புறநானூறு - 375. பாடன்மார் எமரே!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண் .
துறை: வாழ்த்தியல்.
அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற் பொதியில் ஒருசிறை பள்ளி யாக முழாவரைப் போந்தை அரவாய் மாமடல் நாரும் போழும் கிணையோடு சுருக்கி, |
5 |
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்? எனப் புரசம் தூங்கும் அறாஅ யாணர், வரையணி படப்பை, நன்னாட்டுப் பொருந! |
10 |
பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்! யாவரும் இன்மையின் கிணைப்பத், தாவது, பெருமழை கடல்பரந் தாஅங்கு, யானும் ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால் புலவர் புக்கில் ஆகி, நிலவரை |
15 |
நிலீ இயர் அத்தை, நீயே! ஒன்றே நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து, நிலவன் மாரோ, புரவலர்! துன்னிப், பெரிய ஓதினும் சிறிய உணராப் பீடின்று பெருகிய திருவின், |
20 |
பாடில், மன்னரைப் பாடன்மார் எமரே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 373 | 374 | 375 | 376 | 377 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 375. பாடன்மார் எமரே!, இலக்கியங்கள், பாடன்மார், எமரே, அதனால், புறநானூறு, போன்றோர், எம்மைப், பாடமாட்டார்கள், வாழ்க்கையை, எனவும், பாதுகாப்பவர், புகலிடமாக, சென்று, ஆஅய், கிணையோடு, சங்க, எட்டுத்தொகை, இரந்து, உண்ணும், புரவலர், யார், புலவர்களுக்குப்