முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 7. வளநாடும் வற்றிவிடும்!
புறநானூறு - 7. வளநாடும் வற்றிவிடும்!
பாடியவர் : கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற
வள்ளை: மழபுல வஞ்சியும் ஆம்.
களிறு கடைஇய தாள், கழல் உரீஇய திருந்துஅடிக், கணை பொருது கவிவண் கையால், கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து மா மறுத்த மலர் மார்பின், |
5 |
தோல் பெயரிய எறுழ் முன்பின், எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ! |
10 |
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து மீனின் செறுக்கும் யாணர்ப் பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 7. வளநாடும் வற்றிவிடும்!, இலக்கியங்கள், வற்றிவிடும், வளநாடும், புறநானூறு, மறுத்து, பாயும், இயல்தேர், மறுத்த, சங்க, எட்டுத்தொகை, தோல்