புறநானூறு - 80. காணாய் இதனை!
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: தும்பை.
துறை: எருமை மறம்.
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், மைந்துடைமல்லன் மதவலி முருக்கி, ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே; நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் |
5 |
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம- பசித்துப் பணைமுயலும் யானை போல, இருதலை ஒசிய எற்றிக், களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 80. காணாய் இதனை!, இலக்கியங்கள், காணாய், தித்தன், ஒருகால், புறநானூறு, இதனை, கிள்ளியின், புலவர், மல்லன், யானை, கின்றே, சங்க, எட்டுத்தொகை