முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 6. தண்ணிலவும் வெங்கதிரும்!
புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!
பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண்.
துறை :செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு :பாண்டியனின் மறமாண்பு.
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும், கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் |
5 |
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது |
10 |
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக், கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச் சிறுகண் யானை செவ்விதின் ஏவிப், பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து, அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் |
15 |
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப், பணியியர் அத்தை நின் குடையே; முனிவர் முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே! இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! |
20 |
வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார் நாடுசுடு கமழ்புகை எறித்த லானே! செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே! ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய |
25 |
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி! தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும், மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!, வேண்டும், நின், அப்பாலும், இலக்கியங்கள், போலவும், புறநானூறு, வெங்கதிரும், தண்ணிலவும், கடலுக்கு, உள்ள, பகைவர், மிக்க, உன்னிடம், அவர்களின், ஞாயிறு, உலகம், பெரும, புகழும், சங்க, எட்டுத்தொகை, திறம், கொண்ட, நான்மறை, முனிவர், அத்தை, எதிரே