முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 61. மலைந்தோரும் பணிந்தோரும்!
புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. திணை; வாகை.
துறை; அரச வாகை.
கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக, |
5 |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும் வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர் தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர் குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து, |
10 |
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும், வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன், எகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி, சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன் |
15 |
எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர் வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, திருந்து அடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்டல், அதனினும் இலமே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!, இலக்கியங்கள், மலைந்தோரும், புறநானூறு, பணிந்தோரும், வருந்தக், இலமே, பறித்து, கண்டதும், வாழக், பூவையும், புதுநெல், சங்க, எட்டுத்தொகை, வாகை, நெய்தல், சென்னி, உறுதி