ஐஞ்சிறு காப்பியங்கள் - நீலகேசி
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.
இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்து
1 | நல்லார் வணங்கப் படுவான்பிறப் பாதி நான்கு மில்லா னுயிர்கட் கிடர்தீர்த்துய ரின்ப மாக்குஞ் சொல்லான் றருமச் சுடரானெனுந் தொன்மை யினா னெல்லா முணர்ந்தா னவனேயிறை யாக வேத்தி. |
2 | அன்னான் பயந்த வறவாரமிர் துண்டு நின்றார் இன்னா ரினைய ரெனவேண்டுவ தில்லை யார்க்கும் பன்னாந் துணையும் பணிந்தாகிய பத்தி யினா னென்னா லுரைக்கப் படுகின்றதொன் றீங்கு ளதே. |
3 | பண்டாக மத்துட் பயிலாவுரை யென்று மிக்கார் விண்டீங் கிதனை வெகுளார்விடல் வேண்டு வன்யான் தண்டா மரைமே னடந்தான்றடந் தாள்வ ணங்கிக் கண்டேன் கிடந்தேன் கனவின்னிது கண்ட வாறே. |
4 | ஆய்நீல வுண்க ணவளாயடங் காமை செய்யும் பேய்நீல கேசி பெரியோனறங் கொண்ட பின்னைத் தீநீல வுள்ளந் திரிந்தேறு திருவத் தளாய் மாஞால மெல்லா மறமாற்றிய மாட்சி யளா. |
5 | தேவன் னுரைப்பத் தெளிந்தேன்பிற் றெளிந்த வெல்லாம் மாவென் றுகொண்டேன் மடனேவலி யாக நின்று நாவல் புலவ ரவைநாப்பண்ணி நாட்ட லுற்றேன் பாவின் னவென்று பழிப்பாரினி யில்லை யன்றே. |
6 | கண்டிங்கு நாளுங் கடல்வையகங் காதல் செய்யும் வெண்டிங்க டானும் விமலந்தனக் கில்ல தன்றே கொண்டென்சொ லெல்லாங் குணனேயெனக்கூறு கென்னே னுண்டிங்கோர் குற்ற மெனில்யானுமொட் டாமை யுண்டோ. |
7 | தெள்ளி நரைத்துத் தெருளாதுறு தீமை செய்யும் புள்ளி னுரையும் பொருளாமெனக் கோட லினா லெள்ளுந் திறத்த.: துரையென்றிது நீக்க லின்றாய்க் கொள்ளும் முலகங் குணமாணறம் வேண்டு மென்றால். |
கடவுள் வாழ்த்து
8 | நாடும் மநாடா ளரசுந்நக ருந்நகர்சூழ் காடுங் கடவுள் புகனீக்குதல் கார ணம்மாத் தேடுஞ் சிறுபேய் பெரும்பேய்த்தியைச் சென்று பற்றும் பாடும் மவடான் பகைகொண்டுபல் கால்வெ ருட்டி. |
9 | தான்கண்ட வன்செய் தவந்தன்னைக் கலக்க கில்லா மான்கொண்ட நோக்கின் னவளாய்மற மாற்றி யபின் னூன்கொண்ட காட்சி முதலாக வுடைத்த தெல்லாம் யான்கண்ட வாறே யுரைப்பன்னவை யார்க் கிதனை. |
தர்ம உரை
10 | மாஞ்சோலை பொங்கி மருதங்கிளிப் பிள்ளை கள்வாய்த் தீஞ்சா றொழுகுந் திணையின்னணி தங்கி யேங்குந் தாஞ்சால வாழ்நா டளிரீனுந் தகைய துண்டு பாஞ்சால மென்று பலரும்புகழ் பார்த்தி நாடே. |
11 | வாடா வளத்தான் மலர்ஞால மதிப்பின் மிக்க நாடாவ தி·தா மதனன்னலஞ் சொன்ன லத்தாற் கூடா தெனினுஞ் சிலகூறலும் வேண்டு மன்றே பாடா விருந்தார் பரிவஞ்சும் படிய தன்றே. |
12 | வருபுனலன வளவயலிடை மறிவனவின வாளை மருவினியன மகிழ்தகையன மலர்சிறையன நாரை கருவரியன கடுநடையன கனைகுரலன கம்புள் திருவுருவின தெரிகதிரின திசைதிசைதொறு செந்நெல். |
13 | பணைநிலையன கமுகொடுபடு பழமுதிர்வன தெங்க மிணைநிலையன சுளைகனியிவை யினியனபல வாழை மணனயர்வன மனையயலன மதுவிரிமணி நீலந் திணிநிலையன திரளரையன தெரிமலரன மருதம். |
14 | கரைதழுவிய கழிமடலின கடிகமழ்வன கைதை புரைதழுவிய பொதியவிழ்வன பொன்மலர்வன புன்னை விரைதழுவிய விழைதகையன வெறிமலர்விரி ஞாழல் நிரைதழுவிய நெறிகழியிடை நிகரலரன நெய்தல். |
15 | குருவுடையன கொடிமிடைவொடு குலைவிரிவன கோடல் தருசுடரன தளவயலின தகைமலரன தோன்றி யருகுடையன வணியுருவின வயலனவலர் காயா முருகுடையன முகைவிரிவன முறியலர்வன முல்லை. |
16 | நனைசினையன நகுவிரையன நலனுடையன நாகம் வினையுடையன பொழுதிவையென விரிவனகணி வேங்கை கனைசுடர்விடு கதிர்மணியறை களனயர்வன காந்த ளினியனபல சுனையயலன விறுவிரையன குறிஞ்சி. |
17 | ஆடலொடு பாடலவை தாமறுத லின்றிக் கேடில்புக ழாரவைகள் கண்டுமிசை கேட்டு மூடலொடு கூடலுணர் வார்கள்புணர் வாராய்ச் சேடரொடு சேடியருஞ் செல்வமிக நல்கி. |
18 | தானமொடு சீலமவை தாங்கிநல மோங்கி மானமொடு மாயமில ராயமனை யாருங் கானமொடு கல்லடரு ளில்லிடரு நீங்கி ஞானமொடு செய்வினைக ணையமுயல் வாரும். |
19 | அந்தணரு மல்லவரு மாகியுட னாய மந்தமறு நால்வருண மாட்சியின ராகித் தந்தநெறி யிற்றிரித றானுமில ராகி நந்திமிசை சேறலுடை நன்மையத நாடே. |
20 | ஞாலமறி நன்மையுடை நாடதென லானு மாலுமழை மூன்றுமுடை மாதமென லானுங் காலமவை தாங்கடுமை காண்பருமை யாலும் பாலைநில மொன்றுமவ ணின்மை பழுதன்றே. |
21 | இன்ன தன்மையி னாடினி தாளுமம் மன்ன வன்னவன் யாரெனில் வானிடைச் சொன்ன நீர்மைச் சுரேந்திரன் போன்றிவட் டன்ன னாரில் சமுத்திர சாரனே. |
22 | ஆற்ற லாலரி மாவவ னாணையாற் கூற்ற மேயெனக் கூறலு மாங்குடி போற்ற றாயனை யான்பொருந் தார்கண்மேற் சீற்றத் தாற்றெறு தீத்திர ளேயனான். |
23 | தீய தீரத் திருவிளை யாடிய தேயங் காவல னாய்த்திசை யாவினு மீய நீண்டகை யேந்த னகர்திசை போய புண்ட வருத்தன மென்பதே. |
24 | வளங்கெழு நெடுமதில் வாயில் யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்துமேல் விளங்கிவெண் மதிசெலல் விலக்கி நீள்விசும் பளந்ததன் றுணைமையு மறிவ தொத்தவே. |
25 | விரைசெல லிவுளியும் வேழ வீட்டமு நிரைசெலற் கொடுஞ்சிநன் னேமி யூர்தியு மரசுடைப் பெருங்கடை நெருங்கு மார்கலி திரைபொரு கடலொலி யன்ன செம்மற்றே. |
26 | அகிற்புகை யளாவியு மணிகொள் வீதியிற் றுகிற்கொடித் தொகுதியுந் தூய சுண்ணமு முகிற்றலைக் கலலிவான் மூடி மாநகர் பகற்கிடை கொடாததோர் பான்மை மிக்கதே. |
27 | ஆங்க மாநக ரணைந்தது பலாலைய மென்னும் பங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்கா டேங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி யாங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே. |
28 | விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி யிண்டு மீங்கையு மிருள்பட மிடைந்தவற் றிடையே குண்டு கண்ணின பேய்களுங் கூகையுங் குழறிக் கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும். |
29 | ஈமத் தூமமு மெரியினு மிருளொடு விளக்கா வூமைக் கூகையு மோரியு முறழுறழ் கதிக்கும் யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பில வழைக்கும் தீமைக் கேயிட னாயதோர் செம்மலை யுடைத்தே. |
30 | வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த கொள்ளி மலையுங் கொடிபடு கூறையு மகலும் பள்ளி மாறிய பாடையு மெலும்புமே பரந்து கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே. |
31 | காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித் தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச் சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும். |
32 | கோளி யாலமுங் கோழரை மரங்களும் குழுமித் தூளி யார்த்தெழு சுடலையு முடலமுந் துவன்றி மீளி யாக்கைய தாக்கியுண் பேய்க்கண மிகைசூழ் கூளி தாய்க்கென வாக்கிய கோட்டமொன் றுளதே. |
33 | இறைவி கோட்டத்து ளீரிரு திங்கள தகவை யுறையு ளாகவவ் வுறையருங் காட்டகத் துறைவான் பொறையு மாற்றலும் பூமியு மேருவு மனையான் தான். சிறைசெய் சிந்தைய னந்தமில் பொருள்களைத் தெரிந் |
34 | அத்தி காயங்க ளளவைக ளாலளந் தறிவான் குத்தி யாதிய குணங்களிற் பெரியவ னரிய பத்தின் மேலிரு தவத்தினிற் பவத்தொட ரறுக்கும் முத்தின் யான்முனிச் சந்திர னெனும்பெயர் முனிவன். |
35 | அன்றக் கோட்டத்து ளறிவிலா மறிதலை யறுப்பான் சென்ற தெய்வதைக் கெனச்சிலர் சிறப்பயர் பொழுதின் நின்றக் கோண்மின மெனச் சொல்லி நெறியறி வுறுவோ னொன்றற் பல்வகை யுயிர்க் கொலை யுரைமின மெனவே. |
36 | பண்டிந்நின்ற பணைத்தோளி பாலற்பெ றாமையைக் கண்டியாமிக் கணமோடி தன்பாற்சொன் னோமாக வுண்டதாயிற் றோர்குழவி யென்னவுவப் பித்தற்குக் கொண்டுவந்தே மறியறுக்க வென்றார் கொலையாளர். |
37 | ஊனுடம் போவுயிரோ வுறுகுழவி யாத றேனொடுங்குங் குழலாட்குத் தேவர்மன னுந்தந்த தூனுடம் பென்னி லுதிரமா முயிரென்னின் மானிடமாம் வினைமேலைச் செய்தன்றோ வந்ததென்றான். |
38 | ஏறியானை யிருங்கலைக ணேர்ந்தா ரவையிவையென் றூறங்கி யுருவுருசெய் தாலுமுவந் தொழிபவான் மாறுகோ ளிலைமண்ணான் மறியுருசெய் தீந்தக்காற் பாறினீர்க் கும்மவர்க்கும் பழிபாவ மொன்றிலையே |
39 | கொன்ற வன்னே கொடியனென வுலகங் கூறு மதனாலு மொன்ற நூலா ருரைகளோ டொப்ப முடியு மதனாலு மின்றி னின்று மிதுவொழிதி ராயி னுங்கட் கிருமைக்கு நன்றி தென்றான் வெந்நரகம் புகுதல் விலக்கு நாவினான். |
40 | கோறல் பொய்த்தல் கொடுங்களவு சேற லின்றிச் செழும்பொருண்மேற் யாறு கிற்பி னமருலக நீறு மோடு நிழன்மணியும் |
41 | ஏத்து தற்கேற் றானிரங்கி யின்ன வைசொல் லக்கேட்டுப் பாத்தி யோயெம் பழவினையும் பாறு கென்று பணிந்துதாம் யாத்து நின்ற வம்மறியும் மறமு முடனே கொண்டுபோய்க் காத்து மென்றார் கருவினையு ணீங்கு நல்ல கருத்தினார். |
42 | ஆய மெல்லா மதுசொல்லிப் போக வவணே வாழ்கின்ற பேயுங் கூடிப் பெரிதுமகி சூழ்ந்து தம்பெற் றிசொல்லி னாயு மாக்க ருத்துமில னாவ னிவனங் கட்கென்னிற் றீயு மன்னென் றேற்றகரு மையாலெனுஞ்சிந் தையிலவாய் |
43 | நிரந்து வெங்கதி ரெழுதலி னிற்றலை யிலதாய்க் கரந்த காரிருள் போற்கணங் காண்டலுக் கரிதாய்ப் பரந்த நாம்பல நாடுகள் பாடிக ணாடி (றெண்ணி) யிரந்தோர் வன்றெய்வங் கொணர்ந்திவற் கடிதுமென் |
44 | ஆசு மிங்கிருந் தினியென்னை எழுகவென் றயல காசி நாட்டினுஞ் சேடிய நாட்டினுங் காணா தேசந் தாம்பல திரியவத் தென்றிசை நீல கேசி மாதெய்வந் தலைப்பட்டுக் கிளர்ந்தின்ன வுரைக்கும். |
45 | வலிசெய் தெம்மிடம் புகுந்தடு மடையொடு முடைசேர் பலியு மூட்டுதல் பாவமீ தெனப்பலர்க் குரைத்துக் கலிகொள் காடுதன் காற்பொடி யாகவுங் கருதா னலைசெய் தானெமை யாமுனக் கபயமென் றழுத. |
46 | அழுவ தென்செய அருந்தவம் வலித்தவ னிருந்து பொழுது போக்குதல் புரிந்தனன் பொருத்தம· துடைத்தே கழுகு தாமுணக் காட்டுவ னெனக்கைகள் புடையா வெழுக வென்றுசென் றிடுபிணப் பறந்தலை யிருந்தாள். |
47 | இருட்டி ருட்டென நடந்துசென் றெழுந்தெழுந் திருக்கும் வெருட்ட லன்னினை விழுங்குவ னெனத்தன்னை வியக்கு மருட்டி றம்மில னறியினி யருவரை நெடுங்கோட் டுருட்டு வேனென வுயர்தவத் தவன்முன்னை யுரைக்கும். |
48 | சீல நல்லன சினவரன் றிருமொழி தெளிந்தான் கால மூன்றினுங் கடையில்பல் பொருளுணர் வுடையான் மேலு மின்னபல் வியந்தரம் வெருட்டுத லறிவான் நீல கேசிதன் னெறியின்மை யிதுவென நினைந்தான். |
49 | வெருட்டு மாகிலும் வெருட்டுக விகுர்வணை களினாற் றெருட்டு வேனிவ டிறமின்மை சிறிதிடைப் படலும் பொருட்டி றங்களைப் புலமையிற் புனைந்துரை பெறுமே லருட்டி றந்நல வறநெறி பெறுதலு மறிந்தான். |
50 | மாக மேயுற மலையன்ன சிலையொடு சிலையா மேக மேயென விசும்பிடை வெடிபட விடியா நாக மேயென நாவினை நீட்டுவ காட்டாப் பாக மேயெனப் பலவெனச் சிலவென வுலவும். |
51 | இலங்கு நீளெயிற் றிடையிடை யழலெழச் சிரியாக் கலங்கு மார்ப்பொடு சார்ப்படு மழையெனத் தெழியாப் பிலங்கண் டன்னதன் பெருமுழை வாய்திறந் தழையா மலங்க நின்றுதன் மடனெடு மயிர்க்கையிட் டுயிர்க்கும். |
52 | பொங்கு பூமியுட்பொடிபட வடியிணை புடையாப் பங்க மேசெய்து படபட வயிறடித் திறுகி யங்கி போலவீழ்ந் தலறிநின் றுலறியங் காக்கு மெங்குந் தானென வெரிகொள்ளி வளையெனத் திரியும். |
53 | கல்லி னாற்கடுங் கனலினுங் கடுகென வெடிக்கும் வில்லின் வாய்ப்பெய்து விளங்குவெண் பகழிகள் விடுக்கும் மல்லி னாற்சென்று மறித்திடு வேனென நெறிக்கும் பல்லி னாற்பல பிணங்களி னிணங்களைப் பகிரும். |
54 | ஓடு முட்குடை யுருவுகொண் டருவென வொளிக்கும் பாடு பாணியிற் பலபல கலகல வொலியா ஆடு நாடக மரும்பசி களைகென விரும்பி ஊடு போவனென் றுரைத்துரைத் துள்ளஞ்செய் தொழியும். |
55 | குஞ்ச ரம்பெருங் கொடுவரி கடுவிடை கொலைசூ ழஞ்சு தன்மைய வடலரி யெனவின்ன பிறவும் வெஞ்சி னம்பெரி துடையன விவையினும் வெருளான் றஞ்ச மன்றிவன் றவநிறை சுடுமெனத் தவிர்ந்தாள். |
56 | அச்ச மேயுறுத் தழிக்குவன் தவமென அறியேன் விச்சை வேறிலன் விழுக்குண முடையனிவ் விறலோன் இச்சையாலன்றி யிவன்முன்னை நிலையெனக் கரிதா நச்சு மெய்யென நடுங்கும் னுடம்பென வொடுங்கி. |
57 | ஆற்றல் சான்றவ னருந்தவ வழலெனை யடுமான் மாற்று மாறென்கொ லெனநனி மனத்தினு ணினையாச் சீற்றந் தீர்ந்தென்செய் கருவினை தணிகெனப் பணிந்தாள் கூற்றம் போல்வதோர்கொடுமையையுடையவள் குறைந்தே. |
