புறநானூறு - 89. என்னையும் உளனே!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: தானை மறம்.
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல், மடவரல், உண்கண், வாள்நதல், விறலி! பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! எறிகோல் அஞ்சா அரவின் அன்ன |
5 |
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண்கண் கேட்பின், அது போர்! என்னும் என்னையும் உளனே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 89. என்னையும் உளனே!, என்னையும், இலக்கியங்கள், உளனே, புறநானூறு, உடைய, சிறிய, போர், அதியமான், எட்டுத்தொகை, சங்க, வேந்தே