
நீதிநெறி மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை தானம் தருமம் தழைக்குங் கை. | 28 |
நலிந்தோர் நலமழிந்தோர் தாங்குங்கை
ஆன தமிழ் கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல் எல்லாரையுங் காத் தீடேற்றுங் கை. | 29 |
ஈடில்லாத ஈடுகொள்ளாது பயனளிக்குங்கை
வல்லமை சேர் மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல் கைம்மா றிலா தளித்த கற்பகக் கை. | 30 |
பலருண்ண பயன்பலபெற வாழும் சீராளர்கை
சும்மை ஆர் ஊருணி நீர் போல் உலகத்தவர்க் கெல்லாம் பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை. | 31 |
உற்றபோது வுடனுதவும் தண்கை
பாரில் உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே கோடுக்க இசைந்த குளிர் கை. | 32 |
மூவருக்கும் முதலான மூலமாங்கை
இடுக்கணினால் மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத் தாம் அலையாமல் கொடுத்துத் தாங்குங் கை. | 33 |
இயன்ற மாவையும் ஈந்த ஏழையின்கை
கம்பநாடரிடம் ஓர் வேளாளன்
கம்பநாடரிடம் ஓர் வேளாளன்
தே மருவு நாவில் புகழ் கம்பநாடற் கடிமை யென்றே மாவைக் கரைத்து முன்னே வைக்குங் கை. | 34 |
விடநாக கடியினில்மிளிர் நனிநாகரீக நற்கை
சடையப்ப வள்ளல் கை
பாவலர் தாம் ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே காரி விடநாகங் கடிக்குங் கை. | 35 |
பஞ்சகாலத்தில் நீளும் பாசமுள்ளகை
குமிழம்பட்டு, இடையாலம் வாழ்ந்த வேளாளர்
குமிழம்பட்டு, இடையாலம் வாழ்ந்த வேளாளர்
பா ரறியச் சங்கை யிட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப் பங்கை யிட் டிரட்சித்த பங்கயக் கை. | 36 |
என்னளவாயினும் ஈந்து சொற் பிறம்பாதகை
பொன்விளைந்த களத்தூர் குடிதாங்கி முதலியார்
பொன்விளைந்த களத்தூர் குடிதாங்கி முதலியார்
பொங்கமொடு செம்பென் விளை களத்தூர் செந்நெல் விளைந்ததனை நம்பி மறையோர்கு அளித்த நாணயக் கை. | 37 |
வந்த பின்னும் வருமுன்னும் காக்குங்கை
அம்பொன் விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை வளைய மதி லிட்டு வருங் கை. | 38 |
எக்காலத்தும் ஈவோமென சாசனமிட்ட கை
கள மதனில் ஏற்கவந்த ஆதுலர்க் கில்லை யென்னாமல் செம்பொன் கார்க் கையினால் முக் கை யிட்ட கற்பகக் கை. | 39 |
ஈசனுக்கு திருப்பணிகள் பற்பலசெய் கொண்டற்கை
தீர்க்கமதாத் திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள் விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை. | 40 |
கலைஞான பயிர்விளைக்குங் பெற்றிணைகை
திருப்புகழை எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை வண்மை பெற உண்டாக்கும் வா குள கை. பண்ணமைந்த | 41 |
நன்னெறியும் தன்மொழியும் காக்குங்கை
இருமொழி ஞானம் படைத்த நம்மாழ்வார்
இருமொழி ஞானம் படைத்த நம்மாழ்வார்
வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால் ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை. | 42 |
புலவனெதிர் படைத்தகனி உவக்குங்கை
பூதலத்தில் பாவல னெச்சில் படு மாங்கனியை எடுத் தாவலுடன் நன்றா கருந்துங் கை. | 43 |
மன்னவன்கண் பெரியதெவை காட்டிய கை
அநபாயனுக்கு சிறார் பருவ சேக்கிழார்
அநபாயனுக்கு சிறார் பருவ சேக்கிழார்