58 | சிந்தித் தாளிது செறியெயிற் றரிவைய துருவாய்ப் பந்தித் தாகிய பழவினை கெடுகெனப் படிற்றால் வந்தித் தியான்கொண்ட வடிவினின் மனநிறை யழித்தா னொந்தித் தீநிகர் நோன்புகை விடுமிவ னெனவே.] |
59 | யாம நீங்கலு மரசன்ற னொருமக ளுரைசால் காம லேகைதன் னுருவொடு திருவெனத் தோன்றித் தாமஞ் சாந்துதண் மலரின்ன பலகொண்டு துணைசால் சேமங் காவல சேவடி போற்றெனச் சென்றாள். |
60 | வணங்கி வந்திடம் வலங்கொண்டு வழிபடு பொழுதில் கணங்க டாம்பல கடன்சொல்லிக் கலந்தெடுத் தேத்தித் துணங்கை யாடத்தன் றுகிலிடை மேகலை துளங்க வணங்கு மெய்யவ ளருந்தவ னுழைவர நினைந்தாள். |
61 | காவ லாளகுங் கடையிறந் திவண்வர வொழிக வேவ லாளரு மிதற்கெய்து மியல்குறை முயல்க கூலி யான்குறை யுளதெனக் குறுகுமி னமரென் றோவில் பல்புக ழுறுதவ னறியநின் றுரைக்கும். |
62 | ஆண்டைக் கோட்டத்தை அணைந்ததோ ரகலிலை யால மாண்டைக் காயதோர் மரமுத லிருந்தமா தவனைக் காண்டக் காயென்செய்கருவினை தணிக்கெனப் பணிந்தாள் வேண்டிக் கொண்டவவ் வியத்தகுவிளங்குரு வுடையாள் |
63 | வேண்டிய வுருவத னாலும் வேட்கைசெய் யுருவத னாலுங் காண்டகு மடவர லுருவங் காமுறு வதுநனி தாங்கி யீண்டிய மிகுகுணத் திறைவ னியல்பினை யெனையது நினையா நீண்டதோர் கொடியயற் கொடிபோ னிறைதவ வருளென நின்றாள். |
64 | உடம்பொடு முயிரிடை மிடைந்த வொற்றுமை வேற்றுமை விகற்பிற் றொடர்ந்தபல் வினைகளைத் துணிக்குஞ் சுதநெறி முறைமையு மறிவான் படர்ந்ததன் யோகினை நிறுவிப்பணிந்தவரட் காசிடை மொழிந்தா னிடம்பக மகளிவள் பெரிது மிராசபுத் திரியல ளெனவே. |
65 | என்னைஈண் டைக்கு வரவென் றருந்தவன் வினவலு மெழிலார் பொன்னனாள் புடைபெயர்த் திட்ட பொலங்கல மனங்கலக் குவபோன் மின்னொளி யோடுற மிழற்றமிழற்றுவ கிளியென மொழிந்தாள் முன்னநான் பரவிய வரங்கண்முடிகுறை கொடுப்பதற் கெனவே. |
66 | யாதுநீ கொண்ட வரமென் றருந்தவ னியல்பினின் வினவ வேதினாட் டிறையெங்க ளிறைமே லியல்பின்றி யெழலொழி கெனவே போதுசாந் தவியொடு புகையும் பொருந்திய பொருந்தெய்வக் கெனலு மோதிஞா னியிது வாயி னுரையழ கீதென மொழிந்தான். |
67 | தோடுகொண் டொருசெவி விளங்கத் துளங்குவ மகரமொன் றாடப் பாடுவண் டோடுசுரும் பரற்றப் பல்கலம் வயிரவில் வீச வாடுகொம் பனையவ ருரைக்கு மச்சமோ பெரிதுடைத் தடிகள் காடுகண் டாற்பிறர்க் கறியேன் கவற்றுவ தொக்குமீ தெனக்கே. |
68 | மணிநகு நெடுமுடி மறவேன் மன்னவன் மகளெனின் மடவாய் அணிநகை யாயமோ டாடி அரும்பெறற் சுற்றமோ டிருப்பாய் பிணிமிகு பேய்வன மிதனுட் போதுற லொருதலை பிறவோ துணிவொடு துறந்தவர்க் கல்லாற் றுன்னதற் கரிதிது பிறர்க்கே. |
69 | வேணுவோ டினையன பிறவும் வியப்புறு பெருவனம் வினவிற் பேணுதற் கரிதிது பெரிதும் பிணிதரு பேய்வன மெனவே வாணுதன் மயிர்குளிர்த் துரைக்கும் மாதவத் தடிகளென் றானுங் காணுதற் கரியன வுருவங் கண்டறி வனகளு முளவோ. |
70 | புக்கிருந் தொருமனை யுறைவார் போவதும் வருவதுங் கண்டான் மக்களுந் தாயரந் தம்முள் மருள்வதும் வெருள்வது முளதோ மிக்கபல் கதிகளு முயிரின் மெய்ம்மையு முணர்ந்தவர்க் கரிதே ஒக்குமற் றவையுள வேனு முரைப்பது பொருத்தமின் றெமக்கே. |
71 | சந்திர முனிவர னுரைப்பத்தளிரியல் சாவுகள் சாரா மந்திர முளதெனி னடிகள்மனத்தொடு பணிமின மெனவே யந்தரத்தவர்களும் வணங்குமருந்தவ னவையுனை யடையா இந்திரன் வேண்டினும் பேய்களென்னமற் றிலங்கிழை மடவோள்; |
72 | துப்படு துவரிதழ் துடிக்குந்துகிலிடை யகலல்கு றுளக்குஞ் செப்படு வனமுலை செறிக்குஞ்சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கு மொப்படு துடியிடை யொசிக்குமுவ்வுறு மதிமுக முழற்று மிப்படி யவளிவை செயலுமிவையெனை யெமக்கென வுரைத்தான். |
73 | காதின கனகப் பைந்தோடுங்கைவெள் வளைகளுங் கழலத் தாதின வினமலர் பலவுந்தலையன நிலமிசை யுதிரப் போதன புணரரி நெடுங்கண்புனல்வரப் பூந்துகிற் புடையா வேதனை பெரிதுடைத் தடிகள்விளிகவிப் பிறப்பென வுரைத்தாள். |
74 | பிறவியும் பிறவியுட் பிறக்கும் பிணியுமப் பிணியினைத் துணிக்கு மறவியின் மருந்துமம் மருந்தின்மாட்சியுங் கேட்குறின் மடவா யறவிய மனத்தினை யாகி அலங்கழித் தொழிலொழிந் தடங்கி உறவினை யோம்பினை யிருவென்றுயர்தவ னுரைத்தலு மிருந்தாள். |
75 | நாற்கதி யுள்ள நரகரை நாஞ்சொல்லின் மூன்றுவகைக் காற்று வலையங்க ளேந்து நிரையக் கதிநிலந்தா மேற்ற நிகோதத்தி னிம்ப ரிருளி னிரளிருண்மே லாற்றப் புகையள றார்மணற் கூர்ம்பர லாய்மணியே. |
76 | ஏழா யவைவிரிந் தெண்பத்து நான்குநூ றாயிரமாம் போழா மவற்றப் புரையின் விகற்பமும் பொற்றொடியாய் கீழா ரலிகண் முழுச்செவி கிண்ணர்க ளெண்ணிகந்த வூழாம் பிறப்புமுவ் வாதமல் லாருரு வொப்பினரே. |
77 | விலங்கின் வகையும் விரிவன யான்சொல்ல வேண்டுதியே லலங்கலம் பூணா யிருவகை யாமவை யென்கொலென்னின் நிலங்களி னிற்பவுஞ் செல்பவு மாமென நிற்பனதா மிலம்பட லின்றியிவ் வையகத் தைந்தா யியன்றனவே. |
78 | இயங்கு வனவு மிருபொறி யையறி வெல்லையவாய் மயங்கியிம் மத்திம நல்லுல கத்தின மற்றிவற்று ணயம்படு நாவின் மூக்கில நந்து முரண்முதலா வயங்கியங் கோடிய வாயிரண்டாய அறிவினவே. |
79 | உண்ணி முகுட்டை எறும்பெறி தேண்முத லாவுடைய வெண்ணில் பல்கோடிய வாயவ் விரண்டொடு மூக்குடைய கண்ணிய மூவறி வாமவை பெற்றாற் கருணமிலா நண்ணிய வண்டொடு தேனீ யனையவு நாலறிவே. |
80 | இறப்பப்பல் காலின வெட்டி னிரண்டிரண் டேயிழிந்த பறப்ப நடப்ப தவழ்வன வூர்வன பற்பலவாச் சிறப்புடை யிந்திய மைந்தென வந்த செவியுடைய மறப்பில் கடலொடு தீவினு மல்கிய பல்விலங்கே. |
81 | வெப்பமுந் தட்பமு மிக்கு விரவிய யோனியவாய்ச் செப்புவ செப்பில் செய்கைக ளாற்றம செய்வினையைத் துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்து முன்றோன்றுவன வொப்பவு மொப்பிலுடம்புடம் பேகொண் டுழல்வனவும். |
82 | நல்லவர் தீயவர் திப்பிய ரொப்பில் குமானுயரோ டல்லவ ருள்ளுறுத் தாடவ ரைவரு ளாதியினார் சொல்லுக தன்மையென் பாயெனிற்சொல்லுவன் பல்வகையாற் புல்லிய போகப் பெருநிலந் தன்னைப் பொருந்தினரே. |
83 | தீமா னுயர்திறந் தேற்றிடிற் றீவின் சிறுநிலத்தார் கோமான் முதலார் குணங்களிற் குன்றிய குற்றத்தராய்த் தாமாம் பெரிய தவந்தலை நிற்பினுந் தன்மைபெறா ராமான் மடப்பிணை யன்னமென் னோக்கி யவரதிறமே. |
84 | திப்பிய ரென்னப் படுபவர் தீர்த்தந் திறப்பவரு மப்பிய புண்ணியத் தாழிய ராழிய ரையவரும் வெப்பிய வான் செலவ் விஞ்சையரெஞ்சலில் வெள்ளியரும் பப்பிய ரேயவர் பான்மை வினவினும் பைந்தொடியே. |
85 | கோலமி னோன்றற் குமானுயர் தம்மையுங் கூறுவன்கேள் வாலமுங் கோடும் வளைபல்லும் பெற்ற வடிவினராய்ச் சீலமுங் காட்சியுந் தீண்டலு ரந்தரத் தீவிலுள்ளார் நீலமும் வேலுங் கயலு நிகர்த்த நெடுங்கண்ணினாய். |
86 | மானுய ரென்னப் படுபவர் தாமா விதையமென்னுங் கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த் தானுய ரின்பந் தவத்தாற் றலைப்படுந் தன்மையினார் வானுயர் தோன்றல் வளர்பிறை யேசிய வாணுதலாய். |
87 | தூமாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பருப்பால் வேமானியரென வைவரித் தேவர் விரித்துரைப்பிற் றீமாண்குமரரோ டீரைவர் முன்னவ ரன்னவர்பின் பூமாண் புனைகுழ லாய்க்கினிச்சொல்லற் பொல்லா துகொல்லாம். |
88 | இன்குர லார்முத லாநும ரீறா விவருமெண்மர் பொன்பிதிர்ந் தன்ன பொறிசுணங் காகத்துப் பூண்முலையா யென்றலு மீரிழு தாரழ லுற்றாங் கினைபவளை நின்றிறம் பின்னறி வாமறங் கேளென நேர்ந்தனளே. |
89 | அந்தர வாழ்க்கையர் சோதிடர் தாங்களு மைவகையர் சந்திர சூரியர் கோளவர் நாளவ ரல்லவராய் மந்தர மாமலை தன்னை வலமுறை சூழ்பவருஞ் சிந்துபு நின்றுசெல் லாதே விளங்குந் திறலவரும். |
90 | ஆரண னச்சுதன் சோதம னந்தமு மாதியுமாய்ப் பாரணை நல்ல பதினறு கற்பத் தவரவர்மே (வோர் லோரிண ராயமும் மூன்றொன்ப தைந்துக ளுள்ளுறை வீரியர் வைமா னிகரெனக் கொண்ணீ விளங்கிழையாய். |
91 | இப்ப டிப்பி றவியு ளொப்பி றீய நாரகர் துப்ப ரிய மாதுயர் செப்பு வாஞ் சிறிதினி. |
92 | ஈரி ருள்ளி னார்கடம் பேர ளவ்வைஞ் ஞூறுவி லோரு மோச னையவை யூரும் வேத னையரே. |
93 | காள மான மெய்கடாம் வாள வாய்க ளாற்பல கீள வாப வாயினும் மீளு மேனி நீரினே. |
94 | மல்ல வர்ம றஞ்செய்துங் கொல்ல வாவ வல்லமெய் பல்ல வாவு முள்ளன சொல்ல வாவ வல்லவே. |
95 | பண்டை வோ¢ யர்கடாங் கண்டு கண்க னல்களாய் மண்டி மாம றஞ்செய்ப வெண்ட வப்ப லவுமே. |
96 | பேடி வேத னைபெரி தோடி யூறு மாதலாற் சேடி யாடு வன்மையிற் கூடி யாவ தில்லையே. |
97 | கொன்ற பாவ மென்றுமூன் றின்ற பாவ மென்றுதீச் சென்று வேவ வாயினு ணின்று கூவ வாக்குவார். |
98 | உண்ண வாவ நீரெனக் கண்ண வாவ வாபவர் நண்ண லாவ வல்லதே ரெண்ண லாவ தில்லையே. |
99 | கரிவ கன்றி நின்றகம் பொரிவ பொங்கி வீழ்ந்தழைத் தெரிவ வின்ன மாதுயர் பரிப வரு மில்லையே. |
100 | அங்கு வெங்க னலினுட் டங்கி யுந்த லைத்தலை பொங்கி யும்பு கைபுக நுங்கி யுந்நு கர்வவே. |
101 | ஓச னைய பல்லுயிர் வீவி னையு றவருங் காய்சி னக்க டுவிடம் பேசி னார்க்க ருளுணா. |
102 | ஓச னைய பல்லுயிர் வீவி னையு றவருங் காய்சி னக்க டுவிடம் பேசி னார்க்க ருளுணா. |
103 | நலங்களில் பிறவியு ணஞ்சுணா ரகர்கள்பின் விலங்கின்வே தனைகளும் விரிக்கல்வேண் டும்மெனிற் கலங்கியொன் றொன்றினைக் கண்டுகாற் றென்னப்போ மலங்கிநின் றும்மனம் மன்னுமஞ் சுங்களே. |
104 | தண்ணென்மா மழையினாற் றாமழிந் துழல்பவும் புண்ணினா லழியமெய்ப் போரிடைப் புகுத்தவு முண்ணல்கா ரணத்தினா லோட்டியிட் டொறுக்கவு மெண்ணில்பல் வலையினு மிழக்குமவ் வுயிர்களே |
105 | வேதவா தியர்கடம் வேள்விவாய விட்டவும் பூததே வர்கட்கெனாப் புல்லியோர்கள் கொல்லவு மோதுநோய் மருந்தெனவ் வூட்டுதற் குரைப்பவும் சாதலால் வரும்மிடர் தாமெனைப் பலவுமே. |
106 | நடுக்கமுறு நாற்கதியு ணரர்கள்படுந் துன்ப மெடுக்கிலவை தாமிரண்டு பாகினவு மாகு மடக்கமிலர்க் காவனவு மன்றிப்பொது வென்றும் வடுப்பிளவு வாட்பகழி வாட்டியவொண் கண்ணாய். |
107 | தீவினைசெய் வாயிலொடு செற்றமனக் குற்ற மாவினையி னாம்வெகுளி மானமொடு மாய மோவினையிற் பற்றவல மச்சமொடு மற்று மாவனவெ லாமடக்க மில்லவர்த நோவே. |
108 | இழுக்கலுறு தீக்கதியி லுய்க்குமென வெண்ணார் விழுக்குலங்கள் மாசுபடு மென்பதனை வேண்டார் புழுக்குலங்க ளானிறைத்த போர்வையென வோரா ரழுக்குடம்பிற் கேகெடுவ ராடவர்க ளந்தோ. |
109 | மதுவொன்றுங் கோதை மலரன்ன கண்ணாய் பொதுவென்ற நோயும் புணர்ந்திரண்டு பாகா மிதுவொன் றிடையூ றிரண்டாய் விரியு மதுவன்றி மெய்ப்பிணியு மூன்றா யலரும். |
110 | பெடையூடு சாயற் பிணையன்ன நோக்கி யிடையூ றிரண்டு மினியாவை யென்னி னடையா வுயிரதுவு மல்லதுவு மன்ன நடையாய் முதலதுவு நாற்பூத மாமே. |
111 | பெருமழையு நீரும் பெரிதெறியுங் காற்றுங் கருமலையுங் கல்லுங் கடுநவையு நஞ்சுஞ் செருமலையும் பல்படையுஞ் செந்தீயும் வந்திங் குருமிடியு மெல்லா முயிரல்ல வூறே. |
112 | செத்துவங்க டாக்கிச் செயிரி னணங்குதலும் மக்கள் பலவகையின் மன்னு மலைகொலையுங் துக்கஞ்செய் பல்விலங்கிற் றோன்று மிடையூறு மொக்கவிவை மூன்று முயிருடைய வூறே. |
113 | தீர்வனவுந் தீராத் திறத்தனவுஞ் செய்ம்மருந்தி னூர்வனவும் போலா துவசமத்தி னுய்ப்பனவும் யார்வினவுங் காலு மவைமூன்று கூற்றவா நேர்வனவே யாகு நிழறிகழும் பூணாய். |
114 | நல்லாய்நா ரின்றியே நாமுன் விரிசெய்த வெல்லா விமையோர்க்குமென்று மிறுதி சார்ந்த தல்லா லகன்றுன்ப மாகா நுமரன்றிப் பொல்லா தவர்களுறு மல்லைப் புகலுறுங்கால். |
115 | தீயே யெனவெவர்க்குஞ் செல்லல் பலவாக்கி வேயே புரைதோளாய் மிக்க விடமெங்கும் பேயே யெனப்பட்டுப் பேணா தனசெய்வர் நீயே யெனினல்லை நின்போல்வ ரன்றோ. |
116 | பேர்தற் கரும்பிணி தாமிவை யப்பிணி தீர்தற் குரியதிரி யோக மருந்திவை யோர்தற் றெளிவோ டொழுக்க மிவையுண்டார் பேர்த்த பிணியுட்பிற வார்பெரி தின்பமுற்றே. |
117 | மானொத்த நோக்கிமருந் தென்றவைமூன் றினுள்ளும் ஞானத்தி னன்மைநனி கேட்குவை யாயினக்கா லூனத்தை யின்றியுயி ராதிய வுள்பொருள்க டானற் குணர்தலிது வாமதன் றத்துவம்மே. |
