முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 51. ஈசலும் எதிர்ந்தோரும் !
புறநானூறு - 51. ஈசலும் எதிர்ந்தோரும் !
பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை: வாகை.
துறை; அரச வாகை.
குறிப்பு; 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.
நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின், மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி, தண் தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, |
5 |
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே; அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே; நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த செம்புற்று ஈயல் போல, |
10 |
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 51. ஈசலும் எதிர்ந்தோரும் ! , இல்லை, இலக்கியங்கள், ஈசலும், எதிர்ந்தோரும், வரும், புறநானூறு, மன்னர், ஈயல், கொடுத்த, தடுக்க, தமிழ்நாடு, எதிர்த்து, இயலாது, கொண்டி, மிகுந்து, வாழ்க்கைக்கு, ஐயூர், தமிழ், சங்க, எட்டுத்தொகை, வழுதி, வாகை, பொது, ஒருபகல், செம்புற்று, எனப்