முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 47. புலவரைக் காத்த புலவர்!
புறநானூறு - 47. புலவரைக் காத்த புலவர்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
திணை: வஞ்சி.
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது.
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, நெடிய என்னாது சுரம்பல கடந்து, வடியா நாவின் வல்லாங்குப் பாடிப், பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி, ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, |
5 |
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் மண்ணாள் செல்வம் எய்திய |
10 |
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 47. புலவரைக் காத்த புலவர்!, புலவர், இலக்கியங்கள், செல்வர், புறநானூறு, காத்த, புலவரைக், வாழ்க்கை, பரிசில், நாடிச், வீசி, செல்வம், பிறர்க்குத், கொண்ட, சங்க, எட்டுத்தொகை, வஞ்சி, இளந்தத்தன், கடந்து, உண்டு