118 | காண்டலு மல்லதே யளவை காண்டன்முன் பூண்டவைம் பொறிமன மவதி புண்ணிய மாண்டகு மனப்பரி யாயங் கேவல நாண்டகு மரிவைய ருருவ நண்ணினாய். |
119 | நினைவு மீட்டுணர் வூக நேர்தரு புனைவுசே ரணுமைபொய் யின்மை மெய்யுரை முனைவர்தம் மாகம மொழியு மாகுமென் றனையன காட்சியி லளவை யைந்துமே. |
120 | வைப்பு நயனள வைபுகு வாயிலென்றும் பொய்ப்பி லுயிரே பொருவில்குண மார்க்கணை செப்பி னிவற்றிற் றிரியாதுள் புகுபவாயி னொப்பில் பெருமை யுணர்விற்குயர் மாட்சியாமே. |
121 | காட்சி வகைதான் கடவுண் முதலாய மாட்சி யமைந்தபொரு ளெட்டு மனத்துவைத்து மீட்சியில தாய்விரிந் துந்திய வின்பவெள்ள வேட்கையது வாந்தெளி வென்றனர் வென்றவரே. |
122 | முந்துற்ற மூடப் புலிமூன்றும் பிழைத்த பின்னை யன்பச்ச மாசை யுலகோடிலிங் காத்த ரொப்பு மென்பெற்று மேத்த லிலராயெண் மயத்து நீங்க லின்புற்ற காட்சி யுடையார்க்கியல் பாகு மன்றே. |
123 | ஐயுற்றல் வேட்கை யுவர்ப்பேமயக் கியாது மின்மை செய்குற்ற நீக்க றிரிந்தாரை நிறுத்த லின்றிப் பொய்யற்ற காதற் பொருவில்லறங் காட்ட லெட்டுங் கையுற்ற வாயில் லதுகாட்சியின் மாட்சி யாமே. |
124 | நன்றாய காட்சி யுடனாகிய ஞானந் தன்னோ டொன்றாகி யுள்ளத் தொழியாமை யொழுக்க மென்ப குன்றாத வொன்றுங் குறைபாட்டதுங் கூறு பவ்வே வென்றார்த நூலின் விதிமெய்ம்மை யுணர்ந்த வரே. |
125 | போற்றல் செறிவே பொறையாதிய நல்ல றமு மேற்ற நினைப்போ டிருசார்வி ழுத்த வமு மாற்றல் பரிசை முதலாகிய வன்ன வெல்லாம் மாற்ற மறுக்கு மொழுக்கத்தின் மாட்சி யாமே. |
126 | யோக மிவற்றை யுடனுண்ட வுயிர்க ளெல்லாம் மாக விசும்பி னவர்தம்மொடு மன்ன ரும்மாய்ப் போக நுகர்ந்து பொருந்தாவினை புல்ல லின்றி யேகநல் லின்ப மியைந்தாலிழ வில்லை நல்லாய். |
127 | பிறவியா மாறும் பிணியாந் திறமும் மறவிதா னில்லா மருந்தாம் வகையும் திறவியாள் கேட்டுத் தெரிந்துள்ளங் கொள்ள வறவியான் றானு மறவமிர்த மீந்தான். |
128 | வண்டவாம் வார்குழலும் வாளெயிறும் பூண்முலையும் தொண்டைவாய் நன்னலமுந் தோளுந் துடியிடையும் கண்டவாங் காமுகரும் யாமுங் கணநரியும் விண்டவாக் கொண்டுணரின் வேறுவே றாமன்றோ. |
129 | கரையவா வாங்குங் கயமகன் கைத்தூண்டி லிரையவாப் பன்மீ னிடருறுவ தேபோல் நுரையவா நுண்டுகிலு மேகலையுஞ் சூழ்ந்த வரையவாய்ப் பட்டார்க்கு மாழ்துயரே கண்டீர். |
130 | மட்டார் மலர்புனைவும் வாணெடுங்கண் மையணிவும் பட்டார் கலையுடையும் பல்வளையும் பைந்தோடு நட்டாரை யெல்லா நரகுக்கே யுய்க்கு நாய்க் கொட்டார்த்தார் செய்யும் கோலங்கள் வண்ணம். |
131 | ஆடினாய் நான மணிந்தாய் கலன்மாலை சூடினா யேனுஞ் சுணங்கார் வனமுலையா யூடினா யாக வொழுக் கூற்றைப் பல்பண்டம் மூடினாய் தோலின் முகமனுரை யேனே. |
132 | மின்போ னுடங்கிடையும் வேயேய் திரடோளு மென்றே யிவை மகிழ்ந்தீங் கென்முன்னே வந்தாயாற் புன்றோலும் பல்லென்பும் போர்த்த புறங்காட்டு ளன்றே யுறைவ னவற்றான் மருள்வேனோ. |
133 | மெழுகுருகு மண்பாவை மேதையான் காய்த்தி யொழுகுருகு செம்பொன்னா லுண்ணிறைந்த தேபோல் புழுகுருகு மெய்காட்டிப் பொல்லாத போக்கி யழகுருவு கொண்டா ளறவமிர்த முண்டாள். |
134 | காய்வ செயினுங் குழவிக்கட்கவன்று கழிகண் ணோட்டத்தாற் றாய்தன் முலையி லமுதூட்டுந்தகைய னறவோன் றானென்று மாய வுருவ மாறித்தன்மற்றை யுருவ மேகொண்டு பேயேன் செய்த பிழையெல்லாம்பெரும பொறுவென் றிறைஞ்சினான். |
135 | முழங்கு முந்நீர் வையத்து முனிதக் கார்தம் முன்னின்று வழங்க வாட்ட மொழிவர்நமன்னும் பொறாத வகையுண்டோ வழுங்க லென்ற வறவோன்றனலர்கொள் பாதம் பெரிதேத்தித் தொழுங்கை யாளக் குணக்குன்றைத்துதிப்ப னென்று தொடங்கினாள். |
136 | வெள்ள மாரி தரித்தோய்நீவினையின் வாயி லடைத்தோய்நீ யுள்ள மாட்சி யுடையோய்நீயுயப்போம் வண்ண முரைத்தோய்நீ நள்ளென் யாமத் தியான்செய்தநவைக ளெல்லா நனிகண்டு மெள்ள லில்லாப் பெரியோய்நின்னிணையில் பாத மணைவல்யான். |
137 | மூட மூன்று முரைத்தோய் நீமுரண்செய் தோற்ற முனிந்தோய் நீ வீடுங் கட்டும் விரித்தோய் நீவினையி னின்பம் வெறுத்தோய் நீ காடு கிளர்ந்து காட்டியான் கலக்க வொன்றுங் கலங்காத பாடற் கரிய பெரியோய்நின்பழிப்பில் பாதம் பணிவல்யான். |
138 | அல்லற் பிறவி யகன்றோய்நீஆசை வெவ்வே ரறுத்தோய்நீ வெல்லற் கரிய வனங்கனைமெய் வெண்ணீ றாக வெகுண்டோய்நீ கொல்லக் கருதி வந்தேனைக்குணங்க ளாலே வணங்குவித்த சொல்லற் கரிய பெரியோய் நின்றோமில் பாதந் தொழுவல்யாள். |
139 | உடம்பின் மெய்ம்மை யுணர்ந்தோய்ந £யுறங்க லார்வ மறுத்தோய்நீ யிடங்கொ ளின்னா வினையெல்லா மெரிக்கும் வாயில் விரித்தோய்நீ யடங்க லில்லேற் கருளினாலறங்கூர் மாரி பொழிந்தோய்நின் றடங்கொள் செந்தா மரையடியென்றலைய வேயென் றலையவே. |
140 | தடம்படு மாரி தலைத்தலை நூற விடம்படு பல்லுயிர் மெய்வழி யேற வுடம்பொடு வேறெனு மோர்ப்பினை யாகி யடங்கிய நின்னடி யஞ்சலி செய்வேன். |
141 | கல்லுரு கக்கடுங் காற்றெறி போதினி னல்லிருள் கூர்சுடு காட்டிட மாகப் பல்வினை யும்பறிப் போய்நின் பாதம் நல்வினை யிற்றொழு வேனினி நாளும். |
142 | மங்குன் மழைபொழி மாரிபெந் நாளிற் கங்குலெண் ணில்லங் கவலைசெய் காட்டு ளெங்கு மியங்கல னென்றிருந் தோய்நின் பங்கயம் போல்வன பாதம் பணிவேன். |
143 | இற்றவர் தம்முட றின்றிட யாமம் முற்ற நரிமுர லும்முது காட்டுட் பற்றற வேநினை வோயிரு பாதம் சுற்றுபு யான்விதி யிற்றொழு வேனே. |
144 | திண்டிறல் சேர்சிறு பேயறை கீறி வெண்டலை யால்விளை யாடிய காட்டு ளெண்டுக ளும்மெரிப் போய்நின பாதம் வண்டறை பூவொடு வந்தனை செய்வேன். |
145 | பிணங்க ளிடையிடை போரழ லீமத் தணங்கு துணங்கைசெய் தாடிய காட்டுட் குணங்க ளுடையன குன்றுத லில்லாய் வணங்குவ னின்னடி வைகலி னாளும். |
146 | நுனித்தகு நன்னெறி நோக்கின ளாகி முனிப்பிறை யோனடி மும்மையி னேத்திப் பனிக்கட லன்னதொர் பாவமுஞ் செய்தே னினிச்செய்வ தென்னுரை யாயெனக் கென்றாள். |
147 | விலங்கு வெந்நர காதிக டம்முள் கலங்கி யெங்குங் கண்ணில வாகிக் நலங்களில் லாவுயிர் தங்களுக் கெல்லா சலங்களில் லாப்பெரி யோன்சரண் கொண்ணீ |
148 | உய்தல் வாயுரைத் தாயதன் மேலு நைதலில் லாத்தெளி வோடுநன் ஞான பெய்துதந் தாய் பிழைத் தேற்கினி தாவோர் செய்த தீமை கெடக்கட னாட்டிற் |
149 | யாஅ தடிக ளதருளா மாஅ துடைஅடி யிவைதா வேஎ தடவியன் மலைமேல் தீஇ தடுதலை விலங்குஞ் சினகர |
குண்டலகேசி வாதம்
150 | கொல்லை முல்லைபைங் கோங்குருந்தங் கோடறண் குரவ நல்ல மல்லிகை நறவம்ஞாழல் தாழைபுன் னாகம் பல்லி தழ்ப்பனிக் குவளை பானல் பாதிரி பிறவு மெல்லை யின்மல ரேந்தி றைவன திடவகைக் கெழுந்தாள். |
151 | நீட்சி யோக்கமோ டகலநினையநின் றெங்கணு நோக்கி மாட்சி யால்வலங் கொண்டுமாதவத் திறைவனிற் பிழையாக் காட்சி யேனெனி லெல்லாக்கதவமுந் திறக்கெனத் திறப்ப வாட்சி மூவுல குடையவடிகட மடியிணை தொழுதாள். |
152 | அத்தி யாளியோ டாமானட்ட மங்கல மரிய பத்தி பாவைபல் பறவைபயில்கொடி திமிசொடு பிறவும் வித்த கம்பெரி துடையவசித்திர வுருவநன் மலராற் சித்த நன்னெறி பயந்தான்திருவடிக்கு அருச்சனை செய்தாள். |
153 | தூமஞ் சாந்தொடு சுண்ணந்துதியொடு பரவுபு தொழுதே தாமந் தாழ்தர நாற்றித்தத்துவ தரிசிய துருவே யாமென றையென வியந்தாங்கன்ன வாயிரத் தோரெண் ணாம நல்லிசை தொடுத்துநாதகீ தங்களை நவிற்றும். |
154 | கன்று காலனைக் கடந்தாய்காதற் காமனைக் கடிந்தாய் தொன்று மூத்தலைத் துறந்தாய்தோற்ற மாக்கட லிறந்தா யொன்ற நோய்பகை யொருங்கே யுடைந்து வெங்களத் துதிர வென்றி ருந்தனை நீயே வீரர்தம் வீரர்க்கும் வீரா. |
155 | சாத னோய்சரை பிறவிதாஞ்செய் திவினைக் கடலுண் மாது யருழந் துறுநோய்மறுகு மன்னுயிர்க் கெல்லாந் தீதி னன்னெறி பயந்துதிரைசெய் நீள்கரை யொருவிப் போத ரும்புணை படைத்தாய்புலவர்தம் புலவர்க்கும் புலவா. |
156 | அரிய வாயின செய்திட்டமரர் துந்துபி யறைந்து புரிய பூமழை பொழியப்பொன்னெயில மண்டிலம் புதைந்த விரிகொ டண்டளிர்ப் பிண்டிமரநிழ லிருந்திரு வினையும் பிரியும் பெற்றியை யுரைத்தாய்பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய். |
157 | பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கார்நின் றிரட்டச் சிங்க வாசனத் திருந்துதெளிந்தொளி மண்டில நிழற்றத் திங்கண் முக்குடை கவிப்பத்தேவர்தந் திருந்தவை தெருள வங்க பூவம தறைந்தாயறிவர்தம் மறிவர்க்கு மறிவா. |
158 | ஊறி யாவது முணராயுறல்வகை யிதுவென வுரைத்தி கூறு வேனெனக் கூறாய்குரன்முர சனையதோர் குணத்தை செற லுள்ளமு மில்லையாய்த்திருமலர் மிசையடி யிடுதி தேறு மாறென்னை நின்னைத்தேவர்தந் தேவர்க்குந் தேவா. |
159 | கண்ணி னாலொன்றும் காணாய்காணவு முளபொரு ளொருங்கே பெண்ணு மல்லவுஞ் சாராய்பிரிதலில் போ¢ன்ப முடையை யுண்ணல் யாவது மிலையாயொளிதிக ழுருவம· துனதா லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா. |
160 | சொற்றி யாவதுங் கேளாய்சுதநயந் துணிவுமங் குரைத்தி கற்றி யாவது மிலையாய்க்கடையில்பல் பொருளுணர் வுடையை பற்றி யாவது மிலையாய்ப்பரந்தவெண் செல்வமு முடையை முற்ற யார்நினை யுணர்வார்முனைவர்தம் முனைவர்க்கு முனைவா. |
161 | அன்மை யாரவர் தாந்தாமறிந்தன வுரைத்த பொய்யாக்கி நின்மெ யாகிய ஞானநிகழ்ச்சி நீவிரித் துரைத்த சொன்மை யாரிடை தெரிந்தார்தொடர்வினை முழுவதுஞ் சுடுநின் றன்மை யார்பிற ரறிவார்தலைவர்தம் தலைவர்க்குந் தலைவா. |
162 | ஆதி யந்தளப் பரிய அருகந்த பகவர்த மறஞ்சால் சேதி யம்புக்க வர்தந்திருந்தடி களைப்பெருந் துதிசேர் போதி யிற்பணிந் திருந்தாள்புன்னெறி தாம்பல வவற்றுள் யாதுகொ றான்மு னென்னாலடர்க்கற் பாலது வென்றாள். |
163 | ஊன்றின்ற லிழுக்கென்னானுயிரினையு முளதென்னா னோன்றலையு நோன்பென்னானோக்குடைய கணிகையரே போன்றிருந்து பொதியறுக்கும்புத்தன்றன் புன்னெறியை யான்சென்ற· தடிப்படுப்பறைக்கரும மிதுவென்றாள். |
164 | மண்டலத்தி னோக்குவாள்யடுத்ததன தவதியால் கண்டனடான் காம்பிலிக்காவலன் கடைமுகத்தோர் தண்ட¨¡ய பொழில்நாவற்சாகைநட் டுரைபெறாக் குண்டலகே சிப்பெயரைக்குறியாக வேகொண்டாள். |
165 | தருமத்திற் றிரிவில்லாடயாச்செய்தற் பொருட்டாக நிருமித்த வகையினதாநெடுநகரை வலஞ்செய்து திருமுத்தப் பீடிகைக்கட்சித்தரையுஞ் சிந்தித்தோர் பெருமுத்தப் பெண்ணுருவங்கொண் டியைந்த பெற்றியளாய். |
166 | அந்தரமே யாறாச்சென்றழனுதிவே லரசர்கட் கிந்திரனே போன்றிருந்தவிறைமகன திடமெய்திக் கந்திருவ மகளேன் யான்காவலனைக் காண்குறுவேன் வந்திருந்த துரைவிரைந்து வாயிலோ யெனச்சொன்னாள். |
167 | கருங்களிறுங் களிமாவுங் கந்தோடு பந்தியவே நெருங்குபுபோய் நீருண்ணாதேர்பண்ணா நெடுங்கடைக்குப் பெரும்படையுஞ் சாராதிப் பெண்பாவி மரநட்டிங் கிருந்ததன் றிறத்தினாலெனக்கரிது புகலென்றான். |
168 | வாயிலோ னுரைகேட்டு வடிக்கண்ணாண் முகநோக்கி கோயிலையான் புகவிலக்குங்குறையென்னை முறைதிருத்தும் பூசலிங் குடையையோபொருளிழவோ வுயிரிழவோ நீயிலையார் புதனடற்குநிமித்தமிங் கென்னென்றாள். |
169 | என்கருமம் வினவுதியேலிலிங்கியரு ளென்னோடு நன்குரைப்பார்த் தரவ்வேண்டிநாவற்கொம் பிதுநட்டே னுன்கரும நீ செய்வாய்நுழைந்தறிவு முடையையேல் மன்பெரியான் றிருந்தவையுண்மாற்றந்தா வெனச்சொன்னாள். |
170 | அப்படித்தே யெனின்வாயிலடைப்பொழிக யானைதே ரெப்படியு மியங்குகநும்மிறைமகற்கு மிசைமினென் றிப்படியா லிவையுரையாவிலைநாவ லிறுத்திட்டா டுப்போடு கனிதொண்டை துயில்கொண்ட துவர்வாயாள். |
171 | வேந்தனு மதுகேட்டே விம்முயிர்த்த வுவகையனாய்ப் பூந்தடங்க ணல்லார் புகுதுக வெனப்புகலும் போந்திருக்க வெனவிருக்கை பொருந்திய வாறவர்கட் கீந்துலகத் தியற்கையு மினிதினிற் செய்திருந்தான். |
172 | முதலவனோ டவனூலுமந்நூலின் முடிபொருளு நுதலிய பொருணிகழ்வுந்நுங்கோளு மெமக்கறியத் திதலைமா ணல்குலீர்தெருட்டுமி னெனச்சொன்னா னதலையும் பெருங்கதவமடைப்பொழித்திட் டலைவேலான். |
173 | நன்றாக வுரைத்தனைநீநரதேவ நின்னவையுள் வென்றார்க்கோர் விழுப்பொருளும்தோற்றார்க்கோர் பெரந்துயரும் ஒன்றாக வுரையாக்காலுரையேன்யா னெனச்சொன்னாள் குன்றாத மதிமுகத்துக்குண்டலமா கேசியே. |
