புறநானூறு - 79. பகலோ சிறிது!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை; அரசவாகை.
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து, தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி, வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே; |
5 |
எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 77 | 78 | 79 | 80 | 81 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 79. பகலோ சிறிது!, இலக்கியங்கள், பகலோ, புறநானூறு, சிறிது, மூதூர், எட்டுத்தொகை, சங்க