காவலன் மண்ணில் கடலில் மலையின் பெரிய தென எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை. | 44 |
தமிழின் புகழினுக்கு முடியையே ஈந்தகை
குன்றையூர் எல்லன்
திண்ணமதாய் வையக மெங்குந் தேடி வந்த தமிழோன் புகழச் செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை. | 45 |
வேளான் வீரனின் வெற்றிக்கை
கருணாகரத் தொண்டைமான்
துய்ய புகழ் அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை வெட்டி பரணிகொண்ட வீரக் கை. | 46 |
வென்றிபெறு பொருளீட்டம் ஈந்த ஈகைக்கை
முனையடுவார் நாயனார்
திட்டமுடன் பொன்னால் அமுதும் பொரிக் கறியும் தான் கொணர்ந்து நன் நாவலர்க் களித்த நாணயக்கை. | 47 |
வணிகன்தன் கவலை போக்கியகை
ஆறைநகர் பரமேசுவரன் மகன் எல்லன்
ஆறைநகர் பரமேசுவரன் மகன் எல்லன்
முன்னாள் மனக் கவலை யுற்ற வணிகன் முன்னே நின்று தனைக் கா எனக் கேட்ட தண் கை. | 48 |
ஆனிரைகளை பலஅளிக்கும் பாங்கானகை
கனக்கவே அன் றீன்ற நா கெழுபதான எருமைத் திறத்தைக் கன்றோடு நல்கும் கடகக் கை. | 49 |
பாடலுக்கு கலம் நெல்லளிக்குங்கை
வென்றி தரும் ஓர் ஆனை நூராயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச் சீராக நல்கும் தியாகக் கை. | 50 |
பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை
பே ரியலைச் சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால் ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை. | 51 |
சிவிகை உதைத்த புலவன் காலிற்கு பூணளித்தகை
தொண்டைநாட்டு வல்லம் கச்சியப்ப வள்ளல்
தொண்டைநாட்டு வல்லம் கச்சியப்ப வள்ளல்
நேர்த்திபெற வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன் வெண்டய மிட்டே வணங்கும் வெற்றிக் கை. | 52 |
முடிமேல் குட்டிய புலவனுக்கு ஆழியிட்டகை
புண்டரிகக் கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச் செய்யாழி பண்ணி யிட்ட கை. | 53 |
அரிசிகேட்டயிடத்து யானையே அளிக்குங்கை
ஏகம்பவாணன்
நொய்ய எறும்புக்கும் ஆகாரந் தானில்லை என்ற மட்டில் திறம் புக்க யானை தரும் செங்கை. | 54 |
முனிகளுக்கு அளித்துவந்த பண்பட்டகை
பறம்பு தனில் எண்ணாயிரம் முனிவர்க்கு ஏற்றபடி அப்படியே பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை. | 55 |
விண்ணடைந்தோர் புகழினை ஏற்றுங்கை
விண்ணாடர் கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர நால் திக்கும் மேருவின் நாட்டும் கை. | 56 |
சிவன் முருகன் பிள்ளை மூவரையும் போற்றுங்கை
சீர்குகனை ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப் பாதாரவிந்தம் பணியும் கை. | 57 |
படைத்து காத்து ஈந்து இடர்களையயும் ஈரக்கை
நீதி நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை கொடுக்கை செழுங்கை குளிர்க் கை. | 58 |
எக்காலத்துமிடத்தும் ஈடேற்றும் இணையிற்கை
வேளாளர் குலத்துதித்த வல்லாளன்
வேளாளர் குலத்துதித்த வல்லாளன்
தொடுத்த தெல்லாம் சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக் காராளர் கற்பகப் பூங் கை. | 59 |
திருக்கை வழக்கம் முற்றிற்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கை வழக்கம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - நாயனார், தாங்குங்கை, காக்குங்கை, கற்பகக், கொடுத்த, வள்ளல், திருக்கை, தமிழோன்