174 | அறத்தகைய வரசனுமதுகேட்டாங் கவர்க்குரைப்பான் சிறப்பயர்வ னன்றாகவென்றார்கட் கின்றேயான் புறப்படுப்பன் றோற்றாரைப்பொல்லாங்கு செய்தென்றாற் கிறப்பவும் பெருதுவந்தாரிலங்கிழையா ரிருவருமே. |
175 | வேனிரைத்த விரிதானைவேத்தவையார் வியப்பெய்தக் கோனுரைத்த வுரைகேட்டே குண்டலமா கேசியுந் தானுரைத்தாள் தான்வேண்டுந்தலைவனூற் பொருணிகழ்ச்சி தேனிரைத்த கருங்குழலா டானும்பின றெருட்டினாள். |
176 | ஆதிதான் பெரியனாயறக்கெடு மளவெல்லா மூதியமே யுணர்ந்தவனுறுதரும மேயுரைத்தான் யாதனையுந் தான்வேண்டானயலார்க்கே துன்புற்றான் போதியா னெம்மிறைவன்பொருந்தினா ருயக்கொள்வான். |
177 | முந்துரைத்தான் முந்நூலு மந்நூலின் முடிபொருடா மைந்துரைப்பி லுருவுழப்பறிவோடு குறிசெய்கை சிந்தனைகட் செலவோடுவரவுமே நிலையில்லை தந்துரைப்பி னெரிநுதிபோற்றாங்கேடு நிகழ்வென்றாள். |
178 | சொல்லியவந் நான்மைமேற்றுணிவினையுந் தான்பெயர்த்து நல்லவையை மனங்கொளீஇநான்மையின் முதல்வைத்த வெல்லையில் குணத்தலைவரிலக்கணமென் றெடுத்ததன்மேற் பல்வகைய பெருங்குற்றம் பதம்பதமாயக் கேளென்றாள். |
179 | முன்னெனப் படுவதுதான்முதலில்லாத் தடுமாற்றம் அன்ன தன்கட் பெரியனேலறங்கொண்ட தவமாகும் பின்னதன்கட் பெரியனேற்பிறழ்வெய்துங் காலச்சொ லென்னென்றான் பெரியவாறிருமையினுந் திரிந்தென்றாள். |
180 | பெருமைமுன் பெற்றனனேற்பின்னைத்தான் முடிப்பதோர் கருமமிங் கெவனாகுங்காட்டுதியேற் பெற்றிலன்முன் றருமந்தான் கருதிநீசொன்னாயேற் றலைவரே யொருமையா லறந்தெளிந்தவுழப்புலையர் முதலானார். |
181 | தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க வென்பதனை யூன்கொடுமை யுரைத்தான்·துணர்ந்திலனே யாகாதோ தான்கெடு மளவெல்லாநினைந்துரைத்த தத்துவந்தான் மான்கடியு நோக்கினாய்வழியறக்கெட் டொழிவதோ. |
182 | வழிவாழக் கெடுகின்றார்மாந்தருள் மேலாயார் பழிபாவ மோராதான்பற்றினார்ப் பாழ்செய்வான் ஒழிபாவி தலைவனென்றுரைப்பதனை யுலகத்தார் கிழியோடு மாறாக்காசென்றான்சொற் கேட்பவோ. |
183 | நுனைத்தலைய நுண்மயிரைநுனியுறீஇ விதிர்த்திட்டா லனைத்துணைய தடங்கலுமறக்கிடந்த பிறந்துழப்பு நினைக்குங்காற் பிறர்க்கேயாமென்றியா னீயன்னா யனைத்துணைய பெரும்பாவமவன் செய்தா னாகானோ. |
184 | துன்பந்தான் றீவினையின் வழித்தோன்றுந் துன்பேயா மென்பதனை நுமரேடீ யெப்பொழுது முரைப்பவாற் பின்புந்தான் பிறர்பிறர்க்குப் பிறந்துழப்பே யாக்கினா லன்பினான் முன்செய்த தருவினையே யாகாதோ. |
185 | தனக்கொன்றும் பயனின்றித்தளையாளென் றான்வருந்தி யெனைப்பெருங் குப்பையுமெருச்சுமப்பாற் கண்டக்கால் நினைப்பதொன் றுடைத்தவன்செய்நெடும்பாவ நிச்சலும் மனக்கினிதா வவன்றன்னையாள்வார்மாண் புரையாயோ |
186 | அவ்வகையா லுழக்கின்றா னயலார்கள் படுகின்ற வுய்வகையில் போ¢டரையொழிப்பதன் பொருட்டாக விவ்வகையா லருள்செய்யு மென்பதனை யெடுத்துரைத்தாள் கொவ்வையந் துவர்ச் செவ்வாய்க்குண்டலமா கேசியே. |
187 | அருளினாற் பிறர்க்குழக்குமனனென்ற வவ்வுரையைப் புரளல்நீ பிறப்பொழியும்பொழுதின்க ணவ்வருளைப் பொருளன்மை கண்டானோபுற்கலர்தா முலர்ந்தாரோ தெருளநீ யுரைத்துக்காண்டிருந்தவையா ரிடையென்றாள். |
188 | ஊடுபுக் குயிரடுந் துயரந்தா னொழிக்கின்றான். வீடுபெற் றிறந்தனனேல் விளிகவன தருள்பாவி யோடுகிற் றிலனொன்றுந் தாதையையே யுழப்பித்தோ னாடைபற் றெனவுரைத்த வவன்போன்றா னாகாதோ. |
189 | அங்கிருவ ருளரன்றோ வறப்போக்கிப் போவாரென் றிங்கிருந்து நீயஙரைத்தா லிவனருள்யார் தெளிகிற்பார் அங்கிருவ ருளரெனினு மவரின் முன் னவையீரே நங்கரும முலைப்பித்து நாம்போது மெனநக்காள். |
190 | முன்கொன்றான் றன்றாயைமுழுமெய்யும் போர்த்திருந்து தின்கின்றான் பிணம்வீடுந்தெருட்டுங்காற் சூனியமே யென்கின்றா னிவன்போல்வாரிறைவரில் லெனவுரைப்பாய் தன்கன்று சாக்கறப்பான்றயாப்பிறிதிற் குடையவனோ. |
191 | கண்ணொடுகா திவையிலள்கரந்தன முலையிரண்டு முன்னும்வா யுதட்டோடுமூக்கில ளுறுநோய்த்தி பெண்ணழகிற் கிவள்பிறராற்பேசவும் படுவாளோ எண்ணுங்கா லென்பேதையெனவுரைக்கு மவனொத்தாள். |
192 | பருவரலொன் றிலன்றாயைப்பழுப்பறித்தான் தலைவனிவள் கருவரைமேற் றன்கணவன்காலனையுங் கவிழ்த்திட்டாள் இருவரையும் போல்வாரிவ்விருநிலத்தின் மேலெங்கும் பெருவழியார் பேரருளார்பிறர்யாரே யெனநக்காள். |
193 | ஒண்ணுதலா யுன்றலைவனொழிவின்றி யுணர்கலான் கண்முதலா வுரையவிக்கருவியிற் கண்டுகேட் டெண்ணியு முணர்தலாவிலைசுமக்கு மொருவன்போ னுண்ணுணர்வு தனக்கில்லானுரைத்ததுதா னூலாமோ. |
194 | ஐங்கந்த மெனல்பிழைப்பா மறிவினின்வே றாதலாற் சிங்குந்தன் குறியுழப்புச்செய்கையென் றிவைமூன்று மிங்கொன்று முருவினோடிரண்டென்னாய் மிகவுரைத்தாய் சங்கந்தா மல்லவேற்றத்துவமுந் தலைப்பட்டாய். |
195 | முன்னைத்தன் முழுக்கேடுமுழுக்கேட்டின் வழித்தோன்றும் பின்னைத்தன் பிறிதறிவும்பெயர்த்துரைத்தல் பெரும்பேதாய் என்னொக்கு மெனினெருநலிற்புகுந்தா னிடையிராத் தன்னைத்தந் தெனைக்கொண்டுதான்சென்றா னெனலன்றோ. |
196 | கள்ளனுந் தானேயாய்க்கையாப்புண் டவனேபோ லுள்ளந்தா னின்றவற்றை யுணர்ந்தவற்றோ டறக்கெட்டிங் கெள்ளனைத்து மில்லென்றாலிறப்பறித லெவனாகுந் தெள்ளியாய் தெளிந்திருந்துசிந்தித்துக் காணாயோ. |
197 | கோன்பட்டான் குந்தத்தாற்கத்துண்டா னேனாதி தான்பட்டான் றளவீரன்தப்பியோ டவனருகே யான்பட்டே னென்பவன் போல்யாத்திருந்தே சொல்லுதியால் தான்பட்டான் பட்டார்க்குத் தன்பாட்டை யுரைக்குமோ! |
198 | பிறைப்பிறப்பும் பிள்ளைகடம்பிறப்பினையு மெடுத்துரைப்பின் மறைபொருள்கள் வெளிப்பட்டாமன்னுந்தாங் கருதுபவால் குறையென்னை வான்வயிற்றாற்குண்டலமா கேசியித் தறையகத்துப் பிறப்புரைத்தாள்றத்துவமாக் கொள்வாமோ. |
199 | பின்னசந் தானமும் பிறிதில் சந் தானமு மின்னவென் றிரண்டுரைத்தெத்துணையோ பொழுதோதிச் சொன்னதன் பொருளெல்லாஞ்சுவடின்றி யறக்கெடுத்தற் கன்னதே யெனிலாதனாழிநாட் டாகாதோ. |
200 | எண்ணிலாப் பலகந்த மிடையறா வென்றுரைப்பிற் கண்ணுறா தொன்றுதலாற்கலப்பிலவா மாகவே திண்ணிதா மிடையறவுதீண்டுமேற் றிரண்டொன்றா அண்ணறான் முடிந்தறக்கே டரியதே போலுமால். |
201 | வாசனையி னாமெனினும் வழியதனின் முதலதொன் றாசனைத்து மில்லையே லறிந்துரைப்பு மரிதரோ பேசினைநீ உளதெனினும் பெருந்தாமத் துண்ணூல்போல் லோசனையி னெடியதோ ருயிருரைத்தா யாகாயோ. |
202 | பாதிரிப்பூப் புத்தோடு பாழ்ப்பினுந்தான் பல்வழியும் தாதுரித்தாங் கேடின்மை யென்பதுநுன் றத்துவமோ போதுரைத்த வோடுநீர் போலுடம்பு பொன்றிடினும் மூதுரைத்த வாசம்போன் முடிவுயிர்க்கே யாகாதோ. |
203 | சத்திதான் சென்றதே யென்றியே லைந்தன்றிப் பொத்திநீ யுரைக்கின்ற பொருளோடா றாகாவோ சத்திதா னதுவன்றி யைந்துமே யாயினும் பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ. |
204 | அலைபலவே யுரைத்தாளென்றருகிருந்தோர் கருதுதலுந் தலைவனூல் பொருணிகழ்ச்சிதங்கண்மேற் குற்றங்க ணிலைபெற வுரைத்தின்மைநிறுத்துவன்யா னென்றுதன் தலைவனீ பொருள்களேதானாட்ட லுறவினால். |
205 | கண்கொடுத்தான் றடிகொடுத்தான்கயப்புலிக்குத் தற்கொடுத்தான் பெண்கொடுத்தா னுடம்பினையும் பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான் மண்கொடுத்தான் மகக்கொடுத்தான்மன்னுந்தற் சேர்ந்தார்க்கு விண்கொடுத்தா னவன்கொடுத்த விரித்துரைப்பன் கேளென்றாள். |
206 | ஏதி லாரிடர் தீர்க்கு மெமவிறை சாத கம்மிவை யென்று தலைத்தலை யோகி னாணின் றொருபக லெல்லையுங் கோதை வார்குழற் குண்டல கேசியே. |
207 | நூலு நாரு மிசைத்தன வொத்தலா னீல கேசி நெடுங்க ணாள்சொல்லு மாலும் பேயு முடையவர் செய்கையே போலு நீ சொன்ன புத்தர் சரிதையை. |
208 | போழுங் கண்ணுந் தலையுந் தடிகளுந் தாழ மின்றி யிவைதம்மி னோவென வாழு மாந்த ருழைவரு வாரில்லை கூழன் றன்னுழை யேகொளச் செல்பவோ. |
209 | பிளத்த லுள்ளிட்ட வாய்ச்செல் வதிந்திர னளத்தற் கேலவன் றானறி யும்பிற னுளத்தை யோரல னேலவன் றேவனாக் கிளத்த றானோர் கிழமையும் போலுமே. |
210 | யாவ னாயினு மன்னவ னின்மையிற் றேவ னென்று தெளியுந் தெளிந்தபின் சாவ னென்பதோர் சங்கைய மின்றியே யீவ னென்பதோ ரிச்சையுந் தோன்றுமே. |
211 | உறுதி யல்ல துணர்வடையான்றனக கிறுதி யேலென்று மிந்திர னெண்ணலன் மறுதி யின்மையின் மாணிழை நீயெங்குப் பெறுதி முன்னெடு பின்னியை யாதவே. |
212 | ஆத னாற்குறந் தாங்கெழு வான்றும்ம வேத மில்சுட ரேற்றொரு தாமென்றான் சாத கம்மிவற் றானருள் சாதிப்பா னோதி னார்க்கு முணர்வொருப் பாயதே. |
213 | எருது பாலின்மை யெண்ணலன் றும்மலே கருது மாதனுங் கண் முத லாயின தருத லல்லது தங்குறை யீதெனார் மருதின் வாழ்பகை யானவிம் மாந்தரே. |
214 | பாக மேபிளந் தாற்பர காயமொன் றாகு மேயென வீவ· தாதன்மை காக மேயுண்ணுங் கண்ணுமற் றன்னதே யேக மெய்யும்விண் டாலியை யார்களே. |
215 | உள்ளந் தானிரு பாகினு முண்மையாற் கொள்கின் றானிவ னேகொல்லு வான்றனை யெள்ளி நேரு மறிவில்லை யேற்பிணங் கொள்ளென் றீர்ந்து கொடுப்பினுங் கூடுமோ. |
216 | கூறு கூறுசெய் தாலுடம் புள்ளுயிர் வேறு வேறு செலல்வெளி றாக்கொளாய் பாறு வாயுரைக் கும்பர மாத்தங்க டேறு வாருள ரோதெருண் டார்களே. |
217 | புத்த னார்வண்ணங் கண்ட புனையிழை சித்த னேயென்னைச் சேர்மின மென்றலி னத்த கன்னருள் செய்கல னாய்விடின் மத்த கம்பிளந் தானென்றன் மாயமே. |
218 | ஆவ தின்மை யறிந்து மவத்தமே சாவ தேயுங்கள் சத்துவர் சால்பெனிற் காவல் பூண்ட கணவனோ டீமத்தின் வேம வட்கும் விழுக்குண மாங்கொலோ. |
219 | சாந்தி யாகத் தரும முரைப்புழிக் காந்தி பாவியைக் கண்டு கலகன்றா னேந்தி வெம்படை யாலெறிந் தாற்கிடம் போந்து கொண்டதும் பொய்யினுட் பொய்யன்றோ. |
220 | யானை யுள்ளா செங்குள தங்கெலாம் வான நின்று வழிபடல் காண்டுமான் மீனு மல்லவும் வேதனை யெய்துழித் தான தாதற்றா தாகதர் தன்மையோ. |
221 | குரங்கு மாயவை கொல்லிய செல்வழி யிரங்கி யேயுயக் கொண்டது மென்றியாற் குரங்கு நேர்குதி யாக்குரங் கெங்குள மரங்கள் பாய்ந்திடு மாண்பின வல்லவோ. |
222 | சீல நல்லவர் நீள்குவர் சேணெனிற் கோல மில்குரங் காட்டிக் கொல் வார்களைக் காலுங் கையு மெழற்கெனக் காண்கிலான் வாலை நீட்டிக் கிடத்தறன் மாட்சியோ. |
223 | தாய்க்கொன் றான்றங்கு செங்குரு திப்புனல் பேய்க்கொன் றீதல் பெருங்கொடை யென்பதை வாய்க்கின் றாயினி மானுயர் மாசெலா நாய்க்கென் றாலிது நல்லற மாங்கொலோ. |
224 | யான்செ யும்பொரு ளென்றங்கொ ரேகாந்தன் தான்செய் திட்டனன் சாதக கற்பங்கள் மான்செய் நோக்கி மதிப்பொழி நீயெனக் கோன்சொ னானிது குண்டல கேசிக்கே. |
225 | முயலுரை யிதுவெனெ மூடிக் கொண்டிருக்ந் தயலார்க் குரைப்பவ ராத ரல்லரோ புயலிருங் கோந்தலி பொருந்தச் சொல்லினாள் வியலவ ருரையொடு விரோத மில்லையே |
226 | அரசிறை யிட்ஜுசொலவவை நார்களு முரைசெறி வுடையன வுரைத்த நீர்மைபூண் முரைசொடு நெடுங்கொடி முலூங்க நாட்டுக விரைவொடு படுகென வேந்த னேயினான். |
227 | இருப்பதென் னினியன்னா யிதுநுமக் குரைத்தார்யார் சும்க்கினைக் கடிதாகச் சொல்லெளூக் கெனலோடுக் திருக்கிளர் மதிலுஞ்சை தென்றிசை யகனகரு ளம்க்கசந் திரனென்னு மவாச்சிய னெளூச்சொன்னாள் |
228 | கட்டுரை பலசொல்லிக் காவல் நெடுங்கடை நாவலைமுன் னட்டிவ ணகரிடை நகைசெய்து புகுந்தவிந் நன்னுதலை வட்டிகொள் பறைகொட்டி வழுவுரை பலசொல்லி (வாரலென்று பெட்டன பலசெய்து பெருநகர் வாயிலைப் புறப்படுத்தார். |
229 | புனத்திடை நறுமலர்ப் பூங்கொடி யன்னதோர் பொற்பினளாய் எனைப்பல நூல்களு மியல்பினி னறிபவ ளேதமில்லாள் தனக்கினி யான்செயற் பாலதுதானென்னை யெனவுரைத்தான் இனத்தகை யேற்றரி யிடியுறுமேறெனு மிவற்றை யொப்பான். |
230 | ஆண்டகை அரசிறை அதுசொல்லக்கேட்டவவ் வறத்தகையா டீண்டல னணிபிற புனைவெனுநினைவிலன் றினையனைத்தும் வேண்டல னிலனொடு விழுநிதியினையவும் விறற்றகையா யீண்டினி யறநெறி யுறுகெனவேந்திழை யியம்பினளே. |
231 | வந்தது மிதுபொருண் மன்னவயானென நன்னுதலா ளிந்திர னனையநின் னிறைமையினறநெறி யிகழலென்றாங் கந்தர நெறிசெலற் காயிழையரசனை விடுத்தருக்க சந்திர னிருந்தவத் திசைமுன்னித்தளிரிய றானெழுந்தாள். |
அர்க்க சந்திர வாதம்
232 | உஞ்சை மாநக ரெய்தின ளாயத னிஞ்சி மாட்சியு மெல்லையில் செம்மலு மஞ்சு தோய்நெடு மாடமும் வீதியு மஞ்சி லோதி யவையவை கண்டபின் |
