முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 386. வேண்டியது உணர்ந்தோன்!
புறநானூறு - 386. வேண்டியது உணர்ந்தோன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்தியல்.
நெடு நீர நிறை கயத்துப் |
5 |
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை ஈத்தோன் எந்தை, இசைதனது ஆக; வயலே நெல்லின் வேலி, நீடிய கரும்பின் |
10 |
பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின; புறவே , புல்லருந்து பல்லா யத்தான், வில்இருந்த வெங்குறும் பின்று; கடலே, கால்தந்த கலம் எண்ணுவோர் கானற் புன்னைச் சினைநிலக் குந்து; |
15 |
கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி, பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து; அன்னநன் நாட்டுப் பொருநம், யாமே; பொரா அப் பொருந ரேம், குணதிசை நின்று குடமுதற் செலினும், |
20 |
வடதிசை நின்று தென்வயிற் செலினும், தென்திசை நின்று குறுகாது நீடினும், யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 384 | 385 | 386 | 387 | 388 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 386. வேண்டியது உணர்ந்தோன்!, வேண்டியது, இலக்கியங்கள், உணர்ந்தோன், புறநானூறு, நின்று, வெள்ளி, தலைவன், நின்றுவிட்டாலும், நிறைந்த, நீர், செலினும், போனாலும், எந்தை, சங்க, எட்டுத்தொகை, நெய், உண்ட, வியர்ப்பு, குந்து