முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 53. செந்நாவும் சேரன் புகழும்!
புறநானூறு - 53. செந்நாவும் சேரன் புகழும்!
பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி.
முதிர்வார் இப்பி முத்த வார் மணல், கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து, இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற களங்கொள் யானைக், கடுமான், பொறைய! |
5 |
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை கைம்முற் றலநின் புகழே, என்றும்; ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து வாழேம் என்றலும் அரிதே; தாழாது |
10 |
செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன் இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப் பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 53. செந்நாவும் சேரன் புகழும்!, புலவர், இலக்கியங்கள், சேரன், செந்நாவும், தெற்றி, புகழும், நான், புறநானூறு, விளங்கில், கபிலன், மிக்கவன், புகழ், மகளிர், மாந்தரஞ்சேரல், சங்க, எட்டுத்தொகை, பொருந்தில், இளங்கீரனார், இரும்பொறை, ஆடும்