233 | பருக்கை மால்களி யானைப்பல் வேந்தரு மிருக்க போதக வென்னும் பெருமையான் றருக்க நீட்டமுந் தன்னிக ரில்லவ னருக்க சந்திர னென்னு மவாச்சியன். |
234 | போதி சத்துவர் புத்த ரெனப்படு நீதி யிற்பெரி யாரன நீ¡;மையா னோதி நூன்மும்மை யொப்ப வுணர்ந்தவன் வாதி கட்கோர் வயப்புலி யேறனான். |
235 | மாடமோங்கி மழைநுழைந் தின்குயில் பாடு பூம்பொழிற் பாங்கரோர் பள்ளியுட் பீட மேறிப் பெருந்தகை யார்க்கெலாம் வீடு பேறும் வினையு முரைப்புழி. |
236 | சென்று தானெய்திச் சிற்பிடத் தாற்புக்குத் துன்று நீண்மணித் தூணணிந் தெண்ணென நின்று நீலவைம் பாற்பெய ராளுமங் கொன்று பல்வகை யோத்துரை கேட்டனள். |
237 | கொள்ளு மாறுந்தன் கோரகை யுட்கஞ்சி மொள்ளு மாறு முதுகு நெளித்துண்டு னள்ளு மாறு மணலெடுத் திட்டவை மெள்ள மெள்ள விழுங்கு மவைகளும். |
238 | வழிக்கு மாறுந்தம் மண்டையி னுண்டுமன் ஒழிக்கு மாறும· தூட்டு மவைகளும் மழிக்கு மாறுந் தலைகளை மையிட்டு விழிக்கு மாறும் வினைய விதியினால். |
239 | இனைய வேசொல்லி யிட்ட தலையராய் வினைய நூலை வியப்பெய்து வார்க்கெலா மனைய தேநு மறநெறி யென்றனள் முனைவன் றன்னெறி முன்ன முணர்ந்தவள். |
240 | அவ்வு ரையம ரானுய ராசனச் செவ்வ ரைம்மிசைத் தீத்திரள் போல்பவ னிவ்வு ரையிவ ணென்னெனச் சொல்லினான் றெவ்வ ரைத்திறல் வாட்டிய திண்மையான். |
241 | வீரஞ் செய்து விழியல் வினையநூல் பேர த·தேல் பெரிது மழகிதே யோரு ம·தோ ருறுவினை யென்பதைத் தேரச் சொல்லுநின் றிண்பொரு ளென்றனள். |
242 | வினைய தாகிய பெற்றி விரித்துநீ தினையி னேரும் தெருட்டெனக் கென்னவே அனைய வவ்விர தத்தோ டறிசல மினைய கேளென் றெடுத்தன சொல்லுமே. |
243 | தன்னை யீந்ததும் தாரங்க ளீந்தது மன்ன தன்பொருள் கேட்டறங் கொண்டவன் மன்னு மில்லயன் மாந்தரைக் காணுமேற் பின்னைச் செய்வன பேசலு மாகுமோ. |
244 | காம மூரிற் கணிகைய ரோடன்ன தூய்மை யுண்மையிற் றோற்றங் கரந்தவட் சேம மாவகைச் செல்கமற் றென்பதும் வாம நூலின் மறைபொரு ளல்லவோ. |
245 | சிங்க தத்த ரெனப்படுந் தேரனார் சங்க போதியி லாள்கட் டயாச்செய விங்கி தென்னென வேழாய் தவசிகட் கெங்கெங் காமி லெனவுரைத் தானரோ. |
246 | யாது மில்லை யுயிரென் றறநெறி யோதி னானவ் வுயிரிலி தன்னொடு வேத னைதணிப் பான்வினை வீட்டிற்கும் சாத னைநிற்குஞ் சத்துவ னாமென்றீர். |
247 | சித்த மோடிக் கலங்கித் திரியாத நத்தம் பெற்றது நற்றவ மேற்கொண்டான் பத்தின் மேலும் பழிசெய்யு மேற்பள்ளி வத்தன கண்டீ¡; வழக்கின்கட் கூரியீர். |
248 | போதி யாருரு வெய்திய புற்கலர் வேதி யாற்கிடந் தாருள ராயினான் ஞாதி யாரென நாட்டிய கூட்டமும் ஓதி வைத்ததொன் றுண்மை யுணர்த்துமால் |
249 | ஆரம் பிச்சி யலிவிலங் கவ்வுருச் சீரிற் கொத்தாள் கணிகை தெருண்டாள்பெண் ஒரு மில்லா ளுயிரிலி யூமையுந் தார மாக்கொ·டி ரென்றல் சலமதோ. |
250 | பிறந்த வில்லினுள் வாழ்க்கை பிழைப்பெனு மறங்கொண் டான்கொண் டவாச்சிய வேடத்தாற் சிறந்த வல்லன சிங்கின வெங்கணுந் துறந்த வான்பொருள் சொல்லவும் வல்லையோ. |
251 | உரைப்ப பேரரு ளுண்பன மீனொடூன் றிரைப்ப மெல்லனை செய்வ விழுத்தவம் கரைப்ப தீவினை கண்டது சூனியம் புரைப்பின் மார்க்கம் பொருத்த முடைத்தரோ. |
252 | எல்லா மசுசியு மென்ப வனவா லல்லா லழுக்குற் றவனடிக் கேத்தலர் சொல்லார் சுகமுஞ் சுகத னவனென்று பல்லார் வருத்தம் பழுதெனப் பண்ணுப. |
253 | நிலையா வெனெச்சொல்லி நேர்ப்ப பொருடூயே மலையோ ரனையந்ன் மாட மெடுப்ப விலையே யுயிரென் றிறந்த நினைப புலைசே யமர்ந்தவர் புத்தியின் வண்ணமே |
254 | மயித்திரம் பாவித்து மற்றவற் றூனை யசிப்பன வேபோ லமர்ந்ததிருந்த துண்ணுஞ் சயித்தியங் காணித் தலையினை முட்டும் பயித்தியங் கொண்டவர் பண்புமா· தொக்கும் |
255 | புத்த ருருவுக்கும் போலிக்கும் போலியை மத்தகத் தேத்தி வணங்கி வழிபடுஞ் செத்த பொழுதினச் செந்தடி மென்றிடு மத்த னுடைய வருள்வகை வண்ணம். |
256 | பேனறாக் கூறை பெருமுடுகுநாறுமேற் றுக்கந் துக்கம் மானறா நோக்கி மணற்சுமையுந்தான்பெரிதாற் றுக்கந் துக்கந் கூனிறாக் கண்டாலுங் கொள்ளமுடியாதேற் றுக்கந் துக்கந் தானறாப் ப·றொழிலுந் தான்றுக்கமாதலாற் சருவ்வந் துக்கம். |
257 | பொய்பொத்திச் சொல்லினவும்போங்கூலி கொண்டனவும் வையத்தஞ் சுட்டனவும்வாழ்மருது கொன்றனவும் கையத்தி னூனுக்கேகன்றிக் கலாய்த்தனவு மையத்தை யின்றியடுப வாலோவழல்நரகத் துள்ளேயடுப வாலோ. |
258 | பற்றே மிகப்பெருக்கிப் ப·றொடர்ப்பா டேயாக்கி யற்றீர் போற் காட்டி யடைக்கலமே வவ்வுநீர் பெற்றீரே பேயுடம் பன்றேற் பெரும்பாலு மெற்றே யிருணரகிற் கீர்க்கு மாலோ விரக்கமொன் றில்லீரை யீர்க்கு மாலோ. |
259 | ஆங்கவ ளறங்கூறக்கேட்ட வவாச்சியன்றான் றேங்கம ழொலிகோதாய்சித்தமே யல்லதில்லை தீங்கொழுக் கென்றதெல்லாந்தீவினையென் னல்வேண்டார் பூங்கமழ் காராடைபோர்த்தவெம் புத்தரென்றான் |
260 | துத்தலே வேண்டிநின்றுதோந்தொடர்ப் பாடுநீக்காய் சித்தமே நல்லதென்றாற்றேற்றலு மாவதுண்டோ கத்திகொண்டில் லில்வாழ்பேய்காறலை வேறுசெய்து குத்தவதின் னும்போழ்திற்கூடுமோகன் மையேடா. |
261 | உள்ளமும் பாயிரம்மு மொக்குமேல் வீடுமுண்டாம் கொள்ளுமேற் குற்றம·தாக் கூடுமே பற்றுமாங்கண் விள்ளுமேல் வேறதாய வேடமு மன்னதேயாங் கள்ளமே சொல்லிநின்று கன்றினாற் காட்டலாமோ. |
262 | புனைந்துநீ சொல்லும் வீடும்போகவுண் டாக தந்தே நினைந்துநாங் காணி னெல்லாநின்றதொன் றில்லை யென்றாற் றுனைந்துதா னுண்மை நன்றுசூனிய மாதற் கென்றாட் கினைந்தினைந் தேங்கி நல்லாயென்செயற் பால தென்றான். |
263 | செத்தவ ரப்பொழுதே தேவருட் செல்பவேனு மத்தலை யின்பநோக்கா ரஞ்சுவ மாக்களந்தோ தொத்துள வாகவென்னான் சூனிய வீடுசொன்ன புத்தனை நோதுமத்த புலம்பனீ போகவென்றாள். |
264 | புன்னெறி யவைகளெல்லாம்போக்கிய பாக்கியத்தாய் நன்னெறி நன்ஞானங்காட்சியு நன்குகொண்டென் சொன்னெறி திரிவாயேற்சோர்வில்பே ரின்பமெய்தி மன்னுதி யென்றுமற்றுங்கூறினாண் மாதராளே. |
265 | காட்டுழல் களிநல் யானைகால்கையி னோர்ப்பித் தேறித் தோட்டியிட் டூர்வ தேபோற்சூரிய சோமன் றானும் வாட்டடங் கண்ணி நல்லாள்வாக்கெனுந் தூக்க யிற்றாற் பூட்டுபு கொள்ளப் பட்டான்போதியார்க் காதி யன்னான். |
266 | அருக்கமா சந்திரனையறங்கொளீஇ யாங்கவனை யிருக்கும்வா யொருப்படுத்திங்கீதுநுனக் குரைத்தாரைப் பொருக்கநீ சொல்லென்னப்புத்தனார் முதன்மாணி முருக்குவாய்சென் றவனாம்மொக்கல னெனச்சொன்னான். |
மொக்கல வாதம்
267 | நீவருத லொழியென்றுநிறைபதும புரத்துக்கே மாதிரந்தா னெறியாகமனம்போலச் சென்றெய்தி மூதுரையுங் காரணமுமுழுதெழுதி யழகிதாய்ப் போதுகளும் பொன்மணலும்புனைந்தினிய பொலிவிற்றாய். |
268 | கொடிமகரக் கோபுரமும்நெடுமதிலுங் குடிஞைகளும் தொடிமகரத் தூணிரையுஞ்சொலற்கரிதாய்ச் சுவர்க்கத்தின் படிமகரப் படிமையதப்பள்ளிகண் டளியள்போய்க் கடிமகரக் கடல்கடந்துகலந்தந்த நலமென்றாள். |
269 | ஒழுக்கமுங் கல்விகளுமுரைத்தனவே யொப்பனகள் இழுக்கில்லாப் பெருந்தவத்திலிங்கிகளைத் தான்கண்டு முழுத்தாள தாய்ப்பள்ளிமுற்றத்தோ ரரைமரத்தின் குழுக்கொம்பர் பிடித்தொருகாற்குஞ்சித்து நின்றுதான். |
270 | துன்னஞ்செய் தாடையைத்துவர்தோய்த்துக் கொட்டியும் பொன்னஞ்செய் புத்தங்கப்புகையூட்டிக் கைசெய்து தன்னமு மளித்தாயதலைசொறியு மிடையிலையா லென்னவற்றி னாம்பயனையெனக்கறிய வுரையென்றாள். |
271 | ஆங்கவ ளதுவுரைப்பவதற்குரிய மறுமாற்றந் தாங்களு மரைக்கில்லார் தலைசாய்த்தங் கிருந்தார் மூங்கைமையான் மொழிகொண்டேன்மொக்கலநற் றேரயான் பாங்கினால் வினவுவன்படிறின்றி யுரையென்றாள். |
272 | வீடிற்கே யெனின் ஞானம்வேண்டாதே முடியுமாற் பீடிற்கே யெனினின்னிற்பெருஞ்செல்வர் திருந்தினார் மூடிற்றின் பயனென்னையெனவினவ மொக்கலன மூடிற்றுஞ் சிறிதுளதாலுருவறிதற் கெனமொழிந்தான். |
273 | படைப்பெளிதாற் கேடறிதாற்பலகள்வர் நவையாரா லுடைக்கியைந்த வொலியற்றாலூன்றருவார்க் குணர்த்துமால் விடக்கமர்ந்த வுள்ளத்தாய்வேடமு மறிவிக்குந் தொடர்ப்பாடும் பெரிதன்றாற்றொட்டைந் பூணியோ. |
274 | பொன்கொண்டா ராயினும் போர்வைபூச் செனிற்புலையன் வன்கண்மை யாற்செய்தவஞ்சமே யெனவளைப்பர் தன்றன்மை யாகியதான்பழிப்பார் தாமுளரோ வெண்கண்டு வந்திங்கணிதுகொண்டா யெனச்சொன்னாள். |
275 | உண்ணன்மை தவமென்றங்குறுப்பெல்லா மறைக்கின்றாய் திண்ணென்ற மனமிலைநீசிறைபலவுஞ் செய்தலால் பெண்ணென்றும் பிறவென்றுந்தானோக்கிப் பெரும்பேதாய் கண்ணன்றோ வுள்ளத்தைக்கலக்குவன வவைகாவாய். |
276 | பெண்பாலார் கண்டக்காற் பேதுறுவ ரெனவுரைப்பாய் திண்பான்மை யவர்க்கழியச்சிதையுநின் றவமாயின் மண்பாலா ரவருள்ளமாண்புளதா யுரையாரா லெண்பாலும் படாதாகியிழுக்குநின் குணமந்தோ. |
277 | இழுக்கினு மிழத்தியாலிடறினு மதுவேயால் விழுக்கலமால் வினைபெரிதால்வினைக்கேடாந் தொழிறருமா லொழுக்கிற்கு முரித்தன்றூணோரிடையூ றுடன்கொடுக்கும் வழுக்கின்றித் தவஞ்செய்யின்மண்டையாற் பயனென்னோ. |
278 | நிறந்தூய்தா நீரினால்வாய்தூய்தாம் பாகாற் பறைந்துபோய் மெல்கோலாற்பல்லெலாந் தூயவாம் புறந்தூய்மை செய்தக்கால்புரிவள்ளந் தூய்தாமே லறந்தூய்மை கணிகையர்க்கேயாற்றவு முளதாமால். |
279 | சவருடைய மனைவாழ்க்கையெனப்போந்து தவம்புரிந்தாய் பவருடைய விறகிறுத்துப்பலகலங்க ளொருப்படுத்துற் றுவரோடு பல்கூறையுடன்புழுக்கி யொலித்திடு நீ துவரடுதி பூவடுதிசோறடலே முனிந்தாயோ. |
280 | வண்ணாரம் துன்னாரம் மச்சிகமே கச்சாரஞ் சண்ணார மெனப்பிறவுந் தவத்துள் நீ கற்றனவா லெண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே பயின்றாயே லுண்ணாயே வயிறார வோர்ப்பொன்று மிலையேகாண். |
281 | சிறந்தாய்க்கீ துரைக்கலாஞ்சிந்தனையை முடிப்பதே துறந்தார்க்குக் கடனாகிற்சோறலாற் பிறவேண்டா லிறந்தார்க்கு மெதிரார்க்குமிவட்காலத் துள்ளார்வான் பிறந்தார்க்கு மிதுவன்றிப்பிறிதொன்று சொல்லாயோ. |
282 | உண்டியா லுடம்புளதாலுடம்பினா லுணர்வாமென் றெண்டிசையும் பரந்திசைப்பவீதுனக்கே தெரியாதோ தண்டியாய்க் கழியாதுதவஞ்செய்த லுறுதியேற் பண்டியாற் போக்குநின்ப·றொடர்ப்பா டெனச்சொன்னாள். |
283 | அருளுடையா ளுரைப்பக்கேட்டாங்காரித் தவனுந்தன் பொருளுடைமைத் தருக்கினும்புன்ஞானக் களிப்பினு மருளுடையார் மதிப்பினுமாற்றந்தான் செயற்பொருட்டா லிருளுடைந்த கூந்தலாளிட்டத்தை யெண்ணுவான். |
284 | தரணென்று நன்றென்றாடன்றன்மை யுருவென்றாள் அரணென்னத் தெளிந்ததுதானாருகத மேமன்னு முரணின்ற துண்மையான்மொக்கலனு முனிந்துரைப்பா னிரணியனைப் போல்வந்திங்கிடர்ப்பட்டா யென்றானே. |
285 | என்னாலும் வெலப்பட்டாரிருவருள ரிங்கவரைச் சொன்னாலு மறிதிநீதுடிகடியு மிடையுடைய கொன்னாணு நெடுவேற்கட்குண்டலமா கேசியு மன்னாளுக் கறமுரைத்தவருக்கமா சந்திரனும். |
286 | என்றாளை முகநோக்கியிதுபெரிதும் பொய்த்தனைநீ யொன்றாத கொள்கையாருலகினுள் யாவரையும் வென்றாள்மள் றிவள்சம்புவிரதியாய்த் திரிந்தெங்கும் நன்றாரம் பிறர்க்கீந்தான்றருமங் கொண்டென்றானாய். |
287 | வேதியரை முதலாகவெலப்பட்டா ரிவரிவரென் றோதியாங் கவையவைதா மிவையிவையென் றுரைப்பக்கேட் டாதிகா லாவணத்துளார்கதரை வென்றதனை நீதியா லுரைத்தியேனின்னையான் வெல்லேனோ. |
288 | எனக்கேட்டாங் கெடுத்துரைப்பானிந்திரர்க டொழப்படுவான் றனக்காய தர்மமுமதர்மமுங் காலமுங் கனப்பாட்டிற் காயமேயுயிருருவே புண்ணியமே நினைக்குங்காற் பாவமேகட்டுவீ டெனநிறுத்தி. |
289 | இப்பொருட்க ணிகழ்ச்சியு மிவையிவையா மெனவிரித்துச் செப்பினா னாதன்றன் சிந்தைக் கெழுந்தவா றப்பொருளு மந்நிகழ்வு மவையவையா வறியாதை வப்பிள வனமுலையார் மணல்விளையாட் டதுவேபோல். |
290 | மொக்கலனு மிதுகூற முல்லைநா றிருங்குழலா ணக்கனளா யிதுகூறு நாதன தியல்பறியா யிக்கிரமத் திந்திர னிருடிகளைத் தேவியரைத் தக்கதாத் தொழுதக்கா லவர்தலைவ ரெனலாமோ. |
291 | எந்தலைவ ரியல்பொடுநூ லின்னணமென் றறியாதாய் சிந்தனைக்க ணாயினுந் தீமையு முரைத்திலையாற் றந்துரைத்த தலைவனூற் றத்துவமா மாகவே முந்துரைத்த பொருணிகழ்வு பிழைப்பின்மை முடியாவோ. |
