முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
புறநானூறு - 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக் கடுங்கோ
வாழியாதன் என்பவனும் இவனே.
திணை : பாடாண்.
துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப், போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது , இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக், கடந்து அடு தானைச் சேரலாதனை |
5 |
யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்! பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி; மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி; அகல்இரு விசும்பி னானும் பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!, இலக்கியங்கள், ஆகாக், கதிர்நிகர், புறநானூறு, காவலன், என்னும், வருகிறாய், போகம், ஊக்கம், சேரமான், எட்டுத்தொகை, சங்க, கடுங்கோ, வாழியாதன்