புறநானூறு - 46. அருளும் பகையும்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வஞ்சி.
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை; இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித், தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்! களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த |
5 |
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி, விருந்திற் புன்கண்நோ வுடையர்; கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 46. அருளும் பகையும்!, இலக்கியங்கள், பகையும், அருளும், புறநானூறு, மருண்டு, கண்டு, உண்ணும், சோழன், சங்க, எட்டுத்தொகை, வஞ்சி