292 | அத்தியைந் தெனினல்லவறுபொருளு மவையாகா வுத்தியா வெடுத்தோதுமொன்பதனோ டொட்டலவாற் குத்¢ய பல்குறையே யன்றியுமிப் பொருளெல்லாம் பொத்தியுங் காட்டுவாய்பொருளியைவோ பெரிதென்றாள். |
293 | சலம்படவே யுரைத்தனைநீதருமத்திற் செல்லுதுமென் றிலம்படுமே லியக்கில்லையென்பதெம் முரையென்போம் கலஞ்செல்லுங் கடலதனைக்காற்றேபோ லுந்தாதாம் பலம்படு முரைநினக்குப்மாம்புண்ட பாலேபோல். |
294 | அல்லதற்க மப்படியேயாமென்ற லதுகொள்ளாய் செல்லவுஞ் செலுத்தவுநில்லவு நிறுத்தவுஞ் சொல்லியவாய் தேய்க்குறுவாய்சொல்லிக்கொள் வலியதனால் பல்லொடும் படத்தேய்த்தாற்பயம்பெரிதும் படுமன்றோ. |
295 | கடனிலமா காயமேயமையாவோ விவையிரண்டு முடனில்லை யாயினுமூனமிங் கெவனென்பாய் மடனுடையை நீபெரிதுமன்னுயிர்க்கும் புற்கலக்கு மிடனெல்லா வுலகி னெல்லையும் புறப்படுமோ. |
296 | பலசொல்லிக் குறையென்னைப்பஞ்சமா கந்தமே யலகில்லாப் பெரும்பரப்பினாகாய நினக்கில்லை நிலைசெலவிற் கிவை வேண்டாநின்பொருளு மிவையல்லா வுலகெல்லை யுரைப்பான்புக்குணர்வினையே வருத்துதியால். |
297 | காலநீ வேண்டாயாய்க்கணிகமுங் கற்பமும் சாலமும் புனைந்துரைத்தி சமழ்ப்பென்னு மிலையாகிப் பாலமா பண்டிதனே பழநோன்பி யிவனென்பாய் மாலுமிங் குடையையோமயக்குவதொன் றுண்டனையோ. |
298 | இக்கோட்க ளெழனோக்கியிவையிவையோ யாமென்றா லக்கோட்க ளெழனோக்கியவையவையாக் கண்டிருந் தெக்கோளு மில்லென்பாயாண்டெண்ணி யேத்துதியான் மெய்க்கோளா லென்றியான்மிகைதெருட்டுந் திறங்காணேன். |
299 | கருத்தினாற் பெற்றாமோ கண்கூடாக் கண்டோமோ பொருத்தனையென் றுரைக்கின்றாயுறுநோயைத் தீர்ப்பதோர் மருத்துநூ லில்லையான்மயங்கியே சொல்லாது திருத்தியநின் னுணர்வின்மைதெருட்டிக்கா ணெனச் சொன்னாள். |
300 | பொறியுணர்வின் புலமாயபுற்கலமே யுயிரறியு மறிவினா லறியாதேயாமாகா தெனவுரைப்பாய் நெறியென்னை யிந்திரன்றன்நெடுநகரக் கவன்றேவி குறியளோ நெடியளோநூலொழிப்பாய் கூறிக்காண். |
301 | மெய்யளவிற் றுயிரென்றுமெய்யகத் தடக்குரைத்தல் பொய்யளவைக் குடங்குடத்திற்புகலருமை போலென்பாய் மெய்யளவ்¢ன் மெய்யுணர்வைமெய்யகத் தடக்குரைத்தி யையனையே யடங்கானென்றதுவாதன் வண்ணக்கால். |
302 | அருவாத லாலடங்குமுணர்வுதா னங்கென்னிற் பெருவாத மங்கில்லைபெற்றியொன் றறியாத திருவாள னுரைவண்ணந்தீட்டொட்டுக் கலப்பியாப் புருவாய வுடம்பினோடுணர்வினுக் குளதாமோ. |
303 | யாப்புண்டா லுழப்பதவ்வுயிரென்றேற் கதுவன்று போய்ப்பிண்டத் துழப்புழப்பப்புலம்புவ தென்செயலென்பா யேப்புண்பட் டான்படநோயேதிலர்க்காய்ச் சோமாகிச் சாப்புண்பட் டேனென்றுசாற்றுவதுன் றத்துவமோ. |
304 | உழப்புழப்பச் செய்கையானுறுதுயருற் றேனென்றல் பிழைப்பதுவாக் கருதாதேபெருவழியு ளிடறுதியா லுழப்பறிவு குறிசெய்கையொருவனவே யெனச்சொன்னார்க் கிழிக்குவதிங் கில்லாமையிதனாலே யறியனென்றாள். |
305 | அருவாயில் யாப்பில்லையன்றாயிற் குறைபடூஉ மிருவாறின் கூட்டமுந்தீதென்ப தெம்மிடமே மருவாதா யுரைத்ததனைமனங்கொள்ளா யதுவன்றிப் பொருவாறொன் றுரைத்தாலுமொருவாறு முணராயால். |
306 | அறிவெழுந் தவலிக்குமென்பதூஉ மதுவெழப் பிறிதொன்று பேதுறுமங்கென்பதூஉம் பெரும்பேதாய் குறிகொண்டா ருரையன்றாற்குற்றமே கொளலுறுவாய் பொறிகொண்டு காற்றினையும்போகாமற் சிமிழாயோ. |
307 | பிறன்சுமவான் றானடவான்பெருவினையு முய்க்கில்லா வறஞ்செய்தா னமருலகிற்செல்லும்வா யரிதென்று புறம்புறம்பே சொல்லியெம்பொருணிகழ்ச்சி யறியாயாற் கறங்குகளி மல்லனவுங்காற்றெறியத் திரியாவோ. |
308 | மகனேயாய்ப் பிறப்பினு மாதுயரங் கேடில்லை யவனாகா னாயினு மறஞ் செய்த லவமாகு மெவனாகு மென்றெம திட்டமே யுரைத்தியா னகைநாணி நீநின்னை நன்பகலே மறைக்கின்றாய். |
309 | வீயுடம்பிட் டுயிர்சென்று வினையுடம்பு முளகாகத் தாயுடம்பி னகத்துடம்பு தான்வைத்த தின்றியே நீயுடம்பு பெற்றவா றுரையென்பாய் நிழல்போலும் டேயுடம்பு பிறிதுடம்பிற் புகல்பேதாய் காணாயோ. |
310 | எப்பொருளு மொன்றொன்றிற்கிடங்கொடுத்த விரும்புண்ணீர் புககிடங்கொண் டடங்குதலேபோலவும் தந்தைதாய் சுக்கிலமுஞ் சோணிதமுந்தழீஇச்சுதையு ணெய்யனைத்தா யொத்துடம்பி னகத்தடங்கியுடன்பெருக மெனவுரைத்தாள். |
311 | செய்வினைதா னிற்பவே பயனெய்து மென்பதூஉ மவ்வினை யறக்கெட்டா லதுவிளையு மென்பதூஉ மிவ்விரண்டும் வேண்டுத லெமக்கில்லை யெடுத்துரைப்பி னைவினையி னிலைதோற்ற நாசந்தா னாட்டுங்கால். |
312 | பைம்பொன்செய் குடமழித்து;பன்மணிசேர் முடிசெய்தாற் செம்பொன்னா னிலையுதலுஞ்சிதைவாக்க மவைபெறலு நம்பான்றிங் கிவைபோலநரர்தேவ ருயிர்களையும் வம்பென்று கருதனீவைகலும்யா முரையாமோ. |
313 | கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும் ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார் பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லின சென்று சேர்தலைச் சித்தம தின்மையால். |
314 | சொன்ன சூனைத் துறந்தவற் றட்டன பின்னை யுண்டல் பிழைப்புடைத் தென்றியா னன்னு தல்லைத் துறந்தவ ளட்டது தன்னை யுண்டுந் தவசியை யல்லையோ |
315 | கொன்ற பாவங் கெடுகெனக் கையிட்டு நின்ற தென்பது நீயுரைப் பாயெனி னன்று துன்னின தாதன்மை யாற்சொன்னாய் சென்றும் வந்துந் தியானம் புகலென்றாள். |
316 | இன்ப துன்ப மிருவினைக் காரிய மென்ப வர்க்கென்னை யேதமுண் டென்றியேற் பின்பு பேணுந் தவத்தினி னாகிய துன்ப வர்க்குந் துதாங்கனத் தொன்றுமே. |
317 | செய்த தீவினை சென்றின்ப மாக்குமென் றி·து ரைப்பவ ரீங்கில்லை யாயினும் பொய்கள் சொல்லிப் புலைமக னேயெம்மை வைதல் காரண மாநின்று வைதியோ. |
318 | இந்திரி யங்களை வென்றற் பொருட்டென வந்து டம்பு வருத்தல் பழுதென்பாய் தந்து ரைத்த தலைமழி யாதிய சிந்த னைக்கிவை செய்வதெ னோசொல்லாய். |
319 | புனைவு வேண்டலர் போக நுகர்விலர் நினைவிற் கேயிடை கோளென நேர்தலா லினைய வும்மல மேறினு மென்செய மனைய தான்மக்கள் யாக்கையின் வண்ணமே. |
320 | பாவந் துய்த்துமென் றோமல்ல துய்ப்பினு மாவ தின்மைக் கரசுரைத் தாயன்றோ வோவ லின்பந் தருமெ னுயிரென்பாய் தேவ னாகித் திரிந்துதான் காட்டிக்காண். |
321 | அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலா மொழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேற் பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ. |
322 | சிந்த னையினுந் தீவினை யாமென்பார்க் கைந்திற் காம மமையுமென் றீரென்பாய் சுந்த மாகச் சுவடறு வீரென வந்தி தோறும் புடைக்க வமையுமோ. |
323 | பெண்ம கள்ளிர் பிறகிட வுண்பவர் கண்ணி னாலில்லுட் கந்தியைக் காணினு முண்ண லம்மெனும் மோத்துடை யார்களைத் திண்ண தாவைது தீவினை கோடியோ. |
324 | பிள்ளை பெண்ணலி யாயினும் மாண்வயிற் றுள்ள தேயென் றொழுக்கங் கொடுத்தியாற் பிள்ளை பெண்ணலி யன்மையை யாதினா லுள்ளங் கொண்டிழ வூசி யுரைப்பதே. |
325 | மோனம் பொய்யஞ்சிக் கொண்டவன் மெய்யுரைக் கூனந் தோன்றி லுரைத்தன னென்றியேற் றானம் யாவர்க்குஞ் செய்வது நன்றனென்பா யீன மென்னோ தெருச்சுமக் கிற்றியோ. |
326 | உய்யக் கொள்வ னெனச் சொல்லி யுள்ளத்தாற் கையிற் காட்டல் கரவுள தாமெனிற் பொய்சி தைத்ததென் சொல்லிப் பெயர்ந்துரை பொய்யு ரைத்தில bனன்றல் பொருந்துமோ. |
327 | கொல்வினை யஞ்சிப் புலால் குற்ற மென்பதை நல்வினை யேயென நாட்டலு மாமென்னை வில்லினை யேற்றிநும் மெய்ம்மை கொளீஇயது சொல்லினை யாதலிற் சொல்வன் யானே. |
328 | புத்தர்கட் பத்தியிற் போதி மரந்தொழிற் புத்தர்கட் பத்தரை யேதொழு புத்தர்கட் பத்தியை யாக்கு மதுவெனிற் (பற்றிய) பத்தங் குடைசெருப் புந்தொழு பாவீ. |
329 | ஆங்கவர் போல வருள்செய் பவர்களை நீங்குமி னென்பது நீர்மை யெனினது வீங்கிதற் கெய்தா விடினிலை போதிக்கும் தீங்கே நுமர்செய்கை தேரமற் றென்றாள். |
330 | பல்லுடை யான்றன்னைப் பண்டுகண் டேத்தினுந் தொல்லுரை கேட்டுறுப் பேதொழு தாலும்பி னல்வினை யாமென்று நாட்டுதி யாய்விடிற் கொல்வதுந் தின்பதுங் குற்றமற் றென்னாய். |
331 | ஏத்தின ரேத்துக வென்றிறை போல்வன பாத்தில பைம்பொற் படிமைசெய் தாலவை யேத்துநர் பெய்தவ ரெய்துவ நன்றெனில் வீத்தவர் தின்பவர் வெவ்வினைப் பட்டார். |
332 | வெற்றுடம் புண்பதும் வேலின் விளிந்தவை தெற்றென வுண்பதுந் தீமை தருமென்னை யொற்றைநின் றாடுணை யூறு படுத்தவட் குற்றமன் றோசென்று கூடுவ தேடா. |
333 | பிடிப்பது பீலி பிறவுயி ரோம்பி முடிப்ப தருளது போன்முடை தின்று கடிப்ப தெலும்பதன் காரண மேனி தடிப்பத லாலரு டானுனக் குண்டோ. |
334 | ஆட்டொரு கான்மயிற் பீலி யுகமவை ஈட்டுதல் போலுதிர்ந் துக்க விறைச்சியைக் காட்டியுந் தின்னுங் கருத்திலை நீ தசை வேட்டுநின் றேயழைத் தீவினை யாளோ. |
335 | மானொடு மீனில மன்னு முடம்பட லூனடு வாரிடு வாரை யொளித்தலிற் றானடை யாவினை யாமென்ற றத்துவந் தீனிடை நீபட்ட தீச்செய்கை யென்னோ. |
336 | குறிக்கப் படாமையிற் கொல்வினை கூடான் பறித்துத் தின்பானெனிற் பாவமாம் பூப்போற் செறிக்கப் படுமுயிர் தீவினை பின்னு நெறிக்கட் சென்றாறலைப் பாரொப்ப னேர்நீ. |
337 | விலையறம் போலு மெனின்வினை யாக்க நிலையுமீ றென்பது நேர்குவை யாயின் வலையினின் வாழ்நர்க்கும் வைகலு மீந்தாற் கொலையென்றும் வேண்டலன் றோகுண மில்லாய். |
338 | நும்பள்ளிக் கீபொரு ளாலுணர் வில்லவ ரெம்பள்ளி தாஞ்சென் றெடுப்ப வெனினது கம்பலை யாம்வினை யில்கறிக் கீபொருள் செம்பக லேகொலை யாளரிற் சேரும். |
339 | நாவின்கண் வைத்த தசைபய னேயென வேவினை நீயுமற் றின்பம· தாதலிற் றேவன்கண் வைத்த சிரத்தை செயலன்று தூவென வெவ்வினை யைத்துடைத் தாயால். |
340 | கன்றிய காமந்துய்ப் பான்முறைக் கன்னியை யென்றுகொ லெய்துவ தோவெனுஞ் சிந்தையன் முன்றினப் பட்ட முயன்முத லாயின நின்றன வுந்தின நேர்ந்தனை நீயே. |
341 | தூய்மையி லாமுடை சுக்கில சோணித மாமது போன்மெனி னான்முலைப் பாலன்ன தூய்மைய தன்றது சொல்லுவன் சோர்வில வாம னுரைவையந் தன்னொடு மாறே. |
342 | மேன்மக்க ணஞ்சொடு கள்வரைந் தாரது போன்மக்க ளாரும் புலால்வரை யாரெனிற் றான்மெய்க்க ணின்ற தவசிமற் றெங்குள னூன்மெய்க்கொண் டுண்பவ னுன்னல தென்றாள். |
343 | பார்ப்பனி யோத்துநின் னோத்தும் பயமெனி னீப்பவுங் கொள்பவு நேர்து மவையவை தூப்பெனு மில்லன வேசொல்லி நிற்குமோர் கூர்ப்பினை நீயென்றுங் கோளிலை யென்றாள். |
344 | தூவினி னுண்புழுத் துய்ப்பனென் னாமையிற் றீவினை சேர்ந்திலன் றின்பவ னென்னினு மோவெனு முன்விலை வாணிக ரென்றினர் மேவினர் தாம்விலை யேவினை வேண்டார். |
345 | அடங்கிய வம்பு பறித்தன் முதலா வுடங்குசெய் தார்வினை யொட்டல ரென்பாய் மடங்கினர் வாழ்க வெனுமாற் றார்போற் கடஞ்சொல்லித் தின்பதிங் கியார்கட் டயாவோ. |
346 | தின்னு மனமுடைப் பேயெய்துந் தீவினை மன்னு மிகவுடைத் தாய்வினைப் பட்டில்லா ளென்னு முரைபெரி தேற்கு மிகழ்ச்சி தன்னை வினைப்பட நீசொல்லி னாயால். |
347 | அறஞ் சொல்லக் கொள்ளு மறமென் றறிந்தாங் கறஞ்சொல்லி னார்க்கற மாமென் றறியாய் புறஞ்சொல்லி தன்று புலால்குற்ற மென்று துறந்தொழிந் தாற்கொலை துன்னினர் யாரோ. |
348 | அறந்தலை நின்றாங் கருளொடு கூடித் துரந்தனள் யானென்னுஞ் சொல்லு முடையாய் மறங்கொண்டி துண்டென்னை மன்னுயிர்க் காமே சிறந்ததுண் டோவிது சிந்தித்துக் காணாய். |
349 | பேயொப்ப நின்று பிணங்கிக்கண் டார்க்கெனு மாயத்தி னூனுண்ண மன்னு மருமையி னாயொப்பச் சீறி நறுநுத லாளொடு காயக் கிலேசத்திற் கட்டுரைக் கின்றான். |
350 | வெயிறெறவ் வுணங்கியும் வெள்ளிடைந் நனைந்துமூன் டயிறலிற் பட்டினிகள் விட்டுமின்ன கட்டமாய்த் துயிறுறந் திராப்பகற் றுன்பவெங் கடலினார்க் கயிறெறுந் நெடுங்கணா யாவதில்லை யல்லதும். |
351 | காயம்வாட்டி யுய்த்தலிற் கண்டநன்மை யுண்டெனின் தீயினாற் சுடுதலுந் தெற்றியேறி வீழ்தலு நோயினாற் றிரங்கலுந் நோன்மையென்ன லாம்பிற நீயனா யிதற்கினி நேமியென்று சொல்லென. |
352 | புண்ணினைத் தடிதலும் போழவாற்றி நிற்றலும் கண்ணினைக் கழிகள்ளான் மிண்டிக்கொண்டு நீட்டலும் விண்ணுயர் நெடுவரைவ் வீற்றுவீற்று வீழ்தலும் அண்ணலார்தஞ் செய்கையு மாவதில்லை யல்லதும். |
353 | தூக்கடம்மை யாக்கலே தொல்லைநல் லறம்மெனின் நாக்களைப் பறித்தலுந் நான்றுவீழ்ந்து பொன்றலுந் தீக்கள் பாய்ந்துசாதலுந் தீயசெங் கழுவ்வின்மேன் மேக்கினைக்கொண் டேறலு மேன்மையென்ன லாம்பிற. |
