முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 39. புகழினும் சிறந்த சிறப்பு!
புறநானூறு - 39. புகழினும் சிறந்த சிறப்பு!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண்.
துறை : இயன்மொழி,
சிறப்பு : வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது.
புறவின் அல்லல் சொல்லிய, கறையடி யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக! ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல் ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் |
5 |
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று, மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால் முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு, |
10 |
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள், கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ! யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு இமையம் சூட்டியஏம விற்பொறி, |
15 |
மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டும்நின் பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 39. புகழினும் சிறந்த சிறப்பு!, இலக்கியங்கள், சிறப்பு, புகழினும், அன்றே, புகழ், அன்று, புகழும், சிறந்த, புறநானூறு, வஞ்சி, வழிவந்தவன், தொலைய, வானவன், சங்க, எட்டுத்தொகை, தூங்கெயில், வெற்றி