முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 392. அமிழ்தம் அன்ன கரும்பு!
புறநானூறு - 392. அமிழ்தம் அன்ன கரும்பு!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
மதிஏர் வெண்குடை அதியர் கோமான் கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான் பசலை நிலவின் பனிபடு விடியல், பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ, |
5 |
உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து, நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து, அணங்குடை மரபின் இருங்களந் தோறும், வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி, வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் |
10 |
வைகல் உழவ! வாழிய பெரிது எனச் சென்றுயான் நின்றனெ னாக, அன்றே, ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத் |
15 |
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல் கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ, ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து அரும்பெறல் அமிழ்த மன்ன |
20 |
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 390 | 391 | 392 | 393 | 394 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 392. அமிழ்தம் அன்ன கரும்பு!, அன்ன, அவன், அமிழ்தம், இலக்கியங்கள், புறநானூறு, கரும்பு, அதியர், எழினி, முறை, தந்தான், உண்ணவேண்டும், கொள்ளும், வழங்கினான், ஒருகண், எட்டுத்தொகை, சங்க, மன்னர், வெள்ளை, வரகும்