354 | தானஞ்சீல மும்பொறை தக்கதாய வீரியம் மூனமில் தியானமே யுணர்ச்சியோ டுபாயமும் மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையுஞ் ஞானமீரைம் பாரமீதை நாடுங்கா லிவைகளும். |
355 | விருக்கமூலி யாகலும் வெள்ளிடை யுறைதலும் மிருத்தனிற்ற லன்றியு மிட்டகூறை யெய்தலும் மருக்கையின் மயானத்துட் சேக்கையும் மனைகளை வருச்சியார் புகுதலும் மற்றவற்றொ டுண்டலும். |
356 | அத்திட்டாடை கோடலும்மமையுமென்ன நீங்கலும் பெற்றதன்னிற் சேக்கையும்பேர்த்துண்ணா தொழிதலும் குற்றமென்னப் பிச்சையுங்குறித்துழிப் புகாதுதான் றுற்றியுய்த்த றன்னொடுதுதாங்கென்றாத்தர் சொன்னவே. |
357 | பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும் நேருமனையி லுண்மையா னீரும்வேண்டி னீரெனக் கூரிமம் வெயில்பசி கூடலுங் கூடினாற் சேர்தலில்லை நல்லறஞ் சிந்தையென்று செப்பலும். |
358 | அருந்தடிக ளீரவும் மறஞ்செய்வாளிற் போழவும் வருந்தவான துள்ளநீ மாட்சிநன்று மென்றியா லிருந்துநின்று நன்னெறிக் கிடைப்படாத சிந்தையாற் பெருந்தவங்கள் செய்ந்நரைப் பேசுவாயோர் பேதையே. |
359 | புத்தராகு மாண்பினா போதிகத்து வர்கட்காம் பத்துமாய பாரமீதை பாரவட்ட மென்றலும் சித்தராகு மாண்பினாற் சீலமும் வதங்களும் மெத்துணையும் மாயிரம்மா மென்றுமியாமு மென்றனள். |
360 | உடம்பினுள்ள பல்லுயிர் சாவவூனுண் மானுக்குத் தடங்கொண்மா வரைமிசைத் தன்னையீத னன்மையேற் படம்புனைந்த வர்கடாம் பலருமுண்ணு நீரினுள் விடம்பெய்தாற்கு நன்றுகொல் வியாதியாளன் றீர்கென. |
361 | அல்லவர்கள் சாதலை அறிந்தனன் னவனெனில் நல்லதில்லை நஞ்சினா லென்றுநாட்டு வாயெனி னெல்லையில்ல பல்லுயிர் தன்கணுள்ள வெஞ்சலுங் கொல்லவந்த வூன்களும் குற்றமென்ற வாறுகொல். |
362 | நீட்சி திரிவா மயிருகி¡; காட்டினை மாட்சியில் லாமயிர் மன்னுயி ருள்வழித் தாட்க ணிமிருந் தலைநிமி ராவெழல் காட்சி மரத்திற்குக் காறலை யெங்கம். |
363 | மரங்கள் வளருமென மன்னுங் கூம்பி விரிந்த விலையின் வேற்றுமை சொன்னாய் பொருந்து மிவையு மல்லவு மன்றோ வொருங்கிவ் வுலகத் துயிர்களு மென்றாள். |
364 | வயாத்திரு வாக்கி வளர்பூ சணிக்குத் தயார்செய்கை தீதென்னுந் தத்துவங் கண்டா யுயாப்பிழைத் தாய்மெழு கூனொடு பட்ட வயாவதற் கீண்டுப் பயத்தலி லன்றே. |
365 | யாதினு மாழ்குமம் மாழ்கியு மென்றுழி நீதின்னுந் தோலை நெருப்பொடு கூட்டத்தி னோதினை தேறுற நீர்க்குரைத் தாய்மற்றுஞ் சேதனை யில்லாய் திரிவென்னை வண்ணம். |
366 | அரும்பு மலரு மரும்பிணி தீர்வு மொருங்குதங் காரணத் தாக்க முணர்த்து மரங்களு மன்னுயி ரெய்தின வென்ன விரும்பொடு காந்த மியைவி றிரிவே. |
367 | ஒப்ப மரங்கட் குயிருண்மை யாமினி யிப்படித் தோன்று மிருதுக்கள் சார்ந்தெனச் செப்பிய வேதுத் திரிவெனக் காட்டிய வெப்பங் குளிரவை தாமவை யேயால். |
368 | மரங்களை யொப்புமை யாலுயி ரென்னக் கிரந்தியும் வெப்பங் கிளக்குவை யாயி னிரந்த வுடம்பின் விகார நினக்குப் பரந்துண ருண்மையைப் பார்ப்படுத் தாயால். |
369 | வாட்டங்க ளுண்மையின் வாழ்மரஞ் சேர்ந்தவை நாட்டிய வாதலி னல்லுயி ரோவெனக் காட்டிய தோலொத் திராமையும் வாடுமத் தோட்டஞ்செய் சேம்புயிர் தொன்முடி வன்றோ. |
370 | அற்ற வுடம்புக ளாறுத லான்மரந் தெற்ற வுயிருண்மை செப்பத்தி னாமெனப் பெற்ற பிழைசொல்லிப் பித்தெழுந் தாரொப்பக் குற்ற மிவையெனக் கூறிதி யன்றோ. |
371 | காட்டின மண்ணை முதலா வுடையன வோட்டி யுரைத்த வுயிரென வொட்டலர் நாட்டினுள் வாழ்பவ ரின்னரென் றாவந்த நாட்டை யவரென்ன நாட்டிய வாறே. |
372 | தாவர மாய மரமிவை தாமென யாவருஞ் சொல்லுப வ·து மறிந்திலை நீவி ரெவர்சொல்லச் சொல்லினீ ரென்றுநின் சீவரம்போற் கட்டில் செப்புவ தென்னோ. |
373 | மக்களுட் டோன்றிய போழ்த மரவுயிர்க் கொப்ப வுடம்பறி வன்றியொன் றில்லெனிற் றக்கதன் றன்மையுடைப் போதி சத்துவன் மிக்கதென் னோதிக்கு வேற்றுமை வேண்டார். |
374 | நாண முடைய மரமுத லியாவையும் மூணின வாழ்ந்துமுண் ணாவிடிற் சாதலைக் காணவும் பட்டது கஞ்சியோ டல்லதை யாண மிலாப்பொரு ளாட்சியர் போன்றே. |
375 | மயக்குடை மாட்சியி னார்க்கு மரங்கட்கு மன்னுயிர்தாம் பயப்பட வொக்கு மெனவே யெனமன்னும் பற்றிலனாய் வியப்புடை யாகம மீதென நீயும் விரித்துரைக்கு நயப்பிர மாணங்கண் மேற்குற்ற நாடுவன் யானெனவே. |
376 | நிற்றலுங் கேட்டினோ டுண்மையு மின்மையு நேர்தலினு மொற்றுமை வேற்றுமை தம்மையு மொட்டப் படுதலினுங் குற்ற மிவையிவை யாதலைக் கேளெனக் கூறினனே முற்ற மவளது பக்க மறிதலில் மொக்கலனே. |
377 | வேயொத்த தோளி நிலையுதல் வேண்டப் படுதலினாற் காயத்தின் றன்மைய வாயெக் கருமமுங் காண்பரிதா நாசத் தவமெனிற் றோன்றுவ தாமு நவநவமாம் தோசத்த வாநின் பொருளெனக் கேட்டிது சொல்லினனே. |
378 | நின்றன வேயென்று நில்லலவேயென்று நேர்பவர்க்கு மொன்றென வேயும்பின் வேறெனவேயுந்தம் முண்மையின்கட் சென்றன வேயென்றுஞ் செல்லலவேயென்றுஞ் செப்பினர்க்கே அன்றென லாமோ வறைந்தபல்குற்ற மவையவையே. |
379 | நின்ற குணங்களி னித்தியமென்று நிலையிலவா மென்ற குணங்க ளநியத மென்று மியம்புதலாற் சென்ற குணங்க ளிருமையு மல்ல தவற்றினிற்றீர்ந் தொன்றங்கு நின்ற பொருளுள்ள தேலா தெனவுரைத்தான். |
380 | கேடில வாய குணத்தி னிலையுங் கெடுங்குணத்தி னீடில வென்பது நேர்ந்தினி யப்பொரு ணேர்தலில்லாய் மூடலை யாவதன் காரண மென்னை முடிகுணத்திற் கூடல தாய குணிப்பொருள் கூறினர் யாவரென்றாள். |
381 | குணங்களல் லாற்பொருள் வேறில்லை யாயிற் குறிப்பொருளாம் பிணங்கல வாகிப் பிறபிற வாயிற பிறபொருளா முணர்ந்தன தாமிகு சொல்லினு மொன்றெனி னொன்றவையா நுணங்கிய கேள்வியி னாயொன் றுரையென நோக்கினனால். |
382 | நிலையா தெனவு முயிரில்லையென்று நெறிமையினாற் றொலையாத் துயரொடு தூய்தன்மையென்றின்ன தொக்குளவாக் கலையா விழுப்பொருட் கந்தங்களைந்திற்கும் காட்டுதலான் மலையா திதுநுங்கண் மார்க்கத்தொடென்றனள் மாணிழையே. |
383 | ஆரிய சத்தைய லாற்கந்தம்வேறில்லை யேற்குறியா மாரிய சத்தையுங் கந்தமும்வேறெனின் வேறவையாம் போ¢வை தாமிரண் டொன்றினுக்கேயெனி னொன்றவையாங் கூரிய சிந்தையி னாயொன்றுசொல்லென்று கூறினளே. |
384 | சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம் சொல்லல னென்ன வினவினுமென்னினுஞ் சொல்லிலையாம் சொல்லுவ னல்லன் ஒருவகையாச் சொலினவ் வகையாற் சொல்லிய குற்றங்க டுன்னுமெனவது சொல்லினனே. |
385 | தன்மையி னன்மையுந் தன்னல்பொருள்களி னுண்மையுந்தம் பன்மை யுடையவப் பண்புகளெல்லா முடனுரையுஞ் சொன்மை யுணரா தவர்கட்குத்தான்சொலற் பாடின்மையாற் புன்மை யுடைய புறத்தீருரைக்கு முரையுமென்றாள். |
386 | சேற்பொருள் போலரி சிந்தியகண்ணாய் சிதர்ந்துரைக்கு நூற்பொரு டாம்பரி ணாமத்திரிவென நோக்குதியேற் பாற்பொரு டான்றயி ராயபொழுதின்கட் பாழ்த்திலதேற் பாற்பொரு ளேயின் றயிரெனச்சொல்லப் பழுததென்றான். |
387 | உருவப் பிழம்பப் பொருளென்றுரைப்பனிப் பாறயிர்மோர் பருவத்தி னாம்பரி யாயப்பெயரென்பன் பாலழிந்து தருவித் துரைத்த தயிருருவாய்மும்மைத் தன்மையதாந் திருவத்த தென்பொரு ளாதலைத்தேர தெளியிதென்றாள். |
388 | பெற்றது தானுங்கும் மாயத்திரிபு பயற்றியல்டே யிற்ற திதுவென திட்டமென்பாயிவ் விரும்மையினுந் தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னைதேற்றினித் தேற்றிலையேன் மற்றது வாமை மயிரெனச்சொல்லுவன் மன்னுமென்றான். |
389 | கெட்ட திரிட்சியுந் தோன்றியசாந்தும் பொருளெனவும் பட்டன வப்பொருள் பையைகளேஎன்னும் பான்மையினால் விட்ட திரள்வினுந் தோன்றியசாந்தினும் வேற்றுமையாம் நட்டமுந் தோற்றமு நாட்டேனுருவிற்கு நானுமென்றாள். |
390 | திரியும் பொருள்க டிரிந்தாம்பயறுகும் மாயமுமாய் விரியும் மெனவது வேண்டுகின்றாயறக் கேட்டமைக்கேற் கரியும் முடையன் பயறொடுநீருங் கலந்துபெய்தா லெரியுறு கின்றதன் றேயிதுவோவொப்ப விற்றதென்றான். |
391 | பருமை யுடைய பயற்றின்வழியொன்று பாவியுண்டா யருமை யுடையவந் நீருக்குமாவியன் றோவதன்றி யிருமையுங் கெட்டுட னாயிற்கும்மாயமு மில்லற்கனும் பெருமையி னாலொன்று பெற்றொன்றுபேறின்மை பேதைமையே. |
392 | கெடுவன தோன்றுவ நிற்பன தாமுங் குணமென்றியேற் கெடுவன தோன்றுவ நிற்பன தாங்குண மாயினற்காற் கெடுவது தோற்ற நிலையுத றானப் பொருளெனவும் படுவ· தாக வுரைப்ப தியாதின் பவத்ததென்றான். |
393 | கூறிய தெக்குண மக்குணந்தானக் குணிப்பொருளே தேறிய தெக்குணி யக்குணிதீர்ந்தில பல்குணமும் வேறென வொன்றென வில்வகைவேண்டுகின் றேற்கவைதா மாறென்னுங் கொள்ளா முடிபுமொழிநின் மயக்கமென்றாள். |
394 | புற்கல மாய முதற்பொருடத்தமுட் புல்லினவாய்க் கற்களு நீருந் நிலத்தொடுகற்றழ லென்றினைய பற்பல கூற்றாற் பிறங்கிப்பரக்குந் தியமென்னையோ வுற்றவை யொன்றொன்றி னுட்புகுமோத்துடை யாய்க்கெனலும். |
395 | யாத்தற் கமைந்த குணத்தின வாய வணுப்பொருள்க ணீத்தற் கரியன நீத்த வருக்க நெறிமையினா லேத்தற் கியைந்த விரண்டணு வாதியி னின்னணமா மோத்திற்கிடந்த வகையிது கேளென் றுரைத்தனளே. |
396 | இரண்டணு வாதியி னின்னணமேறுநின் கந்தமெனிற் றிரண்டன வாய்த்தம்முட் சென்றுடன்றீண்டு மிடத்தவைதா முருண்டன தாமொன்றி னுள்ளும்புடையு முடைமையினாற் றெருண்டனம் பாகுபா டுற்றற்குமென்றனன் றேரனுமே. |
397 | ஓரிட மாய முதற் பொருட் குள்ளும் புடையுஞ்சொல்லிப் போ¢ட மாக்கிப் பிளப்ப னெனவும் பிதற்றுகின்றா யாரிட மாய வறிவிற்கு மின்னண மாதலினா னோ¢டத் தாற்பன்மை யெய்தி யுருவா நெறியுமென்றாள். |
398 | வண்டாயுங் கோதாய் வரைநெல்லியின் காய தங்கை யுண்டாய போதே யுறையூரகத் தில்லை யென்பாய் கண்டாயிம் மெய்ம்மை பிறர்காண்டற் கரிய தென்றான் பெண்டான மீயு மறங்கொண்ட பெருமை யினான். |
399 | வெய்தாய தீயுங் குளிராகிய நீரும் விண்டோய்ந் தைதாய காற்று மவையாரு மறிப வென்றாற் பொய்யாகு மென்னா யவைபுத்த வசன மென்பாய் செய்தாய் முழுக்கூ ழதுபோலச் சிதைக்க வென்றான். |
400 | கந்தின்கட்ட காணாய் களியானையை யில்லை யென்பாய் வந்திங்க ணின்ற பொழுதுண்மை மறுக்க லாமோ தந்திங் குரைத்த வுரைதானுங் கெடுக வென்றான் வெந்திங்கு வித்தின் னனைத்தாகிய வீடு கண்டான். |
401 | ஆண்டில்லை யென்பன் னதுவுள்வழி யுண்டு மென்ப னீண்டின்மை யுண்மை யிவையாக விசைத்து நின்றேன் வேண்டி யனவே முடிப்பாய்விரி பொன்னெ யிலு ளீண்டி யிமையோர் தொழுவானெம் மிறையு மென்னாய். |
402 | கொல்லேற்றின் கோடு குழக்கன்றது வாயி னக்கா லில்லாகு மென்றி யிவையிங்ஙன முண்மை யின்மை சொல்லேனு மல்லே னதுசொல்லுவன் யானு மன்னாய் கொல்லேற தாகப் பொழுதேயுடன் கூறு கென்றான். |
403 | ஏறாய காலத் தெழினல்லது வத்து பேதங் கூறாரெ ழாத குழக்கன்றினுக் கின்மை முன்னா வீறாகி நிற்கும் முதலுண்மையிற் கின்மை யெங்கு மாறியாது மில்லை கலைக்குண்மையு மற்றுமென்றாள். |
404 | கன்று முயலுங் கழுதைப்பெயர் பெற்ற னவுங் குன்றுந் தலையுட் பெறப்பாடெய்தல் கோடு றுப்பா வென்றும் மவற்றுக் கெழலில்லைநின் பேத மென்றாற் சென்றுஞ் சிலவிற் சிலவின்மையு மாகு மென்றான். |
405 | இல்லாத கோட்டை யுளதாக வெடுத்து மென்று சொல்லார்கள் பேதம் சொலவேண்டுவை யாயி னக்காற் புல்லாது நில்லாப் பொருடங்களுக் குண்மைக் கின்மை கல்லாது நீயுங் கழுதைக்கருள் செய்தி யென்றாள். |
406 | இல்லை வலக்கை யிடக்கைவகை யால தென்றுஞ் சொல்லின் னதற்கு மதுவேயெனுஞ் சூழ்ச்சி மிக்கா யொல்லை யிரண்டு முளவாக வுணர்ந்தனை நீ நல்லை பெரிதும் மெனமொக்கல னக்க னனே. |
407 | இக்கை வகையா லதுதானுள தாயி னக்காற் றொக்க விரண்டும் முடனாதலிற் றூய்தொ ருபால் பக்கம் மதுவும் படுபாழினிக் காலு மற்றாய்ச் செக்கின்கணைபோன்றினிச் சென்றுருள் சேம மென்றாள். |
408 | கைகால் வகையால் பெறப்பாடிலை காலு மற்றாய் மெய்தா மொழிய வவைபாறெய்தல் வேண்டு தலாற் கொய்தார் நறும்பூங் குழலாய்குழ மண்ணர் களாச் செய்தா யுலகிற் சிறுமானுயர் தம்மை யென்றான். |
409 | கால்கால் வகையா லுளகைகளுங் கையி னற்றாய்ப் பாலாய் முடியு மவைபண்டை யியல்பி னாலே யேலா திவைதா முளவெத்திறத் தானு மென்னி னாலாவ தான முடிவி னாயொடு நண்டு மொத்தாய்.. |
