புறநானூறு - 4. தாயற்ற குழந்தை!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.
வாள்,வலந்தர, மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன! தாள், களங்கொளக், கழல் பறைந்தன கொல் ஏற்றின் மருப்புப் போன்றன; தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, |
5 |
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; மாவே, எறிபதத்தான் இடங் காட்டக், கறுழ் பொருத செவ் வாயான், எருத்து வவ்விய புலி போன்றன; களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், |
10 |
நுதி மழுங்கிய வெண் கோட்டான், உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, மாக் கடல் நிவந் தெழுதரும் |
15 |
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ! அனையை ஆகன் மாறே, தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 4. தாயற்ற குழந்தை!, போன்றன, இலக்கியங்கள், குழந்தை, புறநானூறு, தாயற்ற, உயிர், போலக், கொண்ட, தோல், உண்ணும், வாள், எட்டுத்தொகை, சங்க, வெற்றி, செவ், கழல்