முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 71. இவளையும் பிரிவேன்!
புறநானூறு - 71. இவளையும் பிரிவேன்!
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
திணை: காஞ்சி
துறை: வஞ்சினக் காஞ்சி
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து என்னொடு பொருந்தும் என்ப ; அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த |
5 |
பேரமர் உண்கண் இவளினும் பிரிக: அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத், திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ் வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின் |
10 |
பொய்யா யாணர் மையற் கோமான் மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால் அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும், கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த |
15 |
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ, மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர் வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 71. இவளையும் பிரிவேன்!, ஆகுக, இலக்கியங்கள், பிரிவேன், காக்கும், இவளையும், புறநானூறு, யான், வெஞ்சின, மன்பதை, ஆதன், காவலின், குடியில், சூழ்ந்த, சிறந்த, காஞ்சி, ஒருவனை, எட்டுத்தொகை, வையை, சங்க