410 | அல்லென் றுரைத்த வுரைதானுமெம் மாக மத்து ளில்லென்ற வாறென் றிவையிங்ஙனம் வேண்டு கின்றாய் சொல்லன்று நாயைந் நரிதானென்னச் சொல்லு கின்றா னில்லென்ற வாறோ நரிதன்னையு மென்ற னனே. |
411 | நாய்கொன் னரிகொல் லெனத்தோன்றுமுணர்வு நண்ணி யாய்சொல் லிரண்டின் னுணர்ந்தல்லதுவன்மை யென்றாய் நீசொல் லறியா யறிவார்நெறிநேடு கில்லாய் பேய்சொல் லுபவே பலசொல்லிப்பிதற்ற லென்றாள். |
412 | பேரும் உணர்வும் பொருளில்லதற் கில்லை யென்றி சார்வும் மகல்வுந் தலைப்பெய்தலோ டுள்ள மின்மை நோ¢ங் கிவையு முணராமையிற் கென்ற னனாய்த் தேரன் சிறிதே தெரிகோதையை நக்க னனே. |
413 | ஆத்தன் னுரைத்த பொருடன்னையவ் வாக மத்தாற் சாத்தன் பயின்றா லறியாவிடுந் தன்மை யுண்டோ வீர்த்திங் குரைத்த பலதம்முளொன் றின்ன தென்னா யோத்தின் வகையாற் பெயரோடுணர் வின்மைக் கென்றாள் |
414 | ஒன்றி னியற்கை யொருவான்பொருட் கில்லை யென்றே யென்று முரைத்தி யிரும்பெய்திய வெம்மை யந்நீர் சென்றும் மறுகித் தீக்குணஞ் சேர்ந்த தற்றேற் குன்றும் பிறவோ வினிநீண்ட கோளு மென்றான். |
415 | கொண்ட வுடம்போடுயிர் தானுடன் கூடி நின்றாற் கண்டு முணர்ந்து மவையாவதென் கல்வி யில்லா யுண்டங்க ணின்ற வுயிர்க்காக வுரைப்ப தொக்கும் பிண்டந் நிகழ்ச்சி பிழைப்பாகு நினக்கு மென்றாள். |
416 | மெச்சி யிடத்தாற் பிறிதின்மை விளம்பு கின்றாய் பிச்சை முதலாப் பெரிதாவறஞ் செய்த வன்றா னச்செல் கதியுள் ளமரன்னெனப் பாடு மின்றே விச்செய்கை யெல்லா மிகழ்வாம்பிற வென்ற னனே. |
417 | ஊனத்தை யின்றி வழங்காவுழல் கின்ற போழ்து மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும் வானத்த தாய பொழுதுமன் னுயிர தென்றா டானத்தி னுண்மை யிதுதத்துவ மாக்கொ ளென்றாள். |
418 | காலம் பிறிதிற் பொருளில்லெனக் காட்டு கின்றாய் ஞால மறியத் தவஞ்செய்தவ னல்லு யிர்தா னேலங்கொள் கோதா யெதிர்காலத்தி னின்மை யாமேற் சீலங்கள் காத்தல் வருத்தஞ்சிதை வாக வென்றான். |
419 | ஆற்ற வருந்தித் தவஞ்செய்து மரிய காத்துந் நோற்றும் பெரிதுந் நுணுகாநின்ற பொழுதி னானும் மேற்ற முடைய விமையானெனப் பட்ட போழ்துஞ் சாற்றி னுயிர்தன் பொழுதே யுண்மை தங்கு மென்றாள். |
420 | நூறா னிரும்பாய் நிகழாமை நொடிதி யாங்கே பாறான் றயிரா மெனநின்று பயிற்று தியான் மாறா னுடையா ருரையொக்குநின் மாற்ற மென்னாத் தேறார் தெருண்டா ரெனச் சொல்லினன் றேர னும்மே. |
421 | தத்தந் நிமித்தந் தலைப்பெய்துதங் காரி யம்மா யொத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து நின்றேன் பித்தனி னோப்பப் பிறிதிற்பிறி தாமென் பனோ வித்தின் வழியா னுரைநீயும்வெள் யானை யென்றாள். |
422 | கூடா பொருள்கள் பிறிதின்குணத் துண்மை யென்பாய் பாடாஅலப் புட்பத் தனவாகிய பண்பு நாற்றம் மோடாவ தெய்திற் றெனவையமுரைக் கின்ற த·தா னாடாது சொன்னா யதனன்மை யொழிக வென்றான். |
423 | போதுக்க வாசம் புதுவோட்டைப் பொருந்தினாலும் மேதக்க நாற்ற மிதுபூவின தென்ப மிக்கார் தாதுக்க நின்று மவைபோக்குந் ததாக தற்கென் றேதுக்கள் காட்டி முடித்தாளிணை யில்ல நல்லாள். |
424 | வீட்டிட மென்று நின்னால்வேண்டவும் பட்ட தன்னை நாட்டுவ னதுவு நாயிற்கென்றுநன் றென்றி யாயிற் சூட்டடு நரகந் தானுஞ்சுடர்ந்தநற் சுவர்க்கந் தானும் பூட்டின முரைத்த வக்காற்போந்ததங் கென்னை யென்றான். |
425 | கதியின வகைய வாறுங்கந்தபிண் டங்கள் சொன்னான் பதியின வென்ன நின்றாய்பாக்கனாய் காட்டு தீயால் விதியினின் விளையட் டார்தம்வீட்டிட மின்ன தென்றாற் கதுவென்னை யென்னச் சொன்னாலாகம மல்ல தாமோ. |
426 | பேர்த்தினவண் வார லில்லாப்பிறவியாந் தான மென்னிற் றீர்த்திவண் வார லின்மைசேர்விடக் குண்மை யாமோ கூர்த்தலில் வினையி னின்மைகூறுவ னென்றி யாயி னார்த்துள னவனே யாயினண்ணுமே வினையு மென்றான். |
427 | பிறப்பதை வீடு மென்னேனவ்விடம் பேர்ப்பின் றென்னே னுறத்தகு வினைக டாமுமுண்மையா லொட்டு மென்னேன் மறத்தலில் யோக பாவமாசதா மீட்டு மென்ப திறப்பவும் வேண்டு கின்றேற்கெய்தல நின்சொ லென்றாள். |
428 | பிறக்குந்தன் ஞானத் தாலும்பின்னுந்தன் னுண்மை யாலும் புறப்பொருள் கொண்டு நின்றுபுல்லிய சிந்தை யாலுஞ் சிறப்புடை வீடி தென்றுசெப்புநீ தீவி னையைத் துறக்குமா றில்லை நல்லாய்சொல்லுநீ வல்ல தென்றான். |
429 | நன்றியில் கார ணங்கணாட்டிநீ காட்டி னவ்வு மொன்றுநா னொட்டல் செல்லேன்யோடுகொடு பாவ நின்றாற் குன்றினிற் கூர்ங்கை நாட்டாற்கூடுநோ யாதிற் குண்டோ வொன்றுநீ யுணர மாட்டாயொழிகநின் னுரையு மென்றாள். |
430 | கருவிதா னொன்று மின்றிக்கடையிலாப் பொருளை யெல்லா மருவிய ஞானந் தன்னாலறியுமெம் மிறைவ னென்பாய் கருவிதா னகத்தி னாயகடையிலா ஞான மன்றோ மருவியார்க் கமிர்த மொப்பாய்மாற்றந்தா விதனுக் கென்றான். |
431 | வினையுமவ் வினையி னாயவிகலஞா னங்க டாமு மினையவே கருவி யென்றாலிங்குநின் னுள்ளம் வையாய் முனைவனாய் மூர்த்தி யல்லான்மூடுமே மாசு மென்பாய் கனைகட லென்லை காணுங்காக்கையொத் தாங்கொ லென்றாள். |
432 | கொண்டதன் கரணந் தானுமில்லையேற் கூற்று மில்லை மண்டினர் வினவு வார்க்குமலைச்சிலம் பனைய னென்றா லுண்டுதன் கரணந் தானுமுரைக்குநர்க் குறுவ னென்னிற் பண்டுசெய் நல்வி னையைப்பகவனே யென்று மென்றான். |
433 | தனுவெனுங் கருவி தன்னாற்றன்னடைந் தார்க டன்னை வினவின வுணர்ந்து சொல்லும்வினையினுக் கின்ன துண்டோ சினவினுந் தேர வொன்றுசெப்புவன் செல்க தீயுட் கனவினு நின்ன னாரைக்காணல னாக வென்றாள். |
434 | முறையினா லறிய லன்னேன் மூத்தலே யிளமை சாக்கா டுறையல வொருவன் கண்ணே யுடனவை யாக வொட்டி னிறைவனா ருணர்வு தானுமின்மைமே லெழலும் வேண்டி யறைதுநா மன்ன மன்னா யன்னண மாக வென்றான். |
435 | சீலவான் றெய்வ யாக்கைதிண்ணிதா வெய்தி நின்றார் காலமூன் றானு முய்த்துக்காட்டலுங் காண்டு மன்றோ ஞாலமூன் றானு மிக்கஞானவா னான நாதன் போலுமென் றோர்தல் செல்லாய்போர்த்தனை யகமு மென்றாள். |
436 | நாளெல்லா மாகி நின்றநன்பொரு டம்மை யெல்லாங் கோளெல்லாந் தானொ ருங்கேகொள்ளுமே லீர்ங்கு வள்ளைத் தாளெல்லாந் தானொ ருங்கேதானுநல் லானோர் நல்ல வாளினா லேறு முண்டேல்வாய்க்குநின் னுரையு மென்றான். |
437 | நீருநீர் தோறு முவ்வாநலையிற்றே திங்க ளென்று மூரினூர் தோறு மொவ்வாவொளியிற்றே ஞாயி றென்றும் யாரின்யார் கேட்ட றீவாரன்னனே யண்ண லென்றார் தேரனீ சொன்ன தன்னம்சேரல வாக வென்றாள். |
438 | அளவிலாப் பல்பொ ருள்கட்காகுபண் பாகி நின்ற வுளவெலாப் பொதுக்கு ணத்தானொருங்குகோ ளீயுமென்னிற் பிளவெலா மாகு மன்றேபெற்றிதா மொத்த லில்லேற் கொளவெலா ஞானந் தானுங்கொள்ளுமா றெவன்கொ லென்றான். |
439 | ஒன்றல்லாப் பலபொ ருளுமொத்தொவ்வாப் பெற்றி யாலே நின்றுகோட் செய்யு மென்றானீடிய குற்ற மாகா தென்றலா லின்ன தன்மையிறைவன தறிவு மெய்ம்மை யின்றெலாங் கேட்டு மோராயேடனீ யென்று சொன்னாள். |
440 | எல்லையில் பொருள்க டம்மை எல்லையி லறிவி னாலே யெல்லையின் றறியு மெங்க ளெல்லையி லறிவ னென்பாய் எல்லையில் பொருள்க டம்மை யெல்லையின் றறியி னின்ற வெல்லையி லறிவு தானு மெங்ஙன மெய்து மென்றான். |
441 | துளக்கில்லாப் பலபொ ருளுந்தொக்கதன் றன்மை யெல்லாம் விளக்குமே ஞாயி றொப்பவென்பது மேலுஞ் சொன்னேற் களக்கிவர் தன்ன மன்னாயாத்தன தறிவு மென்றென் றிளக்கிநீ யின்னு ம·தேசொல்லுதி யேழை யென்றாள். |
442 | ஓதலி லுணர்வு மின்றேலூறவற் குண்டு மாகு மோதலி லுணர்வு முண்டேலொன்றுமே பலவும் வேண்டா மோதலி லுணர்பொ ரூடாமுள்ளவும் மில்ல வும்மே லேதமா மில்பொ ருண்மேனிகழ்ச்சிதா னிறைவற் கென்றான். |
443 | சென்றவக் குணங்க டாமுஞ்செல்லுமக் குணங்க டாமு மன்றையக் குணங்க டாமுமப்பொருட் டன்மை யாலே நின்றதன் ஞானந் தன்னானிருமல னுணரு மென்றாற் பொன்றின வெதிர்வ வென்றல்பொருள்களுக் கில்லை யென்றாள். |
444 | பிறவிதா னொன்று மில்லான்பெரியனே யென்று நின்றான் மறவிதா னில்லை யோனிமன்னுநான் கென்னு மில்லா னறவியா யுந்த நூலுள் ளாத்தனா மாயி னக்காற் புறவினிற் புரளுங் கல்லும்புண்ணிய னாக வென்றான். |
445 | பிறத்தலே தலைமை யாயிற்பிள்ளைக ளல்ல தென்னை யறக்கெட றான தென்னிலட்டக வித்து வெந்தாம் புறப்படும் போர்வை யாலேற்புண்டொழு நோய ராகச் சிறப்புடை யண்ண றன்னைக்கல்லெனச் சொல்லு வாய்க்கே. |
446 | அடைவிலா யோனி யானாயாருமொப் பாரு மின்றிக் கடையிலா ஞான மெய்திக்கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து புடையெலாம் போற்றி யேத்தப்பொன்னெயிற் பிண்டி மூன்று குடையினா னிறைவ னென்றாற்குற்றமிங் கென்னை யென்றாள். |
447 | கோதியிட் டுள்ள தெல்லாங்குண்டல கேசி யென்பா ளாதிசா லாவ ணத்துளார்கதர் தம்மை வென்ற வீதியீ தென்று சொல்லிவீழ்ந்தனை நீயு மென்றா ணீதியாற் சொல்லி வென்றநீலமா கேசி நல்லாள். |
448 | பேதைக ளுரைப்பன வேசொல்லிப்பெரிதலப் பாட்டினைநீ பேதைமற் றிவன்பெரி தெனப்படும்கருத்துடை மிகுதியினாய் தாதையைத் தலைவனைத் தத்துவதரிசியைத் தவநெறியி னீதியை யருளிய நிருமலன்றகைநினக் குரைப்ப னென்றாள். |
449 | பகைபசி பிணியொடு பரிவின பலகெட முகைமலர் தளிரொடு முறிமரம் வெறிசெய மிசைநிலம் விளைவெய்த விழைவொடு மகிழ்வன திசைதொறு மிவைபிற சுகதன செலவே. |
450 | குழுவன பிரிவன குறைவில நிலையின எழுவன விழுவன விறுதியி லியல்பின வழுவலில் பொருள்களை மலர்கையின் மணியென முழுவது முணருமெ முனைவர னறிவே. |
451 | நிறைபொறி யுளவவை யறிதலி னெறிமைய முறைபொரு ணிகழினு முறைபடு மறிவிலன் மறைபொரு ளுளவவ னறிவினை மறையல விறைபொருண் முழுவது மறிதிற மிதுவே. |
452 | பிணிதரு பிறவிய மறுசுழி யறுவதொர் துணிவிது வெனநம துயர்கெடு முறைமையு மணிதரு சிவகதி யடைதலு மருளுதல் பணிதரு பரமன தருள்படு வகையே. |
453 | சொரிவன மலர்மழை துளிகளு நறுவிரை புரிவன வமரர்கள் புகழ்தகு குணமிவை விரிவன துதியொலி விளைவது சிவகதி எரிவன மணியிதெ மிறைவன திடமே. |
454 | அரசரு மமரரு மமர்வனர் வினவலின் வரைவில பிறர்களு மனநிலை மகிழ்வெய்த உரைபல வகையினு முளபொரு ளுணரவொர் முரைசென வதிருமெ முனைவரன் மொழியே. |
455 | வினையிரு ளடுவன விரிகதி ரியல்பொடு கனையிருள் கடிவன கடுநவை யடுவன மனையிரு ணெறிபெற மதிகெட வடைவன வினையமெ யிறையவ னிணையடி யிவையே. |
456 | ஆத்த னிவனென் றடிக ளிடமிசைப் பூத்தனைத் தூவிப் பொருந்து துதிகளி னேத்துநர் கண்டா யிருவினை யுங்கெடப் பாத்தில் சிவகதிப் பான்மைய ரென்றாள். |
457 | ஏந்த றிறங்க ளிவையே லமைந்தன போந்த வகையாற் பொருளும் பிழைப்பில வீந்த விவற்றினின் வேற்றுமை வீட்டிற்கு மாய்ந்த வகையா லறிவிமற் றென்றான். |
458 | வித்தென்றும் வெந்தால் முளையல தாயெண்மை யொத்தினி துண்டா முயிரும் பிறப்பின்றிச் சித்தி யகத்துச் சிதைவிலெண் டன்மையி னித்திய மாகி நிலையுள தென்னாய். |
459 | ஒக்கு மிதுவென வுள்ளங் குளிர்ந்தினி
மொக்கலன் சொல்லுமிம் மோக்கத்தைப் பாழ்செய்த |
460 | பண்டே யெனக்கிம் மயக்கம் பயந்தவன் கண்டார் மயங்குங் கபில புரமென்ப துண்டாங் கதனகத் தோத்துரைக் கின்றனன் றண்டா தவனொடு தாக்கெனச் சொல்லி. |
461 | சிறப்பின தென்பதைச் செப்பலுந் தெற்றெனப் பிறப்பறுத் தின்பெய்தும் பெற்றியின் மிக்க வறப்புணை யாகிய வாயிழை யாயான் மறப்பில னென்று வலஞ்செய் தொழிந்தான். |
462 | அருளே யுடைய னறனே யறிவா டெருளா தவரைத் தெருட்டல் லதுவே பொருளா வுடையாள் புலனே நிறைந்தாள் இருடீர் சுடர்போ லெழுந்தா ளவன்மேல். |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீலகேசி - Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள் - தீவினை, யென்றாள், மென்றான், வென்றான், வேண்டு, மென்றாள், மாட்சி, குணங்க, யென்று, பல்லுயிர், மென்று, காட்சி, நின்று, வேற்றுமை, சந்திர, பொருள்க, நோக்கி, மெய்ம்மை, நீலகேசி, காட்டு, தென்றான், சொல்லி, கடவுள், செய்யும், லென்றாள், கின்றாய், கில்லை, மில்லை, நாட்டிய, காட்டி, றுக்கந், னுண்மை, வகையாற், யாயினும், கென்றான், சொல்லு, னக்காற், கின்மை, யென்பாய், வண்ணம், பொங்கி, வாயில், பெரிதும், பிறவும், சென்று, மெல்லா, பெருமை, வாழ்த்து, மில்லா, சிறப்புடை, மில்லையே, நன்னெறி, வென்றாள், கேசியே, யாகாதோ, னென்று, யெல்லா, மென்பதனை, வேண்டார், மூன்று, பெரும்பேதாய்